சனி, ஜூலை 30, 2011

பங்குச் சந்தை - ஒரு இசுலாமியக் கண்ணோட்டம்...




ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா? என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்! அலசுவோம் வாருங்கள்!
வியாபாரம்
வியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம்
1. தனி நபர் நிறுவனம், 2. கூட்டு நிறுவனம், 3. வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம், 4. பொதுத்துறை நிறுவனம்.
தனி நபர் நிறுவனம் (PROPRIETORSHIP CONCERN) உங்களிடம் 5 இலட்சk; உள்ளது ஒரு நிறுவனத்தை நடத்த விரும்புகிறீர்கள் ஆனால் அந்த நிறுவனத்தின் இலாபம் நட்டம் உங்கள் ஒருவரை மட்டுமே சார்ந்தது காரணம் நீங்கள் நேரடியாக அந்நிறுவனத்தின் முதலாளி ஆகிறீர்கள். நட்டம் ஏற்பட்டால் நீங்கள மட்டுமே நேரடியாக பொறுப்பு , நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கு தெரியும்!
கூட்டு நிறுவனம் (PARTNERSHIP CONCERN)
உங்கள் தனி நபர் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்த 5 இலட்ச ரூபாய் குறைவாக உள்ளது ஆனால் இலாபம் அதிகமாகவும் நட்டம் குறைவாகவும் வரவேண்டும் என்ற எண்ணம் வருகிறது, உடs; உங்கள் நெருங்கியசகோதரரையோ நண்பரையோ உங்கள் வியாபாரத்தில் கூட்டாளியாக்கிக் கொள்கிறீர்கள் இப்போது உங்கள் தனி நபர் நிறுவனம் கூட்டாண்மையாக மாறுகிறது அதே சமயம் உங்கள் கூட்டு நிறுவனம் திவாலானாலோ, கடன் சுமை அதிகரித்தாலோ கூட்டாளிகளாகிய நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட இழக்க நேரிடும்! நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் கூட்டாளியுமே நேரடியாக பொறு ப்பு! மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்கள் இருவருக்கும் தெரியும்!
லிமிடெட் கம்பெனி வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம்)
உங்கள் கூட்டு நிறுவனம் அதாவது பார்ட்னர் சிப் நிறுவனத்தில் நீங்கள் இருவரும் முதலீடு செய்த 10இலட்சம் போதவில்லை முதலீடு 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும் ஆனால் கடன் வாங்கி நட்டம் வந்துவிட்டால் இருவருமே திவாலாகி விடுவீர்கள் என்ற பயம் வருகிறது உடனே நீங்கள் உங்கள் நிறுவனத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றுகிறீர்கள் இப்போது உங்கள் கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் கருதப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் கம்பெனியின் கடனுக்கு நீங்கள் இருவரும் நேரடியாக பொறுப்பாகமாட்டீர்கள்! சரி! உங்களுக்குத் தேவையான 50 இலட்ச ரூபாயை முதலீடு செய்பவர்கள் யார்?நட்டம் யாரை சார்ந்தது என்பதை அறிய வேண்டுமா? அதற்கு கம்பெனியின் கீழ்கண்ட இரு பிரிவுகளை அறிவது ஒன்றே வழி!
A) பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்)
பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் உள்ள பங்குதாரர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் காரணம் லாபம் வெளியே சென்றுவிடக் கூடாதே! அதே சமயம் இந்த பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாது!இந்த வியாபார முறையில் உறவினராகிய உங்கள் பங்குதாரர் தான் இட்ட முதலீட்டின் அளவு வரை மட்டுமே கம்பெனியின் கடன்களுக்குப் பொறுப்பாளியாவார். நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் குடும்ப,நண்பர்களான பங்குதாரர்கள் மட்டுமே நேரடியாக பொறுப்பு! மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கும், குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் நன்றாகவே தெரியும்!
B) பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்)
1000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலை வேண்டும் உலகம் முழுவ தும் உங்கள் பொருட்கள் விற்பனையாக வேண்டும் என்ற ஆசை உங்க ளுக்கும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் வருகிறது அதற்கு 1000 கோடி முதலீடு தேவை ஆனால் முதலீடு செய்ய யாரும் கிடையாது இப்படிப்பட்ட நிலை யில் உங்கள் சொந்த குடும்ப, நண்பர்களுடன் உருவான உங்கள் PRIVATE LTD கம்பெனி உங்களுடைய ஒத்துழைப்புடன் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு PUBLIC LTD கம்பெனியாக மாற்றப்படும். இத்தகைய PUBLIC LTD கம்பெனி பங்குச்சந்தையில் பங்குகளை விற்கமுடியும்.அப்பாவி பொதுமக்கள் உங்கள் நிறும பங்குகளை வாங்குவார்கள்! வாங்கிய 1000 கோடி ரூபாயில் இலாபம் அதிகரித்தால் உங்கள் நிறுவனத்திற்கு பண்ணாட்டு அங்கீகாரம் கிடைக்கும் பேரும் புகழும் தேடி வரும் ஆனால் பெரும் நட்டம் எற்பட்டால் உங்களிடம் முதலீடு செய்த பொதுமக்கள் தலை உருளும்.
ஷேர் மார்க்கெட்! ஷேர் என்பது பங்கு! மார்க்கெட் என்பது சந்தை! முழுவதுமாக கூறுவதாக இருந்தால் பங்குச் சந்தை என்று பொருள். இந்த ஷேர் மார்க்கெட்டில் யார் பங்குகளை வெளியிட முடியும்? யார் வாங்க முடியும் என்பதை பார்ப்போம் வாருங்கள்! பங்குகளை வெளியிடும் அதிகாரம் PUBLIC LTD கம்பெனிக்கு மட்டுமே உரியது. இந்த PUBLIC LTD நிறுவனங்களைத் தவிர வேறு எந்த நிறுவனங்களும் பங்குகளை பொதுமக்கள் முன் வெளியிட முடியாது!சரி பங்குகள் என்றால் என்ன?
பங்கு மற்றும் பங்குதாரர் என்றால் என்ன?
கம்பனிகள் முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.முகம் தெரியாத முதலீட்டாளர்களே பங்குதாரர்கள் அதாவது ஏமாற்ற தகுதி வாய்ந்தவர்கள்! இவர்கள் நீதிமன்றத்தை அணுகினாலும் நீதி கிடைக் காது காரணம் தெரிந்தே கையொப்ப மிடுகிறார்கள் சவக்குழிக்குள் தங்கள் கால்களை நுழைக்கிறார்கள்! சுரண்டலுக்கு சுவையான வியாயபாரம் பங்கு வணிகம்
பங்குசந்தை மோசடிதனி நிறுவனம் இலாப நட்டம் உங்களுக்கு மட்டுமே!
பார்ட்னர் சிப் (கூட்டாண்மை நிறுவனம்)இலாப நட்டம் உங்களுக்கும் உங்கள் கூட்டாளிகளுக்கும்!
பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்) இலாப நட்டம் உங்களுடன் இருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே!
பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்) இலாபம் உங்களுக்கும் நட்டம் உங்களிடம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களுக்கு மட்டுமே!
கூட்டாளி, சொந்த நண்பன் போன்ற முகம் தெரிந்த நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் நட்டம் வந்தால் பொதுவாக அமர்ந்து பேசி இறுதியாக முடிவுக்கு வரலாம் ஆனால் முகம் தெரியாத நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் யாரிடம் சென்று நீதி கேட்பீர்கள்? தூக்குக் கயிறுதான் இன்றைய பங்குதாரர்களின் இறுதி முடிவாக உள்ளது! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.
முஸ்லீம்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யலாமா?
ஷேர் மார்க்கெட் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?
நீங்கள் ரூபாய் 10 இலட்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஒரு பங்கு நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பங்குதாரர் என்ற வகையில் உங்களால் என்ன பதில் தர இயலும்
1. உங்கள் முதலீட்டை வைத்துக்கொண்டு ஹலாலான முறைப்படி அந்த நிறுவனம் பொருள் உற்பத்தி செய்து ஹலாலான முறையில் விற்பனை செய்கிறதா?
2. இன்று எத்தனையோ குளிர்பாணங்கள் சந்தையில் உள்ளன அவற்றில் ஒருவகையான பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படு வதாகவும் அதை குடித்தால் மக்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படுவதாகவும் எத்தனையோ ஆய்வறிக்கைகள் வெளியிடப்படுகின்றன இப்படிப்பட்ட நிலையில் அந்த நிறும பங்குதாரர் என்ற அடிப்படையில் நீங்களும் உடந்தைதானே?
3. நீங்கள் 10 இலட்சத்திற்கு பங்குகளை வாங்கி 15 இலட்சத்திற்கு விற்கறீர்கள் அதே நேரம் 15 இலட்சத்திற்கு உங்கள் சகோதரர் பங்குகளை வாங்குகிறார் ஆனால் 10 இலட்சத்திற்கு பங்கு மதிப்பு குறைகிறது நட்டம் ஏற்படுகிறது! இது எந்தவகை வியாபாரம்?
4. ஒரு நிறுமத்தில் நீங்கள் பங்குதாரர் என்று வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆலோசனைகளை அவர்கள் ஏற்பார்களா?
5. உங்கள் பங்கு நிறுமம் தொழில் நடத்த ஒருபக்கம் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கியும் மற்றொரு பக்கம் உங்கள் பங்கு முதலீட்டை பெற்றும் தொழில் நடத்தும் இப்போது பங்குதாரர் என்ற முறையில் நீங்களும் வட்டி வாங்க உடந்தைதானே?
6. எந்த ஒரு நிறுவனமும் குறைந்தது 10 துணை நிறுவனங் களையாவது வைத்திருக்கும் அவற்றில் மதுபாண தயாரிப்பு, மதுபான விற்பனை போன்ற துணை நிறுவனங்கள் இருக்கத்தான் செய்யும். இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர நீங்கள் உதவி செய்வீர்களா?
காசுக்கு காசு மற்றும் திர்ஹமுக்கு திர்ஹம் ஒரு தொழிலா?
பங்குச் சந்தையில் 10 இலடசம் முதலீடு செய்து 15 இலட்சம் பெறுவதாக இருந்தால் அது காசுக்கு காசை விற்கும் தொழில் அல்லவா அப்படியானால் இதோ கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்
தாவூஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள்!" என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார். ‘அது எவ்வாறு?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு ''உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்" என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி 2138 Volume:2 Book:34)
அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!" என்று கூறினார்கள். (ஸஹீஹுல்புகாரி 2080. Volume:2 Book:34)
வியாபாரத்தில் பெருந்தன்மை கடைபிடிக்க வேண்டும்!
பங்குகளை வாங்குகிறீர்கள், விற்கிறீர்கள் இவற்றிற்கு இடையில் ஒருவருக்கு இலாபமும் மற்றொருவருக்கு ஏமாற்றமும்தான் மிஞ்சும் இப்படிப்பட்ட நிலையில் நிறுவனம் பெருந்தன்மையாக நடக்காமல் போனால் அந்த தொழிலில் அல்லாஹ்வின் அருள் கிடைக்காதே! அல்லாஹ்வின் அருள் கிடைக்காத வணிகம் நமக்கு எதற்கு?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருநதன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2076. Volume:2 Book:34)
வியாபாரத்தில் உண்மையை கடைபிடிக்க வேண்டும்!
பங்கு வணிகத்தில் உண்மை பேசி வியாபாரம் நடைபெற்றால் பரவாயில்லை மாறாக ஒவ்வொரு தொலைக்காட்சி விளம்பரத்திலும் அடுக்கடுக்கான பொய்தான் வருகிறது. உதாரணமாக வெயில் காலங்களில் ஒருவகை பவுடர் விளம்பரம் செய்யப்படும் அதை தடவிக்கொண்டால் பனிக்கட்டியின் குளுமை கிடைக்கும் என்பார்கள் உண்மையில் அப்படி குளுமை கிடைக்கிறதா?
ஒரு பைக் விளம்பரம் வரும் அதில் 140கி.மி. வேகத்தில் கடற்கரையில் பறந்து டைவ் அடிப்பதை போன்று காட்டுவார்கள் அது போன்று கடற்கரையில் உங்களால் பறக்க முடியுமா?
பபுல்கம் (சிவிங்கம்) விளம்பரம் வரும் அதை சாப்பிட்டால் மாடுகளின் பற்கள் கூட பளிச்சிடும் என்பார்கள் அவ்வாறு நடக்குமா?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு!அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்க ளின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!" என ஹகீம் இப்னு ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2079. Volume:2 Book:34)
நட்டம் வரும் என்பதை அறிந்தே ஏமாற கூடாது!
பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தை தான் காண்பார்கள் ஏதோ ஒரு சிலர் இலாபம் காண்பார்கள். பங்கு வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை என்பதை தெரிந்தே அதில் நுழையலாமா?முஸ்லிம்கள் பொதுவாக ஏமாறவும் கூடாது, ஏமாற்றவும் கூடாது என்பதை அறிவுறுத்தும் நபிமொழி
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால்‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!" என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)" என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி 2117 Volume:2 Book:34)
வேண்டுமென்றே விலை ஏற்றுவதற்காக தரகர்களை நியமிப்பது கூடாது
பங்குதாரர்களுக்கும், பங்கு நிறுமத்திற்கும் இடையில் இருப்பவர்கள் இடைத்தரகர் கள் ஆவார்கள். இவர்கள் தான் பங்குகளின் விலை உயர்வுக்கும் விலை குறைப் புக்கும் மூலகாரணமாகிறார்கள். இந்த இடைத்தரகர்களில் ஒருவன்தான் உலகம் அறிந்த ஹர்சத்மேத்தா அவன் செய்த ஊழல் உங்களுக்குத் தெரியாதா என்ன? இப்படிப்பட்ட விலை ஏற்றத்தையும் அதற்கான இடைத்தரகர்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வேண்டாம் என்று தடுத்தது நம்முடைய மார்க்கம் இஸ்லாம். ஆதாரம் வேண்டுமா? கீழே உள்ளது படியுங்கள்!
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; "கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற் காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியா பாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்தார்கள்!" (ஸஹீஹுல் புகாரி 2140 Volume:2 Book:34)

thanks kamaal.



ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா? என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்! அலசுவோம் வாருங்கள்!
வியாபாரம்
வியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம்
1. தனி நபர் நிறுவனம், 2. கூட்டு நிறுவனம், 3. வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம், 4. பொதுத்துறை நிறுவனம்.
தனி நபர் நிறுவனம் (PROPRIETORSHIP CONCERN) உங்களிடம் 5 இலட்சk; உள்ளது ஒரு நிறுவனத்தை நடத்த விரும்புகிறீர்கள் ஆனால் அந்த நிறுவனத்தின் இலாபம் நட்டம் உங்கள் ஒருவரை மட்டுமே சார்ந்தது காரணம் நீங்கள் நேரடியாக அந்நிறுவனத்தின் முதலாளி ஆகிறீர்கள். நட்டம் ஏற்பட்டால் நீங்கள மட்டுமே நேரடியாக பொறுப்பு , நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கு தெரியும்!
கூட்டு நிறுவனம் (PARTNERSHIP CONCERN)
உங்கள் தனி நபர் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்த 5 இலட்ச ரூபாய் குறைவாக உள்ளது ஆனால் இலாபம் அதிகமாகவும் நட்டம் குறைவாகவும் வரவேண்டும் என்ற எண்ணம் வருகிறது, உடs; உங்கள் நெருங்கியசகோதரரையோ நண்பரையோ உங்கள் வியாபாரத்தில் கூட்டாளியாக்கிக் கொள்கிறீர்கள் இப்போது உங்கள் தனி நபர் நிறுவனம் கூட்டாண்மையாக மாறுகிறது அதே சமயம் உங்கள் கூட்டு நிறுவனம் திவாலானாலோ, கடன் சுமை அதிகரித்தாலோ கூட்டாளிகளாகிய நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட இழக்க நேரிடும்! நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் கூட்டாளியுமே நேரடியாக பொறு ப்பு! மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்கள் இருவருக்கும் தெரியும்!
லிமிடெட் கம்பெனி வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம்)
உங்கள் கூட்டு நிறுவனம் அதாவது பார்ட்னர் சிப் நிறுவனத்தில் நீங்கள் இருவரும் முதலீடு செய்த 10இலட்சம் போதவில்லை முதலீடு 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும் ஆனால் கடன் வாங்கி நட்டம் வந்துவிட்டால் இருவருமே திவாலாகி விடுவீர்கள் என்ற பயம் வருகிறது உடனே நீங்கள் உங்கள் நிறுவனத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றுகிறீர்கள் இப்போது உங்கள் கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் கருதப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் கம்பெனியின் கடனுக்கு நீங்கள் இருவரும் நேரடியாக பொறுப்பாகமாட்டீர்கள்! சரி! உங்களுக்குத் தேவையான 50 இலட்ச ரூபாயை முதலீடு செய்பவர்கள் யார்?நட்டம் யாரை சார்ந்தது என்பதை அறிய வேண்டுமா? அதற்கு கம்பெனியின் கீழ்கண்ட இரு பிரிவுகளை அறிவது ஒன்றே வழி!
A) பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்)
பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் உள்ள பங்குதாரர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் காரணம் லாபம் வெளியே சென்றுவிடக் கூடாதே! அதே சமயம் இந்த பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாது!இந்த வியாபார முறையில் உறவினராகிய உங்கள் பங்குதாரர் தான் இட்ட முதலீட்டின் அளவு வரை மட்டுமே கம்பெனியின் கடன்களுக்குப் பொறுப்பாளியாவார். நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் குடும்ப,நண்பர்களான பங்குதாரர்கள் மட்டுமே நேரடியாக பொறுப்பு! மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கும், குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் நன்றாகவே தெரியும்!
B) பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்)
1000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலை வேண்டும் உலகம் முழுவ தும் உங்கள் பொருட்கள் விற்பனையாக வேண்டும் என்ற ஆசை உங்க ளுக்கும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் வருகிறது அதற்கு 1000 கோடி முதலீடு தேவை ஆனால் முதலீடு செய்ய யாரும் கிடையாது இப்படிப்பட்ட நிலை யில் உங்கள் சொந்த குடும்ப, நண்பர்களுடன் உருவான உங்கள் PRIVATE LTD கம்பெனி உங்களுடைய ஒத்துழைப்புடன் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு PUBLIC LTD கம்பெனியாக மாற்றப்படும். இத்தகைய PUBLIC LTD கம்பெனி பங்குச்சந்தையில் பங்குகளை விற்கமுடியும்.அப்பாவி பொதுமக்கள் உங்கள் நிறும பங்குகளை வாங்குவார்கள்! வாங்கிய 1000 கோடி ரூபாயில் இலாபம் அதிகரித்தால் உங்கள் நிறுவனத்திற்கு பண்ணாட்டு அங்கீகாரம் கிடைக்கும் பேரும் புகழும் தேடி வரும் ஆனால் பெரும் நட்டம் எற்பட்டால் உங்களிடம் முதலீடு செய்த பொதுமக்கள் தலை உருளும்.
ஷேர் மார்க்கெட்! ஷேர் என்பது பங்கு! மார்க்கெட் என்பது சந்தை! முழுவதுமாக கூறுவதாக இருந்தால் பங்குச் சந்தை என்று பொருள். இந்த ஷேர் மார்க்கெட்டில் யார் பங்குகளை வெளியிட முடியும்? யார் வாங்க முடியும் என்பதை பார்ப்போம் வாருங்கள்! பங்குகளை வெளியிடும் அதிகாரம் PUBLIC LTD கம்பெனிக்கு மட்டுமே உரியது. இந்த PUBLIC LTD நிறுவனங்களைத் தவிர வேறு எந்த நிறுவனங்களும் பங்குகளை பொதுமக்கள் முன் வெளியிட முடியாது!சரி பங்குகள் என்றால் என்ன?
பங்கு மற்றும் பங்குதாரர் என்றால் என்ன?
கம்பனிகள் முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.முகம் தெரியாத முதலீட்டாளர்களே பங்குதாரர்கள் அதாவது ஏமாற்ற தகுதி வாய்ந்தவர்கள்! இவர்கள் நீதிமன்றத்தை அணுகினாலும் நீதி கிடைக் காது காரணம் தெரிந்தே கையொப்ப மிடுகிறார்கள் சவக்குழிக்குள் தங்கள் கால்களை நுழைக்கிறார்கள்! சுரண்டலுக்கு சுவையான வியாயபாரம் பங்கு வணிகம்
பங்குசந்தை மோசடிதனி நிறுவனம் இலாப நட்டம் உங்களுக்கு மட்டுமே!
பார்ட்னர் சிப் (கூட்டாண்மை நிறுவனம்)இலாப நட்டம் உங்களுக்கும் உங்கள் கூட்டாளிகளுக்கும்!
பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்) இலாப நட்டம் உங்களுடன் இருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே!
பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்) இலாபம் உங்களுக்கும் நட்டம் உங்களிடம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களுக்கு மட்டுமே!
கூட்டாளி, சொந்த நண்பன் போன்ற முகம் தெரிந்த நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் நட்டம் வந்தால் பொதுவாக அமர்ந்து பேசி இறுதியாக முடிவுக்கு வரலாம் ஆனால் முகம் தெரியாத நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் யாரிடம் சென்று நீதி கேட்பீர்கள்? தூக்குக் கயிறுதான் இன்றைய பங்குதாரர்களின் இறுதி முடிவாக உள்ளது! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.
முஸ்லீம்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யலாமா?
ஷேர் மார்க்கெட் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?
நீங்கள் ரூபாய் 10 இலட்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஒரு பங்கு நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பங்குதாரர் என்ற வகையில் உங்களால் என்ன பதில் தர இயலும்
1. உங்கள் முதலீட்டை வைத்துக்கொண்டு ஹலாலான முறைப்படி அந்த நிறுவனம் பொருள் உற்பத்தி செய்து ஹலாலான முறையில் விற்பனை செய்கிறதா?
2. இன்று எத்தனையோ குளிர்பாணங்கள் சந்தையில் உள்ளன அவற்றில் ஒருவகையான பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படு வதாகவும் அதை குடித்தால் மக்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படுவதாகவும் எத்தனையோ ஆய்வறிக்கைகள் வெளியிடப்படுகின்றன இப்படிப்பட்ட நிலையில் அந்த நிறும பங்குதாரர் என்ற அடிப்படையில் நீங்களும் உடந்தைதானே?
3. நீங்கள் 10 இலட்சத்திற்கு பங்குகளை வாங்கி 15 இலட்சத்திற்கு விற்கறீர்கள் அதே நேரம் 15 இலட்சத்திற்கு உங்கள் சகோதரர் பங்குகளை வாங்குகிறார் ஆனால் 10 இலட்சத்திற்கு பங்கு மதிப்பு குறைகிறது நட்டம் ஏற்படுகிறது! இது எந்தவகை வியாபாரம்?
4. ஒரு நிறுமத்தில் நீங்கள் பங்குதாரர் என்று வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆலோசனைகளை அவர்கள் ஏற்பார்களா?
5. உங்கள் பங்கு நிறுமம் தொழில் நடத்த ஒருபக்கம் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கியும் மற்றொரு பக்கம் உங்கள் பங்கு முதலீட்டை பெற்றும் தொழில் நடத்தும் இப்போது பங்குதாரர் என்ற முறையில் நீங்களும் வட்டி வாங்க உடந்தைதானே?
6. எந்த ஒரு நிறுவனமும் குறைந்தது 10 துணை நிறுவனங் களையாவது வைத்திருக்கும் அவற்றில் மதுபாண தயாரிப்பு, மதுபான விற்பனை போன்ற துணை நிறுவனங்கள் இருக்கத்தான் செய்யும். இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர நீங்கள் உதவி செய்வீர்களா?
காசுக்கு காசு மற்றும் திர்ஹமுக்கு திர்ஹம் ஒரு தொழிலா?
பங்குச் சந்தையில் 10 இலடசம் முதலீடு செய்து 15 இலட்சம் பெறுவதாக இருந்தால் அது காசுக்கு காசை விற்கும் தொழில் அல்லவா அப்படியானால் இதோ கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்
தாவூஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள்!" என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார். ‘அது எவ்வாறு?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு ''உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்" என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி 2138 Volume:2 Book:34)
அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!" என்று கூறினார்கள். (ஸஹீஹுல்புகாரி 2080. Volume:2 Book:34)
வியாபாரத்தில் பெருந்தன்மை கடைபிடிக்க வேண்டும்!
பங்குகளை வாங்குகிறீர்கள், விற்கிறீர்கள் இவற்றிற்கு இடையில் ஒருவருக்கு இலாபமும் மற்றொருவருக்கு ஏமாற்றமும்தான் மிஞ்சும் இப்படிப்பட்ட நிலையில் நிறுவனம் பெருந்தன்மையாக நடக்காமல் போனால் அந்த தொழிலில் அல்லாஹ்வின் அருள் கிடைக்காதே! அல்லாஹ்வின் அருள் கிடைக்காத வணிகம் நமக்கு எதற்கு?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருநதன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2076. Volume:2 Book:34)
வியாபாரத்தில் உண்மையை கடைபிடிக்க வேண்டும்!
பங்கு வணிகத்தில் உண்மை பேசி வியாபாரம் நடைபெற்றால் பரவாயில்லை மாறாக ஒவ்வொரு தொலைக்காட்சி விளம்பரத்திலும் அடுக்கடுக்கான பொய்தான் வருகிறது. உதாரணமாக வெயில் காலங்களில் ஒருவகை பவுடர் விளம்பரம் செய்யப்படும் அதை தடவிக்கொண்டால் பனிக்கட்டியின் குளுமை கிடைக்கும் என்பார்கள் உண்மையில் அப்படி குளுமை கிடைக்கிறதா?
ஒரு பைக் விளம்பரம் வரும் அதில் 140கி.மி. வேகத்தில் கடற்கரையில் பறந்து டைவ் அடிப்பதை போன்று காட்டுவார்கள் அது போன்று கடற்கரையில் உங்களால் பறக்க முடியுமா?
பபுல்கம் (சிவிங்கம்) விளம்பரம் வரும் அதை சாப்பிட்டால் மாடுகளின் பற்கள் கூட பளிச்சிடும் என்பார்கள் அவ்வாறு நடக்குமா?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு!அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்க ளின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!" என ஹகீம் இப்னு ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி 2079. Volume:2 Book:34)
நட்டம் வரும் என்பதை அறிந்தே ஏமாற கூடாது!
பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தை தான் காண்பார்கள் ஏதோ ஒரு சிலர் இலாபம் காண்பார்கள். பங்கு வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை என்பதை தெரிந்தே அதில் நுழையலாமா?முஸ்லிம்கள் பொதுவாக ஏமாறவும் கூடாது, ஏமாற்றவும் கூடாது என்பதை அறிவுறுத்தும் நபிமொழி
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; ''ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால்‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!" என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)" என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி 2117 Volume:2 Book:34)
வேண்டுமென்றே விலை ஏற்றுவதற்காக தரகர்களை நியமிப்பது கூடாது
பங்குதாரர்களுக்கும், பங்கு நிறுமத்திற்கும் இடையில் இருப்பவர்கள் இடைத்தரகர் கள் ஆவார்கள். இவர்கள் தான் பங்குகளின் விலை உயர்வுக்கும் விலை குறைப் புக்கும் மூலகாரணமாகிறார்கள். இந்த இடைத்தரகர்களில் ஒருவன்தான் உலகம் அறிந்த ஹர்சத்மேத்தா அவன் செய்த ஊழல் உங்களுக்குத் தெரியாதா என்ன? இப்படிப்பட்ட விலை ஏற்றத்தையும் அதற்கான இடைத்தரகர்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வேண்டாம் என்று தடுத்தது நம்முடைய மார்க்கம் இஸ்லாம். ஆதாரம் வேண்டுமா? கீழே உள்ளது படியுங்கள்!
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்; "கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற் காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியா பாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்தார்கள்!" (ஸஹீஹுல் புகாரி 2140 Volume:2 Book:34)

thanks kamaal.

தெளிவான சொல்...



1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!


16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.




பின்பற்ற எனக்கும் ஆசை தான்....




1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!


16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.




பின்பற்ற எனக்கும் ஆசை தான்....


பத்மனாப சாமி கோயில்...தஙகக் கருவுலம்.

பத்மனாப சாமி கோயில்...தஙகக் கருவுலம்.
சமிபத்தில் திறக்கப்பட்ட இதன் 6 அறைகள் இந்திய பண் மதிப்பீட்டில் ரூபாய் 1 லட்ச்ம் கோடி மதிப்பிலான பொற்க்குவியல்கல் கண்டறியப்பட்டன.
1லட்சம் பொற்காசுகள்.
விலை மதிக்க முடியாத அரிய கற்கள்.
இந்திர நீலம், பெல்ஜிய வைரம் பச்சை மரகதம், மற்றும் மாணிக்கங்கள்....
1200 சரப்பொளி மாலைகள்
தங்க கிரீடஙகள்
400 எண்ணம் தங நெக்லேசுகள் மரகதம் பொருத்தியது.
2000 க்கும் அதிகமான பொன்னாபரனங்கள்
தங்க தாம்பாளஙள்.
பொன்னாலான வில்.
பொர்ப்பதக்கங்கள்
4 அடி நீளமான மரகதக்கற்கள் இழைத்த தங்க விஷ்ணு சிலை.














































பத்மனாப சாமி கோயில்...தஙகக் கருவுலம்.
சமிபத்தில் திறக்கப்பட்ட இதன் 6 அறைகள் இந்திய பண் மதிப்பீட்டில் ரூபாய் 1 லட்ச்ம் கோடி மதிப்பிலான பொற்க்குவியல்கல் கண்டறியப்பட்டன.
1லட்சம் பொற்காசுகள்.
விலை மதிக்க முடியாத அரிய கற்கள்.
இந்திர நீலம், பெல்ஜிய வைரம் பச்சை மரகதம், மற்றும் மாணிக்கங்கள்....
1200 சரப்பொளி மாலைகள்
தங்க கிரீடஙகள்
400 எண்ணம் தங நெக்லேசுகள் மரகதம் பொருத்தியது.
2000 க்கும் அதிகமான பொன்னாபரனங்கள்
தங்க தாம்பாளஙள்.
பொன்னாலான வில்.
பொர்ப்பதக்கங்கள்
4 அடி நீளமான மரகதக்கற்கள் இழைத்த தங்க விஷ்ணு சிலை.














































வெள்ளி, ஜூலை 29, 2011

நழுவும் உயிர் - ஒரு விபத்து நிகழ்கிறது


இந்தூரில் பதல் பாணி எனும் இடத்தில் காணப்படும் ஒரு நீர் விழ்ச்சியில் நிகழ்கின்ற விபத்து. கண் முன்னே அசையும் பிம்பமாக உயிருடன் சுற்றுலா தலத்தில் வளம் வரும் ஒரு குழு ஆர்ப்பரித்து வரும் நிரோடு அடித்துச் செல்லப்படும் ஒரு காட்சி. இந்த நீர் விழ்ச்சி திருக் குற்றாலம் போல ஒரு குறிப்பிட்ட மதத்தாரின் புனித தலமாக கருதப்படுகிறது. இதன் ஆழம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 Indore - Patal Pani is one of the popular excursions from Indore. The tourists travel 36 kilometers to watch the waters of the Patal Pani waterfalls. Patal Pani is one of the exotic waterfalls that is situated at a distance of 36 kilometers from Indore. The waterfall breaks at an altitude of 150 feet. The waters accumulate in a Kund which is sacred to the local people. The depth of the kund is still unknown. It is believed that the waters travel down to a depth that reaches hell which is referred to as Patal in Hindi. The tourists may travel from Indore to Patal Pani in buses that ply in the region at regular intervals. The tourists may also avail hired cars that take the tourists from Indore to Patal Pani. 

இந்தூரில் பதல் பாணி எனும் இடத்தில் காணப்படும் ஒரு நீர் விழ்ச்சியில் நிகழ்கின்ற விபத்து. கண் முன்னே அசையும் பிம்பமாக உயிருடன் சுற்றுலா தலத்தில் வளம் வரும் ஒரு குழு ஆர்ப்பரித்து வரும் நிரோடு அடித்துச் செல்லப்படும் ஒரு காட்சி. இந்த நீர் விழ்ச்சி திருக் குற்றாலம் போல ஒரு குறிப்பிட்ட மதத்தாரின் புனித தலமாக கருதப்படுகிறது. இதன் ஆழம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 Indore - Patal Pani is one of the popular excursions from Indore. The tourists travel 36 kilometers to watch the waters of the Patal Pani waterfalls. Patal Pani is one of the exotic waterfalls that is situated at a distance of 36 kilometers from Indore. The waterfall breaks at an altitude of 150 feet. The waters accumulate in a Kund which is sacred to the local people. The depth of the kund is still unknown. It is believed that the waters travel down to a depth that reaches hell which is referred to as Patal in Hindi. The tourists may travel from Indore to Patal Pani in buses that ply in the region at regular intervals. The tourists may also avail hired cars that take the tourists from Indore to Patal Pani. 

வியாழன், ஜூலை 28, 2011

புண்ணியம் சூல்கொண்ட நிலவு..





தித்திக்கும் திருமறையை திருநபிக்கு அருளிய 
எத்திக்கும் புகழ் மணக்கும் இனிய ரமலானே வா 
சங்கைமிகு லைலத்துல் கதிர் இரவைக் கைபிடித்து 
ஷஅபானைப் புறந்தள்ளி சாந்தி ரமலானே நீ வா

மானுடம் செழிக்கவும் மனித நேயம் காக்கவும் 
மாநிலத்தில் ஏழை படும் பசித்துயரை காட்டவே 
பசித்து இறைநேசம் வேண்டி கசிந்துருகி கைகளேந்தி 
விசித்து அழும் எமது பாவம் நீக்க நீயும் ஓடிவா... 

இபுலிசை விலங்கிட்டு இன்னல்கள் விலகியோட
ஜன்னத்தின் தாழ் திறந்து சந்தனமணம் பரப்ப வா 
சோதி முகம் காட்டி வா நிதி நிலை நாட்ட வா 
நாதியற்ற எங்களுக்கு நன்மை வாரிச் சொரிய வா 

நகக்குறி முகங்காட்டி அகத்திடை இருள் நீக்க 
செகத்தினில் பிறப்பெடுத்து செங்கமலப் பூவிதழே வா 
தூய கலிமா வழியில் துயர் நீங்கி இன்பம் பொங்க 
நாயன் வழி நான் நடக்க நன்மை பயக்க வா ......

கடமை ஐந்து கணக்கிலுண்டு அதிலிரண்டு உன்னடக்கம்
மடமை போக்க நோன்பு ஜக்காத் மடியில்கட்டி நீயும் வா 
கூன்பிறையே குளிர்நிலவே குவலயத்தின் மணிவிளக்கே
கண்விழித்து காத்துநின்றோம் எம் கல்பு குளிர வா...
.




தித்திக்கும் திருமறையை திருநபிக்கு அருளிய 
எத்திக்கும் புகழ் மணக்கும் இனிய ரமலானே வா 
சங்கைமிகு லைலத்துல் கதிர் இரவைக் கைபிடித்து 
ஷஅபானைப் புறந்தள்ளி சாந்தி ரமலானே நீ வா

மானுடம் செழிக்கவும் மனித நேயம் காக்கவும் 
மாநிலத்தில் ஏழை படும் பசித்துயரை காட்டவே 
பசித்து இறைநேசம் வேண்டி கசிந்துருகி கைகளேந்தி 
விசித்து அழும் எமது பாவம் நீக்க நீயும் ஓடிவா... 

இபுலிசை விலங்கிட்டு இன்னல்கள் விலகியோட
ஜன்னத்தின் தாழ் திறந்து சந்தனமணம் பரப்ப வா 
சோதி முகம் காட்டி வா நிதி நிலை நாட்ட வா 
நாதியற்ற எங்களுக்கு நன்மை வாரிச் சொரிய வா 

நகக்குறி முகங்காட்டி அகத்திடை இருள் நீக்க 
செகத்தினில் பிறப்பெடுத்து செங்கமலப் பூவிதழே வா 
தூய கலிமா வழியில் துயர் நீங்கி இன்பம் பொங்க 
நாயன் வழி நான் நடக்க நன்மை பயக்க வா ......

கடமை ஐந்து கணக்கிலுண்டு அதிலிரண்டு உன்னடக்கம்
மடமை போக்க நோன்பு ஜக்காத் மடியில்கட்டி நீயும் வா 
கூன்பிறையே குளிர்நிலவே குவலயத்தின் மணிவிளக்கே
கண்விழித்து காத்துநின்றோம் எம் கல்பு குளிர வா...
.

புதன், ஜூலை 27, 2011

வேதனை சொல்வேன் தோழி...



நிழல்தரா மரமுண்டோ தோழி விண்ணில் 
நீரில்லா மேகமும்தா னுண்டோ சொல் 
விதைமுளைக்கா வெட்டை வீதியாக்கி இறைவன் 
விதியாலே சதிசெய்தான் பார் 

மென்மலர் பிஞ்சுஒன்று மேன்மையாய் என்வயிற்றில் 
வந்துயென்வாட்டம் போக்கி வளர்ந்துயென்செல்வம் காக்கும் 
என்றுநான் எண்ணியெண்ணி ஏமாந்து நொந்தேன் தோழி 
இன்றுநான் வாழ்வதேன் சொல்

மல்லிகைப் பந்தலிட்டேன் மலருக்குப் பஞ்சமின்றி 
அல்லியும் ஆம்பலும் என் அகத்திடை அணிவகுக்க  
மலர்க்கூட்டம் மங்கையென்னை மனம்சேர மகிழ்வித்தாலும்
மழலையில்லை என்மடியில் காண்
    
பிள்ளையில்லையென்றதொரு பெருந்துயர் தவிர்த்து என்னில் 
கொள்ளைநோய் ஏதுமில்லை கொடியறுந்து வீழ்வதற்க்கு
வெள்ளையாய் உள்ளம் உண்டு வேதனை சிந்தச்சிந்த
கிள்ளை மொழியாளே பார்

குழலினும் இனிதுயென்பர் குழவியின் கன்னல்மொழி  
கழல்தனில் கொலுசு பூட்டி களிக்கவே குதித்துஓடும்   
அழல்வண்ணச்சிறுவாய் சிந்தும் புன்னகை காணாதின்று
விழலாச்சுதே என் வாழ்வு  


நிழல்தரா மரமுண்டோ தோழி விண்ணில் 
நீரில்லா மேகமும்தா னுண்டோ சொல் 
விதைமுளைக்கா வெட்டை வீதியாக்கி இறைவன் 
விதியாலே சதிசெய்தான் பார் 

மென்மலர் பிஞ்சுஒன்று மேன்மையாய் என்வயிற்றில் 
வந்துயென்வாட்டம் போக்கி வளர்ந்துயென்செல்வம் காக்கும் 
என்றுநான் எண்ணியெண்ணி ஏமாந்து நொந்தேன் தோழி 
இன்றுநான் வாழ்வதேன் சொல்

மல்லிகைப் பந்தலிட்டேன் மலருக்குப் பஞ்சமின்றி 
அல்லியும் ஆம்பலும் என் அகத்திடை அணிவகுக்க  
மலர்க்கூட்டம் மங்கையென்னை மனம்சேர மகிழ்வித்தாலும்
மழலையில்லை என்மடியில் காண்
    
பிள்ளையில்லையென்றதொரு பெருந்துயர் தவிர்த்து என்னில் 
கொள்ளைநோய் ஏதுமில்லை கொடியறுந்து வீழ்வதற்க்கு
வெள்ளையாய் உள்ளம் உண்டு வேதனை சிந்தச்சிந்த
கிள்ளை மொழியாளே பார்

குழலினும் இனிதுயென்பர் குழவியின் கன்னல்மொழி  
கழல்தனில் கொலுசு பூட்டி களிக்கவே குதித்துஓடும்   
அழல்வண்ணச்சிறுவாய் சிந்தும் புன்னகை காணாதின்று
விழலாச்சுதே என் வாழ்வு  

எதை வேண்டுமானாலும் சரி செய்யலாம். இப்படி...

அட... கரண்டி தானுங்க...
சீட் பெல்டு அந்து போச்சாம்...
கார் ஸ்டிரியோவ சுட்டுட்டாங்க...
புக் செல்ஃப் வளசல நிமித்திட்டோம்லா 
அசல் ஜி பி யெஸ் அசத்தலா இல்ல..
ஏ டி எம் ஸ்கிரீன் இப்ப தெளிவா தெரியுமில்ல...
ஷிடியரிங்க் சைடு ஒரு பிரச்னையா...
செம மழ பெஞ்சாலும் சிக்னலு சூப்பர்...
எலக்ட்ரிக் ஸ்டவ்வு புட்டுக்கிச்சு! காபி....
எக்ஷ்ஸாஸ்ட் பைப்பு ரோட்ல இழுக்காம இருக்கத்தான் 
புட்டிப் பாலூட்டவும் சோம்பலா இருந்தா 
கேபிள் கீழே நழுவாமல் தடுக்க...
டையபரையும் நாசம் பண்றானா? 

அட... கரண்டி தானுங்க...
சீட் பெல்டு அந்து போச்சாம்...
கார் ஸ்டிரியோவ சுட்டுட்டாங்க...
புக் செல்ஃப் வளசல நிமித்திட்டோம்லா 
அசல் ஜி பி யெஸ் அசத்தலா இல்ல..
ஏ டி எம் ஸ்கிரீன் இப்ப தெளிவா தெரியுமில்ல...
ஷிடியரிங்க் சைடு ஒரு பிரச்னையா...
செம மழ பெஞ்சாலும் சிக்னலு சூப்பர்...
எலக்ட்ரிக் ஸ்டவ்வு புட்டுக்கிச்சு! காபி....
எக்ஷ்ஸாஸ்ட் பைப்பு ரோட்ல இழுக்காம இருக்கத்தான் 
புட்டிப் பாலூட்டவும் சோம்பலா இருந்தா 
கேபிள் கீழே நழுவாமல் தடுக்க...
டையபரையும் நாசம் பண்றானா? 

செவ்வாய், ஜூலை 26, 2011

வனப்பு மிக்க வாழைக்குலை



சிங்காரத் தோட்டமொன்றில் 
சிறுமரத்தில் விளைந்த குலை
சித்திரம் வரைந்தார்ப் போல்
சிந்தையை மயக்குதடா

நில மங்கை அவள்மடியில்
நின்ற மரம் ஈந்தகுலை 
நீண்டதொரு சாட்டை போல்
நில்லாமல் வளர்நத தம்மா...

வாழைக்குலை இது தான் 
மரம் வழியாய் மலர்வளர்ந்து  
மலர்ந்த அதன் குலைபணிந்து  
நிலம் தொட்ட நீ ...ண்ட

வனப்புள்ள அதன் தாயை 
வசதியாய் மறைக்கும் குலை  
வந்தவரை எண்ணச்சொன்னால்...
வட்டம் சுற்றி வீழ்ந்திடுவார்.

தொங்காத குலை இது 
தொட்டுத் தாழ்பணிகிறது 
பங்கு உமக்கு வேணுமெனில் 
பல பைகள் தேவைப்படும்

நிறைமதி பெற்ற மாந்தர்
நிலம் நோக்கி பணிவதுபோல்
நிறைந்த கனிக்குலையிதுவும் 
நிதர்சனம் காட்டுதிங்கே...





சிங்காரத் தோட்டமொன்றில் 
சிறுமரத்தில் விளைந்த குலை
சித்திரம் வரைந்தார்ப் போல்
சிந்தையை மயக்குதடா

நில மங்கை அவள்மடியில்
நின்ற மரம் ஈந்தகுலை 
நீண்டதொரு சாட்டை போல்
நில்லாமல் வளர்நத தம்மா...

வாழைக்குலை இது தான் 
மரம் வழியாய் மலர்வளர்ந்து  
மலர்ந்த அதன் குலைபணிந்து  
நிலம் தொட்ட நீ ...ண்ட

வனப்புள்ள அதன் தாயை 
வசதியாய் மறைக்கும் குலை  
வந்தவரை எண்ணச்சொன்னால்...
வட்டம் சுற்றி வீழ்ந்திடுவார்.

தொங்காத குலை இது 
தொட்டுத் தாழ்பணிகிறது 
பங்கு உமக்கு வேணுமெனில் 
பல பைகள் தேவைப்படும்

நிறைமதி பெற்ற மாந்தர்
நிலம் நோக்கி பணிவதுபோல்
நிறைந்த கனிக்குலையிதுவும் 
நிதர்சனம் காட்டுதிங்கே...



பல்லிடுக்கில் ஒரு பாக்குத்துண்டு


குமரிப் பருவம் அடைந்த மாணவிகளுக்கு பாடம் நடத்துவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். பனிரெண்டாம் நிலையில் பயிலும் மாணவிகள் 17 வயதைல் இருப்பார்கள். இவர்களின் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் ஆண் ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் இவர்களை அன்பொழுகத்தான் நடத்த முடியும் காரணம் இவர்கள் ஏதாவது ஏடாகூடமாக வீட்டிலோ வெளியிலோ ஆசிரியரைப்பற்றி சொல்லிவிட்டால் அது மிகப் பெரிய இழப்பு ஏற்படுத்தும்.
இம்மாணவிகள் என்னைப் பொறுத்த வரையில் மூன்று பிரிவாகக்கொள்ளலாம்,
முதலாவதாக இவர்களில் நன்றாக படிக்கக் கூடிய ஆசிரியரை மதிக்கும் பண்புள்ள கற்றுக்கொள்ள ஆர்வமுடைய மாணவி,இவள் படிப்பு தவிற சினிமா தொலைக்காட்சி போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை தனது உடை ஆபரணம் மற்றும் அலங்கரிப்பதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.இவர்கள் தான் அந்த வகுப்பில் ஆசிரியர் திறமையாக பாடம் நடத்த ஒரு உயிரோட்டமாக இருக்கிறார்கள்.இவர்களால் எந்தப்பிரச்சினையும் இல்லை..
இரண்டாவதாக வரும் மாணவிகள் இவர்கள் முதலாவதான மாணவிகளின் கூட்டத்தில் காணப் படுவார்கள்...நன்றாகப் படிப்பார்கள் 70 80 மதிப்பெண்கள் வாங்கும் திறமையுடையவர்கள்.ஆசிரியரையும்  அவ்ரது பர்சனல் விஷயங்களையும் அவரிடம் கேட்பதும் அவரிடம் பிரியம் காட்டுவதும் அவர் திறமையான பாடம் சொல்லி என்று அவரிடம் முகத்துக்கு எதிரில் முகமன் சொல்லுவதும் பள்ளிக்கு வரும்போது அல்ங்கரித்துக் கொண்டு வருவதும் அவசியம் இல்லாமல் நகைகள் அணிந்திருப்பதும் பொழுதுபோக்கு விஷயங்களில் டி‌வி சினிமா நடிகர் நடிகையர் பற்றிய அப்டேட்டில் இருப்பார்கள். 
என்ன போரடிக்கிறேனா?
கொஞ்சம் பின்னால படியுங்களேன் ஒரு முக்கியமான் மேட்டர் சொல்ல வேண்டியிருக்கு...
இந்த இரண்டாமத்தவர்கள் ஆசிரியருக்கு மிகவும் ஆபத்தானவர்கள்...
இப்படித்தான் எனது ஒன்பது ஆண்டு கால ஆசிரிய அனுபவத்தில் நடந்த சம்பவம் ஒன்று...
வழக்கம் போல ஒரு நாள் மதிய பாட வேளை இறுதி வகுப்புகள் செய்முறைக்கானது (பிராக்டிகல்) மதியம் மூன்று மணிக்குப் பிறகு நான்கு இருபது வரை.மாணவிகள் தங்களின் பிராக்டிக்கல் வகுப்புக்கு கூடத்திற்கு வந்தனர். அன்று வழக்கம் போல அவர்களுக்கு ஒரு வேதி உப்புக் கலவை தரப்பட்டு அதன் பண்புகளை பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிந்து உப்பின் பெயரை சொல்வது தான் சோதனை. எனவே பயிற்சியில் இருப்பவர்களுடன் அவர்களின் சோதனைக்கு உதவிக்கொண்டு பம்பரமாய் சுற்றி வந்து கொண்டிருந்தேன்...
ஆய்வுக்கூடம் பள்ளியின் வகுப்பறைகளை விட்டு துண்டானது. 
சிறிது நேரம் கழித்து என் இடத்தில் வந்து அமர்ந்து புத்தகத்தை விரித்தபோது ஒரு கடிதம் போன்ற அழகான கையெழுத்துடனான ஒரு தாள்.
படித்தேன்
சார் 
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அருமையாகப் படம் நடத்துகிறீர்கள். எனக்கு ரெம்ப பிடிக்கும்.நீங்கள் என்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நான் மிகவும் தடுமாற்றம் அடைகிறேன். என்னை உங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் என்னிடம் இப்போது சரியாகப் பேசமாட்டேன்கிறீர்கள்.நீங்கள் இல்லையென்றால் நான் செத்துவிடுவேன். நான் என் பெயரை குறிப்பிட மாட்டேன்.என்னை நீங்கள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றால் நான் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் கவனியுங்கள் சுவிட்ச் போர்டுக்கு அருகில்...
அதிர்ந்து போனேன் வியர்த்து விட்டது. மூன்று பிள்ளைகள் இரண்டு பெண் மக்கள் உள்ளடக்கம் கொண்ட குடும்பத்தின் தகப்பன் நான்.ஊரில் சொந்த ஊரில் உள்ள ஒரு மகள் அந்தஸ்தில் என்னிடம் பயிலும் மாணவியின் கடிதம் படித்து முடித்தவுடன் கால்கள் நடுங்கியது...
இப்போது தயக்கத்துடன் அந்த குறிப்பிட்ட திசையை இடத்தைப் பார்த்தேன்.அவள் நல்ல ரேங்க் எடுக்கும் ஒரு மாணவி.வெளிநாட்டில் நல்ல பதவியில் இருந்து குடும்பத்தை வளப்படுத்தும் என் நண்பரின் மகள் தான்.அவளது தந்தைய்ன் திருமணத்தில் நானும் ஒரு மாபிள்ளைத் தோழன் !
கேவலமான ஒரு நிகழ்வு..எப்படி இந்த பிரச்னையில் இருந்து விடுபடப் போகிறேன்... 
மனம் சரியில்லை வேறு மாணவிகள் யாருக்காவது தெரியுமா? பயத்துடன் கண்கள் அலைபாய்ந்தது.... அப்படி ஒன்றும் என்னால் கணிக்க முடியவில்லை.
வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேலையாக என் அறையில் சென்று கட்டிலில் படுத்துவிட்டேன் முடங்கிவிட்டேன்...மாணவர்களின் வகுப்பில் லீடர் வந்தான் 6.30 மணியானதால் சார் உடம்புக்கு சரியில்லையா? ஸ்பெஷல் வகுப்பில் அனைவரும் காத்திருந்துவிட்டு நீங்கள் வரவில்லையென்பதால் கேட்க வந்தேன் என்றான். இல்லைப்பா உடம்பு முடியவில்லை எல்லோரையும் போகச்சொல்லி வகுப்பை பூட்டி விடு நாளை பார்ப்போம்.
தனது பள்ளி விட்டு வந்த மனைவி (வேறு பள்ளி) அருகில் வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு என்ன உடம்பு? ஏதாகிலும் பிரச்னையா?
நடுங்கும் கைகளில் மடித்திருந்த தாளை எடுத்து மனைவியிடம் தந்தேன். 
படித்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தவள் எழுந்திரிங்க உங்க வேலையைப் பாருங்க கிழிச்சுப் போட்டு வேறு வேலையைப்பாக்காம இப்படி இதுக்குப் போயி பயந்து படுத்துட்டீங்களே?
(ஆளு யாரு என்று இன்று வரை கேட்கவில்லை)
நாளைக்கு வழக்கம் போல வகுப்புக்குப் போயி பாடம் நடத்துங்கள், இது மேலும் தொடர்ந்தால் பேசலாம். சரியெனப்பட்டது. தூக்கம் வரவில்லை. பள்ளிக்குப் போனேன் நிர்வாகிக்கு சலாம் சொன்னேன். 
முதல் பாடவேளை மாணவர்களுக்கானது, இரண்டாவது பாட வேளை 11 ஆம் வகுப்பு மாணவிகள் பாடம் முடிந்த பிறகு இடைவேளை கழிந்து அந்த வகுப்புக்குப் போனேன். இப்போது கொஞ்சம் கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்டு ஒரு நான்கு 10 மதிப்பெண் வினாக்கள் (ஏற்கெனவே நடத்தியது) 15 நிமிடங்கள் திருப்புதல் செய்ய அனுமதித்து அவற்றை எழுதிக்காட்ட வேண்டும் என அறிவித்தேன்.
மாணவிகள் தயாராயினர். குறிப்பிட்ட நேரத்தில் எழுதத் தொடங்கிவிட்டனர்.
மனசு படபடத்தது. இன்று கொஞ்சம் தெளிவாக இருந்தேன். ஒவ்வொருவராகப் பார்ப்பது போல் அவள் அருகிலும் சென்றேன். பேப்பரை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்து போனேன். ஒன்றுமே எழுதவில்லை. அவளால் எழுத முடியும் ,ஏற்கெனவே எழுதியிருக்கிறாள். கொஞ்சம் சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டேன். 
நீ படிக்க வார மாதிரியா வாறே..சும்மா தேவையில்லாமல் எதையாவது வகுப்பில் பேசிக்கிட்டு இருக்கதும், பாடத்தில் அக்கறையில்லாமல் குழம்பிக்கிட்டு ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்க. இது உனக்கு மரியாதை இல்ல..ஒழுங்கா இல்லன்னா தூக்கிப் போட்டு மிதிச்சிருவேன்...என்ன எழுதியிருக்க நீ? வெறும் வெள்ளப் பேப்பர கையில் வச்சிருக்கே? உங்க வாப்பாட்ட பேசவா? ஒடிந்து போனாள். கண்ணில் தழும்பி நின்ற நீர் கரை உடைத்து அவளது உதட்டில் பட்டது. இனம் புரியாத ஒரு கவலையில் பதட்டத்தில் அவளை தள்ளினேன்.
இப்போது மற்றவர்கள் பேப்பர்களை வாங்கி வைத்துக்கொண்டு என் பணியைத்தொடர்ந்தேன். நேரம் வந்ததும் விடை பெற்றேன்.
தொடர்ந்து நான்கு நாட்களாக பள்ளிக்கு அந்த மாணவி வரவில்லை..வகுப்பில் இதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. சாதாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து வராவிட்டால் நிர்வாகத்திற்க்கு தெரிவிப்பது வகுப்பாசிரியர் கடமையாதலால் தெரிவிக்கப்பட்டது.நிர்வாகி என்னை தனியாக சந்திக்கும்படி சொன்னார். உதறியது. ஏதாவது தெரிந்திருக்குமோ? நிர்வாகி எனக்கு உறவு முறையில் மாமா முறை ஆதலால் கண்ணியமாகப் பழகுவார். 
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது முகம் கொடுப்போம் என்ன நடக்கிறது பார்ப்போம்.
மாலையில் சந்தித்தோம். அப்பாடா ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அவள் பள்ளியை விட்டு நின்று விட்டாளாம். நான் கடுகையாக நடந்து கொண்டேனா என்று கேட்டார். நான் எல்லோரையும் போலத்தான் அவளிடம் நடந்து கொண்டேன் என்று சொன்ன பிறகு, என்னை அவளது வீட்டில் சென்று பெற்றோரை வைத்துக்கொண்டு பேசி சமாதானப்படுத்தி பள்ளிக்கு வரக் கேட்கும்படி சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு. மறுநாள் என் மனைவியிடமும் சொல்லிவிட்டு அவள் வீட்டில் அவளது தாயார் மற்றும் பாட்டி இருக்கையில் பேசினேன். பள்ளிக்கு வரச்சொன்னேன் வருவதாக சொன்ன மாணவி அதன் பிறகு வரவே இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் அந்த மாணவிக்கும் மட்டுமே தெரிந்த இந்த ஒரு உள் நிகழ்வு முழுக்க முழுக்க மனதை விட்டு அகன்றுவிட்டது.
என்றாலும் ஒரு நல்ல மாணவியின் படிப்பு இடை நின்று போன வருத்தம் என் மனதில் அப்பப்போ வந்து அறுக்கத்தான் செய்கிறது. 
இங்க இறக்கி வச்சிட்டேன் பாரம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு...

குமரிப் பருவம் அடைந்த மாணவிகளுக்கு பாடம் நடத்துவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். பனிரெண்டாம் நிலையில் பயிலும் மாணவிகள் 17 வயதைல் இருப்பார்கள். இவர்களின் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் ஆண் ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் இவர்களை அன்பொழுகத்தான் நடத்த முடியும் காரணம் இவர்கள் ஏதாவது ஏடாகூடமாக வீட்டிலோ வெளியிலோ ஆசிரியரைப்பற்றி சொல்லிவிட்டால் அது மிகப் பெரிய இழப்பு ஏற்படுத்தும்.
இம்மாணவிகள் என்னைப் பொறுத்த வரையில் மூன்று பிரிவாகக்கொள்ளலாம்,
முதலாவதாக இவர்களில் நன்றாக படிக்கக் கூடிய ஆசிரியரை மதிக்கும் பண்புள்ள கற்றுக்கொள்ள ஆர்வமுடைய மாணவி,இவள் படிப்பு தவிற சினிமா தொலைக்காட்சி போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை தனது உடை ஆபரணம் மற்றும் அலங்கரிப்பதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.இவர்கள் தான் அந்த வகுப்பில் ஆசிரியர் திறமையாக பாடம் நடத்த ஒரு உயிரோட்டமாக இருக்கிறார்கள்.இவர்களால் எந்தப்பிரச்சினையும் இல்லை..
இரண்டாவதாக வரும் மாணவிகள் இவர்கள் முதலாவதான மாணவிகளின் கூட்டத்தில் காணப் படுவார்கள்...நன்றாகப் படிப்பார்கள் 70 80 மதிப்பெண்கள் வாங்கும் திறமையுடையவர்கள்.ஆசிரியரையும்  அவ்ரது பர்சனல் விஷயங்களையும் அவரிடம் கேட்பதும் அவரிடம் பிரியம் காட்டுவதும் அவர் திறமையான பாடம் சொல்லி என்று அவரிடம் முகத்துக்கு எதிரில் முகமன் சொல்லுவதும் பள்ளிக்கு வரும்போது அல்ங்கரித்துக் கொண்டு வருவதும் அவசியம் இல்லாமல் நகைகள் அணிந்திருப்பதும் பொழுதுபோக்கு விஷயங்களில் டி‌வி சினிமா நடிகர் நடிகையர் பற்றிய அப்டேட்டில் இருப்பார்கள். 
என்ன போரடிக்கிறேனா?
கொஞ்சம் பின்னால படியுங்களேன் ஒரு முக்கியமான் மேட்டர் சொல்ல வேண்டியிருக்கு...
இந்த இரண்டாமத்தவர்கள் ஆசிரியருக்கு மிகவும் ஆபத்தானவர்கள்...
இப்படித்தான் எனது ஒன்பது ஆண்டு கால ஆசிரிய அனுபவத்தில் நடந்த சம்பவம் ஒன்று...
வழக்கம் போல ஒரு நாள் மதிய பாட வேளை இறுதி வகுப்புகள் செய்முறைக்கானது (பிராக்டிகல்) மதியம் மூன்று மணிக்குப் பிறகு நான்கு இருபது வரை.மாணவிகள் தங்களின் பிராக்டிக்கல் வகுப்புக்கு கூடத்திற்கு வந்தனர். அன்று வழக்கம் போல அவர்களுக்கு ஒரு வேதி உப்புக் கலவை தரப்பட்டு அதன் பண்புகளை பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிந்து உப்பின் பெயரை சொல்வது தான் சோதனை. எனவே பயிற்சியில் இருப்பவர்களுடன் அவர்களின் சோதனைக்கு உதவிக்கொண்டு பம்பரமாய் சுற்றி வந்து கொண்டிருந்தேன்...
ஆய்வுக்கூடம் பள்ளியின் வகுப்பறைகளை விட்டு துண்டானது. 
சிறிது நேரம் கழித்து என் இடத்தில் வந்து அமர்ந்து புத்தகத்தை விரித்தபோது ஒரு கடிதம் போன்ற அழகான கையெழுத்துடனான ஒரு தாள்.
படித்தேன்
சார் 
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அருமையாகப் படம் நடத்துகிறீர்கள். எனக்கு ரெம்ப பிடிக்கும்.நீங்கள் என்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நான் மிகவும் தடுமாற்றம் அடைகிறேன். என்னை உங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் என்னிடம் இப்போது சரியாகப் பேசமாட்டேன்கிறீர்கள்.நீங்கள் இல்லையென்றால் நான் செத்துவிடுவேன். நான் என் பெயரை குறிப்பிட மாட்டேன்.என்னை நீங்கள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றால் நான் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் கவனியுங்கள் சுவிட்ச் போர்டுக்கு அருகில்...
அதிர்ந்து போனேன் வியர்த்து விட்டது. மூன்று பிள்ளைகள் இரண்டு பெண் மக்கள் உள்ளடக்கம் கொண்ட குடும்பத்தின் தகப்பன் நான்.ஊரில் சொந்த ஊரில் உள்ள ஒரு மகள் அந்தஸ்தில் என்னிடம் பயிலும் மாணவியின் கடிதம் படித்து முடித்தவுடன் கால்கள் நடுங்கியது...
இப்போது தயக்கத்துடன் அந்த குறிப்பிட்ட திசையை இடத்தைப் பார்த்தேன்.அவள் நல்ல ரேங்க் எடுக்கும் ஒரு மாணவி.வெளிநாட்டில் நல்ல பதவியில் இருந்து குடும்பத்தை வளப்படுத்தும் என் நண்பரின் மகள் தான்.அவளது தந்தைய்ன் திருமணத்தில் நானும் ஒரு மாபிள்ளைத் தோழன் !
கேவலமான ஒரு நிகழ்வு..எப்படி இந்த பிரச்னையில் இருந்து விடுபடப் போகிறேன்... 
மனம் சரியில்லை வேறு மாணவிகள் யாருக்காவது தெரியுமா? பயத்துடன் கண்கள் அலைபாய்ந்தது.... அப்படி ஒன்றும் என்னால் கணிக்க முடியவில்லை.
வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேலையாக என் அறையில் சென்று கட்டிலில் படுத்துவிட்டேன் முடங்கிவிட்டேன்...மாணவர்களின் வகுப்பில் லீடர் வந்தான் 6.30 மணியானதால் சார் உடம்புக்கு சரியில்லையா? ஸ்பெஷல் வகுப்பில் அனைவரும் காத்திருந்துவிட்டு நீங்கள் வரவில்லையென்பதால் கேட்க வந்தேன் என்றான். இல்லைப்பா உடம்பு முடியவில்லை எல்லோரையும் போகச்சொல்லி வகுப்பை பூட்டி விடு நாளை பார்ப்போம்.
தனது பள்ளி விட்டு வந்த மனைவி (வேறு பள்ளி) அருகில் வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு என்ன உடம்பு? ஏதாகிலும் பிரச்னையா?
நடுங்கும் கைகளில் மடித்திருந்த தாளை எடுத்து மனைவியிடம் தந்தேன். 
படித்துவிட்டு என்னையும் ஒரு பார்வை பார்த்தவள் எழுந்திரிங்க உங்க வேலையைப் பாருங்க கிழிச்சுப் போட்டு வேறு வேலையைப்பாக்காம இப்படி இதுக்குப் போயி பயந்து படுத்துட்டீங்களே?
(ஆளு யாரு என்று இன்று வரை கேட்கவில்லை)
நாளைக்கு வழக்கம் போல வகுப்புக்குப் போயி பாடம் நடத்துங்கள், இது மேலும் தொடர்ந்தால் பேசலாம். சரியெனப்பட்டது. தூக்கம் வரவில்லை. பள்ளிக்குப் போனேன் நிர்வாகிக்கு சலாம் சொன்னேன். 
முதல் பாடவேளை மாணவர்களுக்கானது, இரண்டாவது பாட வேளை 11 ஆம் வகுப்பு மாணவிகள் பாடம் முடிந்த பிறகு இடைவேளை கழிந்து அந்த வகுப்புக்குப் போனேன். இப்போது கொஞ்சம் கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்டு ஒரு நான்கு 10 மதிப்பெண் வினாக்கள் (ஏற்கெனவே நடத்தியது) 15 நிமிடங்கள் திருப்புதல் செய்ய அனுமதித்து அவற்றை எழுதிக்காட்ட வேண்டும் என அறிவித்தேன்.
மாணவிகள் தயாராயினர். குறிப்பிட்ட நேரத்தில் எழுதத் தொடங்கிவிட்டனர்.
மனசு படபடத்தது. இன்று கொஞ்சம் தெளிவாக இருந்தேன். ஒவ்வொருவராகப் பார்ப்பது போல் அவள் அருகிலும் சென்றேன். பேப்பரை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்து போனேன். ஒன்றுமே எழுதவில்லை. அவளால் எழுத முடியும் ,ஏற்கெனவே எழுதியிருக்கிறாள். கொஞ்சம் சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டேன். 
நீ படிக்க வார மாதிரியா வாறே..சும்மா தேவையில்லாமல் எதையாவது வகுப்பில் பேசிக்கிட்டு இருக்கதும், பாடத்தில் அக்கறையில்லாமல் குழம்பிக்கிட்டு ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்க. இது உனக்கு மரியாதை இல்ல..ஒழுங்கா இல்லன்னா தூக்கிப் போட்டு மிதிச்சிருவேன்...என்ன எழுதியிருக்க நீ? வெறும் வெள்ளப் பேப்பர கையில் வச்சிருக்கே? உங்க வாப்பாட்ட பேசவா? ஒடிந்து போனாள். கண்ணில் தழும்பி நின்ற நீர் கரை உடைத்து அவளது உதட்டில் பட்டது. இனம் புரியாத ஒரு கவலையில் பதட்டத்தில் அவளை தள்ளினேன்.
இப்போது மற்றவர்கள் பேப்பர்களை வாங்கி வைத்துக்கொண்டு என் பணியைத்தொடர்ந்தேன். நேரம் வந்ததும் விடை பெற்றேன்.
தொடர்ந்து நான்கு நாட்களாக பள்ளிக்கு அந்த மாணவி வரவில்லை..வகுப்பில் இதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. சாதாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து வராவிட்டால் நிர்வாகத்திற்க்கு தெரிவிப்பது வகுப்பாசிரியர் கடமையாதலால் தெரிவிக்கப்பட்டது.நிர்வாகி என்னை தனியாக சந்திக்கும்படி சொன்னார். உதறியது. ஏதாவது தெரிந்திருக்குமோ? நிர்வாகி எனக்கு உறவு முறையில் மாமா முறை ஆதலால் கண்ணியமாகப் பழகுவார். 
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது முகம் கொடுப்போம் என்ன நடக்கிறது பார்ப்போம்.
மாலையில் சந்தித்தோம். அப்பாடா ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அவள் பள்ளியை விட்டு நின்று விட்டாளாம். நான் கடுகையாக நடந்து கொண்டேனா என்று கேட்டார். நான் எல்லோரையும் போலத்தான் அவளிடம் நடந்து கொண்டேன் என்று சொன்ன பிறகு, என்னை அவளது வீட்டில் சென்று பெற்றோரை வைத்துக்கொண்டு பேசி சமாதானப்படுத்தி பள்ளிக்கு வரக் கேட்கும்படி சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு. மறுநாள் என் மனைவியிடமும் சொல்லிவிட்டு அவள் வீட்டில் அவளது தாயார் மற்றும் பாட்டி இருக்கையில் பேசினேன். பள்ளிக்கு வரச்சொன்னேன் வருவதாக சொன்ன மாணவி அதன் பிறகு வரவே இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் அந்த மாணவிக்கும் மட்டுமே தெரிந்த இந்த ஒரு உள் நிகழ்வு முழுக்க முழுக்க மனதை விட்டு அகன்றுவிட்டது.
என்றாலும் ஒரு நல்ல மாணவியின் படிப்பு இடை நின்று போன வருத்தம் என் மனதில் அப்பப்போ வந்து அறுக்கத்தான் செய்கிறது. 
இங்க இறக்கி வச்சிட்டேன் பாரம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு...

ஞாயிறு, ஜூலை 24, 2011

புத்தகங்களை மறந்த மாணவர்கள்...









மச்சீர் பாடநூல்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு விநியோகிக்கவில்லை. சமச்சீர் நூல்களை விநியோகிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டது.
“சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாட நூல்களை உடனே விநியோகிப்பதுடன், வகுப்புகளைத் தொடங்குவதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்; ஆகஸ்டு 2 ஆம் தேதிக்குள் புத்தக விநியோகத்தை முடித்து விட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் ஜூலை 21 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. தமிழக அரசோ இந்தக் கணம் வரை மாணவர்களுக்கு பாடநூல்களைக் கொடுக்கவில்லை.
பாடநூல்களை அடுக்கி வைத்திருக்கும் டி.இ.ஓ அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து“எங்களுக்கு பாடநூலைக் கொடு” என்று விருத்தாசலம் மேனிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அதற்கும் அரசு அசையவில்லை. உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக் காட்டினாலும், எங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.
“ஜூலை 26 அன்று டில்லி உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது. தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவும் அமையக் கூடும். முடிவு தெரிவதற்கு முன்னால் அவசரப்பட்டு சமச்சீர் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என்று அம்மா எண்ணியிருப்பார்” என்று விளக்கம் கூறினார் ஒரு அதிமுக அல்லக்கை.
அம்மாவின் சிந்தனை குறித்த அல்லக்கையின் கணிப்பில் தவறேதும் இல்லை. ஆனால் தான் செய்யவிருப்பது என்ன என்ற உண்மையை அம்மா, உள்ளது உள்ளபடியே நீதிமன்றத்தில் ஏன் உரைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.
“மை லார்ட், கேஸ் முடியும்வரை நாங்கள் புத்தகங்களை கொடுப்பதாக இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்காமல், “விநியோகிப்பதற்கு அவகாசம் வேண்டும்” என்று அங்கே ஏன் பொய்யுரைக்க வேண்டும்? இங்கே புத்தக கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் வாசலில் உட்கார்ந்து “புத்தகத்தைக் கொடு” என்று கேட்கும் பள்ளி மாணவர்களை, போலீசை வைத்து ஏன் துரத்த வேண்டும்?
அம்மாவின் கணக்குப்படி தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வருவதாகவே இருக்கட்டும். அதற்கு முன்னால் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவர்கள் அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?
அம்மா நியமித்த வல்லுநர்கள் கூட சமச்சீர் பாடப்புத்தகங்கள் “தரமானதாக இல்லை” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய்! படம் தரமா, தரமில்லையா என்பதை மாணவர்கள் தீர்மானிப்பார்கள். படச்சுருளை மாணவர்களின் கண்ணிலேயே காட்டாமல் பெட்டியிலேயே பூட்டி வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டுவதற்கு, அது என்ன “மாமனாரின் இன்ப லீலைகள்” சினிமாவா?
அந்தப் புத்தகங்களை மாணவர்களின் கண்ணில் காட்டுவதற்கே அம்மாவின் அரசாங்கம் ஏன் அஞ்சி நடுங்குகிறது? இணைய தளத்திலிருந்து அவற்றை ஏன் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறது? “சமச்சீர் கல்வி என்ற வார்த்தையையே ஆசிரியர்கள் உச்சரிக்க கூடாது” என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் சுற்ற்றிக்கை அனுப்பி மிரட்டுவது ஏன்?
அது சமச்சீர் புத்தகமா, இல்லை, சரோஜாதேவி புத்தகமா?
தரமில்லை என்பது இந்த அரசாங்கத்தின் கருத்து. அதுவே அறுதி உண்மை அல்ல. சமச்சீர் புத்தகங்கள் தரமா தரமில்லையா என்று வல்லுநர் படித்துப் பார்ப்பார், நீதிபதி படித்துப் பார்ப்பார், எவன் வேண்டுமானாலும் பார்ப்பான், மாணவர்கள் மட்டும் அந்தப் புதுப் பாடநூல்களை ஆசையாகத் தொட்டு..முகர்ந்து பார்க்கக் கூடாதா?
அந்த நூலைத் தொட்டாலே மாணவர்களுடைய தரம் வீழ்ந்து விடுமா?
தரமில்லாத ஒரு ரூவா அரிசிச் சோற்றைத் தின்று, தரமில்லாத அரசுப் பேருந்துகளில் தொங்கி, தரமில்லாத அரசுப்பள்ளிகளில் படிக்கும் “தரமில்லாத” ஏழை மாணவர்கள், அந்த தரமில்லாத பாடநூல்களை ஒரு முறை புரட்டித்தான் பார்க்கட்டுமே! என்ன கெட்டுவிடும்?
ஒருவேளை உச்ச நீதிமன்றம் அம்மாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து விட்டால், 200 கோடி செலவு செய்து அம்மா அச்சடித்து வைத்திருக்கும் பழைய பாடத்திட்ட நூல்களையும் மாணவர்களிடம் விநியோகிக்கட்டும்!
“இனிமேல் இதுதான் பாடநூல். ஏற்கெனவே கொடுத்த சமச்சீர் பாடநூல்களை எடைக்குப் போட்டுவிடுங்கள்” என்று மாணவர்களிடம் அறிவிக்கட்டும்! அதில் என்ன நட்டம்? எல்லா புத்தகத்தையும் மொத்தமாக அரசாங்கமே பழைய பேப்பருக்குப் போடுவதற்குப் பதிலாக, தனித்தனியாக மாணவர்கள் போடப்போகிறார்கள். மேற்படி பழைய பேப்பர் விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயை அரசு இழக்க நேரிடும் என்பதைத் தவிர வேறென்ன நட்டம்?
“சமச்சீர் பாடநூல்கள் தரமற்றவை, அவை கருணாநிதியின் குடும்ப விளம்பரங்கள்” என்ற அம்மாவின் கூற்று உண்மையாயின், அந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு படிக்கத் தருவதன் மூலம் தானே கருணாநிதியின் முகத்திரையைக் கிழிக்க முடியும்?
“கருணாநிதியின் முகத்திரையை மாணவர்களிடம் கிழித்துக் காட்டிய பிறகு, புத்தகங்களையெல்லாம் கிழித்து தீ வைத்துக் கொளுத்த வேண்டும்” என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டால், அவர்கள் என்ன மறுக்கவா போகிறார்கள்? வள்ளுவனின் முகத்திலேயே பசை தடவிக் காகிதம் ஒட்டக் கூசாத அந்தக் கைகள், கொளுத்துவதற்கா தயங்கும்?
சமச்சீர் பாட நூல்களைப் பற்றி அவர்கள் செய்து வரும் பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரம். அந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றை மாணவர்கள் புரட்டிப் படித்து விட்டால், மாணவர்கள் அவற்றை விரும்பத் தொடங்கிவிடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறது.
அரசைப் பொருத்தவரை இது வெறும் பாடநூல் பிரச்சினை மட்டும் அல்ல. அந்தப் பாடநூல்களை மாணவர்கள் கையில் கொடுத்து விட்டால், “அம்மா கொடுத்த புத்தகமா, அய்யா கொடுத்த புத்தகமா எது சிறந்த பாடநூல்?” என்ற விவாதம் தவிர்க்க இயலாமல் தொடங்கி விடும். மாணவர்களின் முடிவு அம்மாவுக்கு சாதகமாக இருக்காது என்றும் அரசு அஞ்சுகிறது.
“அம்மா அய்யா ” பிரச்சினையோடும் இந்த விவகாரம் முடிந்து விடாது. எந்தப் பாடநூல் நன்றாக இருக்கிறது, ஏன் நன்றாக இருக்கிறது என்று யோசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை வழங்குவது என்பது, புலிக்கு ரத்த வாடை காட்டுவதற்கு நிகரானது என்று அஞ்சுகின்றன அரசும் ஆளும் வர்க்கமும்.
பாடநூல் பற்றியும், பாடத்திட்டம் பற்றியும் விவாதிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுவிட்டால் -
தரம், பாடத்திட்டம், பயிற்று முறை ஆகியவையெல்லாம் மாணவர்களும் பெற்றோரும் கருத்துக் கூறமுடியாத, அவர்களுடைய புத்திக்கு எட்டாத பிரம்ம ரகஸ்யங்கள் போலவும், அவற்றைப் பற்றி ஒப்பீனியன் ஷொல்லணுமானால் அவாள் மிஸஸ் ஒய்.ஜி.பி யாகவோ, மிஸ்டர் சோ ராமஸ்வாமியாகவோ இருந்தாகவேண்டும் என்றும் அவர்கள் டெவலப் பண்ணி வைத்திருக்கும் கதைகளும், கொடுத்து வரும் பில்டப்புகளும் உடைந்து விடும் என்பது இந்தக் கும்பலின் அச்சம்.
அதனால்தான் 1.25 கோடி மாணவர்களின் தலைவிதியோடு சம்மந்தப்பட்ட சமச்சீர் பாடநூல்களை மக்கள் மன்றத்தில் திறந்து காட்ட இந்த அரசு மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றுகிறது. ஆசிரியர்களை மிரட்டுகிறது. அறிவைப் பூட்டி வைத்து காவலுக்கு ஆயுத போலீசை நிறுத்தி வைக்கிறது.
 இந்த அரசு
தனியார் கல்விக் கொள்ளையர்களின் புரவலன்.
மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் கூட்டாளி.
இலவசக் கல்வியின் எதிரி.
“பாடநூலைக் கொடுக்க முடியாது” என்று மறுக்கும் அரசுக்கு,
“பள்ளிக்குச் செல்” என்று ஆணையிடும் உரிமை கிடையாது!
“வா” என்றால் வருவதற்கும், “போ” என்றால் போவதற்கும்
ஆடு மாடுகள் அல்ல மாணவர்கள்;
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!
சமச்சீர் கல்வியை முடக்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து,
சமச்சீர் பாடநூல்களை விநியோகிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு விட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.
பாடநூல்களை விநியோகிக்காமல் மாணவர் சமுதாயத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த அரசை திங்களன்றே (ஜூலை 25) வீதிக்கு இழுப்போம்!
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!
____________________________________________________________
ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.
நன்றி வினவு 








மச்சீர் பாடநூல்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு விநியோகிக்கவில்லை. சமச்சீர் நூல்களை விநியோகிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டது.
“சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாட நூல்களை உடனே விநியோகிப்பதுடன், வகுப்புகளைத் தொடங்குவதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்; ஆகஸ்டு 2 ஆம் தேதிக்குள் புத்தக விநியோகத்தை முடித்து விட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் ஜூலை 21 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. தமிழக அரசோ இந்தக் கணம் வரை மாணவர்களுக்கு பாடநூல்களைக் கொடுக்கவில்லை.
பாடநூல்களை அடுக்கி வைத்திருக்கும் டி.இ.ஓ அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து“எங்களுக்கு பாடநூலைக் கொடு” என்று விருத்தாசலம் மேனிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அதற்கும் அரசு அசையவில்லை. உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக் காட்டினாலும், எங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.
“ஜூலை 26 அன்று டில்லி உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது. தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவும் அமையக் கூடும். முடிவு தெரிவதற்கு முன்னால் அவசரப்பட்டு சமச்சீர் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என்று அம்மா எண்ணியிருப்பார்” என்று விளக்கம் கூறினார் ஒரு அதிமுக அல்லக்கை.
அம்மாவின் சிந்தனை குறித்த அல்லக்கையின் கணிப்பில் தவறேதும் இல்லை. ஆனால் தான் செய்யவிருப்பது என்ன என்ற உண்மையை அம்மா, உள்ளது உள்ளபடியே நீதிமன்றத்தில் ஏன் உரைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.
“மை லார்ட், கேஸ் முடியும்வரை நாங்கள் புத்தகங்களை கொடுப்பதாக இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்காமல், “விநியோகிப்பதற்கு அவகாசம் வேண்டும்” என்று அங்கே ஏன் பொய்யுரைக்க வேண்டும்? இங்கே புத்தக கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் வாசலில் உட்கார்ந்து “புத்தகத்தைக் கொடு” என்று கேட்கும் பள்ளி மாணவர்களை, போலீசை வைத்து ஏன் துரத்த வேண்டும்?
அம்மாவின் கணக்குப்படி தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வருவதாகவே இருக்கட்டும். அதற்கு முன்னால் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவர்கள் அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?
அம்மா நியமித்த வல்லுநர்கள் கூட சமச்சீர் பாடப்புத்தகங்கள் “தரமானதாக இல்லை” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய்! படம் தரமா, தரமில்லையா என்பதை மாணவர்கள் தீர்மானிப்பார்கள். படச்சுருளை மாணவர்களின் கண்ணிலேயே காட்டாமல் பெட்டியிலேயே பூட்டி வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டுவதற்கு, அது என்ன “மாமனாரின் இன்ப லீலைகள்” சினிமாவா?
அந்தப் புத்தகங்களை மாணவர்களின் கண்ணில் காட்டுவதற்கே அம்மாவின் அரசாங்கம் ஏன் அஞ்சி நடுங்குகிறது? இணைய தளத்திலிருந்து அவற்றை ஏன் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறது? “சமச்சீர் கல்வி என்ற வார்த்தையையே ஆசிரியர்கள் உச்சரிக்க கூடாது” என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் சுற்ற்றிக்கை அனுப்பி மிரட்டுவது ஏன்?
அது சமச்சீர் புத்தகமா, இல்லை, சரோஜாதேவி புத்தகமா?
தரமில்லை என்பது இந்த அரசாங்கத்தின் கருத்து. அதுவே அறுதி உண்மை அல்ல. சமச்சீர் புத்தகங்கள் தரமா தரமில்லையா என்று வல்லுநர் படித்துப் பார்ப்பார், நீதிபதி படித்துப் பார்ப்பார், எவன் வேண்டுமானாலும் பார்ப்பான், மாணவர்கள் மட்டும் அந்தப் புதுப் பாடநூல்களை ஆசையாகத் தொட்டு..முகர்ந்து பார்க்கக் கூடாதா?
அந்த நூலைத் தொட்டாலே மாணவர்களுடைய தரம் வீழ்ந்து விடுமா?
தரமில்லாத ஒரு ரூவா அரிசிச் சோற்றைத் தின்று, தரமில்லாத அரசுப் பேருந்துகளில் தொங்கி, தரமில்லாத அரசுப்பள்ளிகளில் படிக்கும் “தரமில்லாத” ஏழை மாணவர்கள், அந்த தரமில்லாத பாடநூல்களை ஒரு முறை புரட்டித்தான் பார்க்கட்டுமே! என்ன கெட்டுவிடும்?
ஒருவேளை உச்ச நீதிமன்றம் அம்மாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து விட்டால், 200 கோடி செலவு செய்து அம்மா அச்சடித்து வைத்திருக்கும் பழைய பாடத்திட்ட நூல்களையும் மாணவர்களிடம் விநியோகிக்கட்டும்!
“இனிமேல் இதுதான் பாடநூல். ஏற்கெனவே கொடுத்த சமச்சீர் பாடநூல்களை எடைக்குப் போட்டுவிடுங்கள்” என்று மாணவர்களிடம் அறிவிக்கட்டும்! அதில் என்ன நட்டம்? எல்லா புத்தகத்தையும் மொத்தமாக அரசாங்கமே பழைய பேப்பருக்குப் போடுவதற்குப் பதிலாக, தனித்தனியாக மாணவர்கள் போடப்போகிறார்கள். மேற்படி பழைய பேப்பர் விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயை அரசு இழக்க நேரிடும் என்பதைத் தவிர வேறென்ன நட்டம்?
“சமச்சீர் பாடநூல்கள் தரமற்றவை, அவை கருணாநிதியின் குடும்ப விளம்பரங்கள்” என்ற அம்மாவின் கூற்று உண்மையாயின், அந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு படிக்கத் தருவதன் மூலம் தானே கருணாநிதியின் முகத்திரையைக் கிழிக்க முடியும்?
“கருணாநிதியின் முகத்திரையை மாணவர்களிடம் கிழித்துக் காட்டிய பிறகு, புத்தகங்களையெல்லாம் கிழித்து தீ வைத்துக் கொளுத்த வேண்டும்” என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டால், அவர்கள் என்ன மறுக்கவா போகிறார்கள்? வள்ளுவனின் முகத்திலேயே பசை தடவிக் காகிதம் ஒட்டக் கூசாத அந்தக் கைகள், கொளுத்துவதற்கா தயங்கும்?
சமச்சீர் பாட நூல்களைப் பற்றி அவர்கள் செய்து வரும் பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரம். அந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றை மாணவர்கள் புரட்டிப் படித்து விட்டால், மாணவர்கள் அவற்றை விரும்பத் தொடங்கிவிடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறது.
அரசைப் பொருத்தவரை இது வெறும் பாடநூல் பிரச்சினை மட்டும் அல்ல. அந்தப் பாடநூல்களை மாணவர்கள் கையில் கொடுத்து விட்டால், “அம்மா கொடுத்த புத்தகமா, அய்யா கொடுத்த புத்தகமா எது சிறந்த பாடநூல்?” என்ற விவாதம் தவிர்க்க இயலாமல் தொடங்கி விடும். மாணவர்களின் முடிவு அம்மாவுக்கு சாதகமாக இருக்காது என்றும் அரசு அஞ்சுகிறது.
“அம்மா அய்யா ” பிரச்சினையோடும் இந்த விவகாரம் முடிந்து விடாது. எந்தப் பாடநூல் நன்றாக இருக்கிறது, ஏன் நன்றாக இருக்கிறது என்று யோசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை வழங்குவது என்பது, புலிக்கு ரத்த வாடை காட்டுவதற்கு நிகரானது என்று அஞ்சுகின்றன அரசும் ஆளும் வர்க்கமும்.
பாடநூல் பற்றியும், பாடத்திட்டம் பற்றியும் விவாதிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுவிட்டால் -
தரம், பாடத்திட்டம், பயிற்று முறை ஆகியவையெல்லாம் மாணவர்களும் பெற்றோரும் கருத்துக் கூறமுடியாத, அவர்களுடைய புத்திக்கு எட்டாத பிரம்ம ரகஸ்யங்கள் போலவும், அவற்றைப் பற்றி ஒப்பீனியன் ஷொல்லணுமானால் அவாள் மிஸஸ் ஒய்.ஜி.பி யாகவோ, மிஸ்டர் சோ ராமஸ்வாமியாகவோ இருந்தாகவேண்டும் என்றும் அவர்கள் டெவலப் பண்ணி வைத்திருக்கும் கதைகளும், கொடுத்து வரும் பில்டப்புகளும் உடைந்து விடும் என்பது இந்தக் கும்பலின் அச்சம்.
அதனால்தான் 1.25 கோடி மாணவர்களின் தலைவிதியோடு சம்மந்தப்பட்ட சமச்சீர் பாடநூல்களை மக்கள் மன்றத்தில் திறந்து காட்ட இந்த அரசு மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றுகிறது. ஆசிரியர்களை மிரட்டுகிறது. அறிவைப் பூட்டி வைத்து காவலுக்கு ஆயுத போலீசை நிறுத்தி வைக்கிறது.
 இந்த அரசு
தனியார் கல்விக் கொள்ளையர்களின் புரவலன்.
மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் கூட்டாளி.
இலவசக் கல்வியின் எதிரி.
“பாடநூலைக் கொடுக்க முடியாது” என்று மறுக்கும் அரசுக்கு,
“பள்ளிக்குச் செல்” என்று ஆணையிடும் உரிமை கிடையாது!
“வா” என்றால் வருவதற்கும், “போ” என்றால் போவதற்கும்
ஆடு மாடுகள் அல்ல மாணவர்கள்;
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!
சமச்சீர் கல்வியை முடக்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து,
சமச்சீர் பாடநூல்களை விநியோகிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு விட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.
பாடநூல்களை விநியோகிக்காமல் மாணவர் சமுதாயத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த அரசை திங்களன்றே (ஜூலை 25) வீதிக்கு இழுப்போம்!
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!
____________________________________________________________
ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.
நன்றி வினவு 
Related Posts Plugin for WordPress, Blogger...