சனி, ஜனவரி 28, 2012

மறந்து பறந்த சிட்டு.....



உண்ட களைப்புப் போக்க
உட்கார்ந்தேன் தாழ்வாரத்தில்
சட்டெனப் பறந்துவந்த
சிட்டொன்று என்னருகில்
படபடக்கும் சிறகை வெட்டி
பட்டென எழும்புவதும்
பறந்திட எண்ணமின்றி
பழையபடி அமர்ந்திடவும்
பட்டுச்சிறகோடு எனை
பார்வையில் கொஞ்சுவதுமாய்....

சிட்டதன் சிறகுக்குள்ளே
சேர்ந்த அந்த சோகம் என்ன.....

தணலாய் தகிக்கும் வெம்மை
தாகத்தைத் தீர்ப்பதற்க்கா
அலைந்தெதுவும் கிட்டிடாமல்
அன்னம் தேடி அலைகிறதோ...

அரிசி கொஞ்சம் நுள்ளி இந்த
அழகுப் பறவைக்கிடலாம்
அருந்த கொஞ்சம் நீர் மொண்டு
அருகில் கொண்டு தரலாம்....

பறவையைக் கலைத்திடாது
பயப்படுத்தி துறத்திடாது.
நழுவி நகர்ந்தேன் கொஞ்சம்
அன்னமும் தண்ணியும் பெற....

கைகளில் கொஞ்சம் அன்னம்
கிண்ணத்தில் சிறிது நீரும்
சன்னமாய் அடிமேல் அடிவைத்து
தாழ்வாரம் வந்து சேர்ந்தால்....

சிறகடித்துச் சிதறி
சுற்றியோர் வட்டமிட்டு
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....

நீர்த்தளும்பிய என்விழிக்கோளம்
ஏமாற்றம்... எதையும் அறியாத
துணைவியோ என் தோளைத் தொட்டு
இன்னும் அவளையே நெனச்சிக்கிட்டு...
இந்தப் பிறவியில் நம்மைவிட
அவந்தான் பெருசுன்னு போயிட்டா...
காலம் கூடி வரும் 
கழுத வராமலா போய்டுவா...

நான் நேசிக்கும் யாவும்
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....
நீர்த்தளும்பிய விழிக்கோளம்
காய்ந்த கோடுகளாய் 
கன்னத்துடன் ...


உண்ட களைப்புப் போக்க
உட்கார்ந்தேன் தாழ்வாரத்தில்
சட்டெனப் பறந்துவந்த
சிட்டொன்று என்னருகில்
படபடக்கும் சிறகை வெட்டி
பட்டென எழும்புவதும்
பறந்திட எண்ணமின்றி
பழையபடி அமர்ந்திடவும்
பட்டுச்சிறகோடு எனை
பார்வையில் கொஞ்சுவதுமாய்....

சிட்டதன் சிறகுக்குள்ளே
சேர்ந்த அந்த சோகம் என்ன.....

தணலாய் தகிக்கும் வெம்மை
தாகத்தைத் தீர்ப்பதற்க்கா
அலைந்தெதுவும் கிட்டிடாமல்
அன்னம் தேடி அலைகிறதோ...

அரிசி கொஞ்சம் நுள்ளி இந்த
அழகுப் பறவைக்கிடலாம்
அருந்த கொஞ்சம் நீர் மொண்டு
அருகில் கொண்டு தரலாம்....

பறவையைக் கலைத்திடாது
பயப்படுத்தி துறத்திடாது.
நழுவி நகர்ந்தேன் கொஞ்சம்
அன்னமும் தண்ணியும் பெற....

கைகளில் கொஞ்சம் அன்னம்
கிண்ணத்தில் சிறிது நீரும்
சன்னமாய் அடிமேல் அடிவைத்து
தாழ்வாரம் வந்து சேர்ந்தால்....

சிறகடித்துச் சிதறி
சுற்றியோர் வட்டமிட்டு
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....

நீர்த்தளும்பிய என்விழிக்கோளம்
ஏமாற்றம்... எதையும் அறியாத
துணைவியோ என் தோளைத் தொட்டு
இன்னும் அவளையே நெனச்சிக்கிட்டு...
இந்தப் பிறவியில் நம்மைவிட
அவந்தான் பெருசுன்னு போயிட்டா...
காலம் கூடி வரும் 
கழுத வராமலா போய்டுவா...

நான் நேசிக்கும் யாவும்
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....
நீர்த்தளும்பிய விழிக்கோளம்
காய்ந்த கோடுகளாய் 
கன்னத்துடன் ...

நனைதலும காய்தலும்


நீர்ச்சொட்டுக்கள் நில்லாமல்
நிலம் தொட்டபோது
நினைவுகளும் நெஞ்சினின்று
நில்லாமல் நெருட ஆரம்பித்தன

மழைநாள் நிகழ்வுகள் கொஞ்சம்
மனதோடு உண்டு
நனைத்த மழைத்துளிகள்
காய்தலின் போது காணமல் போனது போல்.....

காகிதக் கப்பல் செய்து
கலங்கிய நீரோடையில்
களித்த அந்தத் தருணங்கள்
கவலை இல்லா காலங்கள்.....

நனைந்த மண்ணில் குத்தி
நெளிந்திடும் மண்புழுக்களை
நிறையவே சேர்த்த அந்த
நேர்மையான குழந்தைக் காலம்...

வகுப்பறையில் கேட்ட விப்ஜியார் என்பதற்கு
விண்வில்லின் நிறங்கள் மொத்தம்
ஏழையும் எண்ணிப் பார்க்க
ஏங்கியே நனைந்த காலம்....

மாடிவீட்டு மடையின் தண்ணீர்
மழையுடன் போட்டிபோட்டு
மண்ணிலே துளைக்கும் காட்சி
மறந்திடாமல் மனசுக்குள் மணிமணியாய்...

நனைந்தும் குளிர்ந்தும்
நாம் பெற்ற காய்ச்சலுக்கு
நடுக்கும் ஊசிக்குப் பயந்து யார்க்கும்
சொல்லாமல் கழித்த காலம்.....

குளத்தின் நீர் பெருகிவிட
கொக்குகளும் நாரைகளும்
மறுகால் பாயும் வெள்ளம கூடவே
மூழ்கியோர் மரணங்கள் கேட்ட காலம்....

ஈர மண்பரப்பில் இறங்கி நடக்கையிலே
என் சின்னப் பாதம் அழுந்த
நீர் கிளம்பும் விரல்வழியே
நின்று நீர்பர்த்து நிதானமாய் நடந்த காலம் ....

வகுப்பறையில் அமர்ந்திருக்க
வந்தது ஓர் அடை மழை
வயலில் உம்மாவுடன்
வாசனையுடன் வந்த மழை
என்னை சன்னல்புறத்தாக்கி
இடியோடு இடித்தமழை
அண்ணனின் திருமணத்தில்
அழைக்காமலே அரும்பிய மழை
ஓடிய என் காலங்களில்
ஒழுகிய நீர்த்தாரைகளில்
ஓரிரு சொட்டுகள் கூட
உண்மையாய் என்னோடு இல்லை...
நனைந்தேன் மகிழ்ந்தேன்
காய்ந்தேன் மறந்தேன்
நனைவதும் காய்வதும்
வெளியில் மட்டுமே
உள்ளே நிறைய ஈரம்
காய முடியாமல் கண்ணீரோடு... 



நீர்ச்சொட்டுக்கள் நில்லாமல்
நிலம் தொட்டபோது
நினைவுகளும் நெஞ்சினின்று
நில்லாமல் நெருட ஆரம்பித்தன

மழைநாள் நிகழ்வுகள் கொஞ்சம்
மனதோடு உண்டு
நனைத்த மழைத்துளிகள்
காய்தலின் போது காணமல் போனது போல்.....

காகிதக் கப்பல் செய்து
கலங்கிய நீரோடையில்
களித்த அந்தத் தருணங்கள்
கவலை இல்லா காலங்கள்.....

நனைந்த மண்ணில் குத்தி
நெளிந்திடும் மண்புழுக்களை
நிறையவே சேர்த்த அந்த
நேர்மையான குழந்தைக் காலம்...

வகுப்பறையில் கேட்ட விப்ஜியார் என்பதற்கு
விண்வில்லின் நிறங்கள் மொத்தம்
ஏழையும் எண்ணிப் பார்க்க
ஏங்கியே நனைந்த காலம்....

மாடிவீட்டு மடையின் தண்ணீர்
மழையுடன் போட்டிபோட்டு
மண்ணிலே துளைக்கும் காட்சி
மறந்திடாமல் மனசுக்குள் மணிமணியாய்...

நனைந்தும் குளிர்ந்தும்
நாம் பெற்ற காய்ச்சலுக்கு
நடுக்கும் ஊசிக்குப் பயந்து யார்க்கும்
சொல்லாமல் கழித்த காலம்.....

குளத்தின் நீர் பெருகிவிட
கொக்குகளும் நாரைகளும்
மறுகால் பாயும் வெள்ளம கூடவே
மூழ்கியோர் மரணங்கள் கேட்ட காலம்....

ஈர மண்பரப்பில் இறங்கி நடக்கையிலே
என் சின்னப் பாதம் அழுந்த
நீர் கிளம்பும் விரல்வழியே
நின்று நீர்பர்த்து நிதானமாய் நடந்த காலம் ....

வகுப்பறையில் அமர்ந்திருக்க
வந்தது ஓர் அடை மழை
வயலில் உம்மாவுடன்
வாசனையுடன் வந்த மழை
என்னை சன்னல்புறத்தாக்கி
இடியோடு இடித்தமழை
அண்ணனின் திருமணத்தில்
அழைக்காமலே அரும்பிய மழை
ஓடிய என் காலங்களில்
ஒழுகிய நீர்த்தாரைகளில்
ஓரிரு சொட்டுகள் கூட
உண்மையாய் என்னோடு இல்லை...
நனைந்தேன் மகிழ்ந்தேன்
காய்ந்தேன் மறந்தேன்
நனைவதும் காய்வதும்
வெளியில் மட்டுமே
உள்ளே நிறைய ஈரம்
காய முடியாமல் கண்ணீரோடு... 


செவ்வாய், ஜனவரி 17, 2012

மழை சேமிப்பவள்....



அன்றும் மழைபெய்தது
நனைந்தவாறு என் மகள்
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
கிண்ணமொன்றில் பிடித்து
கொஞ்சமாய் வடிகட்டி
ஓடோடிச்சென்று தன் குடத்திலிட்டாள்...

அந்தக்குடத்தில்
ஏற்கெனவே கொஞ்சம் நீருண்டு.

அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...

அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு..

எங்காவது வெளியூர் போனாலும்
மறக்காமல் கிண்ணமும் ஒரு
குப்பியும் அவளோடு கூட வரும்....

பொழிதலின் புனிதத்தை
புரிந்து உணர்ந்தவள் அவள்...

அவளது கல்லூரிப் படிப்புக்காய்
கசகசக்கும் வெயிலில்
கால் கடுக்க வரிசையில் நின்று
அங்குமிங்கும் அலைந்து
அனைத்தும் முடிந்து மகிழ்வுடன்
அவளருகில் வந்த போது
என் காதின் மடல் வழியே
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
பட்டென எடுத்தாள் குப்பியை
விழப்போன வியர்வைதுளியை
வீழ்ந்திடாமல் பக்குமாய்
பத்திரப்படுத்தினாள் குப்பிக்குள்...

அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...
அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு.. 


அன்றும் மழைபெய்தது
நனைந்தவாறு என் மகள்
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
கிண்ணமொன்றில் பிடித்து
கொஞ்சமாய் வடிகட்டி
ஓடோடிச்சென்று தன் குடத்திலிட்டாள்...

அந்தக்குடத்தில்
ஏற்கெனவே கொஞ்சம் நீருண்டு.

அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...

அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு..

எங்காவது வெளியூர் போனாலும்
மறக்காமல் கிண்ணமும் ஒரு
குப்பியும் அவளோடு கூட வரும்....

பொழிதலின் புனிதத்தை
புரிந்து உணர்ந்தவள் அவள்...

அவளது கல்லூரிப் படிப்புக்காய்
கசகசக்கும் வெயிலில்
கால் கடுக்க வரிசையில் நின்று
அங்குமிங்கும் அலைந்து
அனைத்தும் முடிந்து மகிழ்வுடன்
அவளருகில் வந்த போது
என் காதின் மடல் வழியே
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
பட்டென எடுத்தாள் குப்பியை
விழப்போன வியர்வைதுளியை
வீழ்ந்திடாமல் பக்குமாய்
பத்திரப்படுத்தினாள் குப்பிக்குள்...

அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...
அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு.. 

சனி, ஜனவரி 14, 2012

தமிழர் திருநாள்



மாடோட்டிப் பயிர் செய்தோம் மண்ணில் நித்தம்
மண்மணக்க விருந்திட்டோம் மனசில் நின்றோம்
காடெல்லாம் வீடாகி கழனியெல்லாம் காரோட
வீடின்றி வாசலின்றி விதிர்க்கின்றான் விவசாயி....

போனதெல்லாம் போகட்டும் போகியுடன் சாம்பலாய்
கானகத்தை காத்திடுவோம் கண்ணிமை போல் காவலாய்
ஊனமின்றிப் பாடுபட்டு உழவர் வாழ்வு ஓங்கவே
உண்மையுடன் வளர்த்திடுவோம் விவசாயத் தொழிலையே...

தமிழை நற்ப் பானையாக்கி தணலுக்குப் பகைகூட்டி
தாய்மைஎனும் நீரூற்றி அன்பு எனும் அரிசியிட்டு
சர்க்கரையாய் சகமனிதச் சமத்துவமும் அதில் சேர்த்துப்
பொங்கலோ பொங்கலென பொங்கட்டும் இன்ப வெள்ளம....

ஏரோடிய நிலமெல்லாம் எங்கள் நிலமே
நீரோடிய வயலெல்லாம் எங்கள வளமே
வேரோடிய தமிழர் குடி எங்கள் குடியே
பார் போற்றும் எங்கள் மொழி தங்கத்தமிழே...
அன்புடன் அப்துல்லாஹ்....


மாடோட்டிப் பயிர் செய்தோம் மண்ணில் நித்தம்
மண்மணக்க விருந்திட்டோம் மனசில் நின்றோம்
காடெல்லாம் வீடாகி கழனியெல்லாம் காரோட
வீடின்றி வாசலின்றி விதிர்க்கின்றான் விவசாயி....

போனதெல்லாம் போகட்டும் போகியுடன் சாம்பலாய்
கானகத்தை காத்திடுவோம் கண்ணிமை போல் காவலாய்
ஊனமின்றிப் பாடுபட்டு உழவர் வாழ்வு ஓங்கவே
உண்மையுடன் வளர்த்திடுவோம் விவசாயத் தொழிலையே...

தமிழை நற்ப் பானையாக்கி தணலுக்குப் பகைகூட்டி
தாய்மைஎனும் நீரூற்றி அன்பு எனும் அரிசியிட்டு
சர்க்கரையாய் சகமனிதச் சமத்துவமும் அதில் சேர்த்துப்
பொங்கலோ பொங்கலென பொங்கட்டும் இன்ப வெள்ளம....

ஏரோடிய நிலமெல்லாம் எங்கள் நிலமே
நீரோடிய வயலெல்லாம் எங்கள வளமே
வேரோடிய தமிழர் குடி எங்கள் குடியே
பார் போற்றும் எங்கள் மொழி தங்கத்தமிழே...
அன்புடன் அப்துல்லாஹ்....

வியாழன், ஜனவரி 12, 2012

அதிர்ந்ததால் உதிர்க்கிறேன்....



மரங்களடர்ந்த தோப்பில்
காவலாளியின் கவன்த்துக்குத் தப்பி
கனி ஒன்று வீழ்ந்து 
தரை தொட 

அசைந்த மரத்தின் 
ஆடிய கிளையின் 
அதன் கனிகளின் எண்ணிக்கையில் 
ஒன்று குறைகிறது....

கிளையொன்றில் ஓடிய 
அணிலின் சுழலும் பார்வைக்குள் 
வீழ்ந்த கனியின் உருளல்...

அதற்கு எதுவும் முக்கியமில்லை 
அசையாமல மடிப்பெற்ற 
அம்மரத்தையே தாங்கிய 
வனத்தின் தளத்தில்
கனியொன்று தரையுடன் கொண்ட 
புதிய உறவையோ 
அம்மரத்தின் இழப்பு சோகத்தையோ 
கனிக்கும் விருட்சத்திற்குமான 
அறுந்துபோன இணைப்பை
அற்றுப்போன உறவையோ..

அறியாத அணிலும் 
அந்தக் காவலாளியும் 
இன்னும் சில பறவைகளும் 
சிற்சில மரங்களும் 
கண்டும் காணாமல் 
அறிந்தும் அறியாமல் 
ஒன்றுமே நிகழாதது போல 
எல்லாமே நிகழ்கிறது அதுபோல் 

ஒவ்வொரு நாளும் 
 உன்னால் நான் அதிர்வதாலும்
துவண்டு போவதாலும்
உதிர்த்துக்கொண்டே இருக்கிறேன்
உன் பற்றிய என் நன்மதிப்பீடுகளை
அடியில் என் பாதம் சுற்றி 
இப்பொழுது நிறையக் கனிகளும்
சருகுகளும்......
அவற்றை 
நம்மைத்தவிர 
யாரும் கவனியாமல்
குப்பைகளாய்..... 




மரங்களடர்ந்த தோப்பில்
காவலாளியின் கவன்த்துக்குத் தப்பி
கனி ஒன்று வீழ்ந்து 
தரை தொட 

அசைந்த மரத்தின் 
ஆடிய கிளையின் 
அதன் கனிகளின் எண்ணிக்கையில் 
ஒன்று குறைகிறது....

கிளையொன்றில் ஓடிய 
அணிலின் சுழலும் பார்வைக்குள் 
வீழ்ந்த கனியின் உருளல்...

அதற்கு எதுவும் முக்கியமில்லை 
அசையாமல மடிப்பெற்ற 
அம்மரத்தையே தாங்கிய 
வனத்தின் தளத்தில்
கனியொன்று தரையுடன் கொண்ட 
புதிய உறவையோ 
அம்மரத்தின் இழப்பு சோகத்தையோ 
கனிக்கும் விருட்சத்திற்குமான 
அறுந்துபோன இணைப்பை
அற்றுப்போன உறவையோ..

அறியாத அணிலும் 
அந்தக் காவலாளியும் 
இன்னும் சில பறவைகளும் 
சிற்சில மரங்களும் 
கண்டும் காணாமல் 
அறிந்தும் அறியாமல் 
ஒன்றுமே நிகழாதது போல 
எல்லாமே நிகழ்கிறது அதுபோல் 

ஒவ்வொரு நாளும் 
 உன்னால் நான் அதிர்வதாலும்
துவண்டு போவதாலும்
உதிர்த்துக்கொண்டே இருக்கிறேன்
உன் பற்றிய என் நன்மதிப்பீடுகளை
அடியில் என் பாதம் சுற்றி 
இப்பொழுது நிறையக் கனிகளும்
சருகுகளும்......
அவற்றை 
நம்மைத்தவிர 
யாரும் கவனியாமல்
குப்பைகளாய்..... 


புதன், ஜனவரி 11, 2012

இருளோடிய உண்மைகள்



எனக்கு அந்த விளக்குகளை
பிடிக்கவில்லை
எத்தனை பிரகாசம்....
இருட்டின்  அழகை
குலைத்தது அதுதானே...
கருப்பின் கருவுக்குள்
காத்திட்ட ரகசியங்களைக்
கைநிறைய அள்ளிக்
கண்களுக்கு
காட்சியாக்கிய அந்த விளக்குகளை
வெறுக்கிறேன்.
இருள் என் ஆடையாய்
தொடமுடியாத் தனிமையாய்
என் உயிரில் கலந்த ஒரு உணர்வாய்...
என் பகல்முழுக்க கண்பூத்துக்
காத்திருத்தலில் விளைந்த
எனக்கான தோழியாய்
பறவைகளின் விலங்குகளின்
போர்த்தித் துயில் காக்கும்
போர்வையாய்
கிசுகிசுப்புகளின் மொட்டுக்களை
மலரவிடாது மனசோடு
மனசாய் மாறிப்போன
அவற்றின் புறத்தை
வெள்ளையாக்க வந்த
விளக்குகளை
விட்டு நானும் விலகுகிறேன்...

நான் இருளோடு
அதன்இரவோடு
அவற்றின்
கைமூடிய ரகசியங்களோடு
ரகசியங்களில்
காதல் மிகக் கொள்பவன்..

உனது வீச்சை விவரிக்க
விழாக்காலங்களில்
இரவின் இருட்டாடையை
விளக்குக் கத்தியால்
கிழித்துச் சிதைப்பதும்
சரவிளக்குகலால் சட்டையிடுவதும்  
உன் ஒளியாட்சியின்
ஆளுமையை என்னிடம் காட்டினாலும்

நான் ஒளிந்து நின்று
கருப்போடு கருப்பை காதலிக்கிறேன்
எனக்கான இரவுகளை
என்னோடு உயிர்த்து
என்னோடு மரணிக்கவும்
ஆசைப் படுகிறேன்...

நான் என் இருட்டை
நேசிப்பதால் என்னவனே!
நீ என்னை அலங்கரிக்கச் சொல்கையில்
என் இயல்பை
என் உண்மையை
என்னை
உனக்காக பூச்சுக்களாலும்
பொய்ச் சிரிப்புகளாலும்
அந்த விளக்குகளால் தனையிழந்த இருளைப் போல்
என்னையும்  
உன்னிலிருந்து நான் இழந்து போனேன்
உண்மையில் நான் இறந்து போனேன்......


எனக்கு அந்த விளக்குகளை
பிடிக்கவில்லை
எத்தனை பிரகாசம்....
இருட்டின்  அழகை
குலைத்தது அதுதானே...
கருப்பின் கருவுக்குள்
காத்திட்ட ரகசியங்களைக்
கைநிறைய அள்ளிக்
கண்களுக்கு
காட்சியாக்கிய அந்த விளக்குகளை
வெறுக்கிறேன்.
இருள் என் ஆடையாய்
தொடமுடியாத் தனிமையாய்
என் உயிரில் கலந்த ஒரு உணர்வாய்...
என் பகல்முழுக்க கண்பூத்துக்
காத்திருத்தலில் விளைந்த
எனக்கான தோழியாய்
பறவைகளின் விலங்குகளின்
போர்த்தித் துயில் காக்கும்
போர்வையாய்
கிசுகிசுப்புகளின் மொட்டுக்களை
மலரவிடாது மனசோடு
மனசாய் மாறிப்போன
அவற்றின் புறத்தை
வெள்ளையாக்க வந்த
விளக்குகளை
விட்டு நானும் விலகுகிறேன்...

நான் இருளோடு
அதன்இரவோடு
அவற்றின்
கைமூடிய ரகசியங்களோடு
ரகசியங்களில்
காதல் மிகக் கொள்பவன்..

உனது வீச்சை விவரிக்க
விழாக்காலங்களில்
இரவின் இருட்டாடையை
விளக்குக் கத்தியால்
கிழித்துச் சிதைப்பதும்
சரவிளக்குகலால் சட்டையிடுவதும்  
உன் ஒளியாட்சியின்
ஆளுமையை என்னிடம் காட்டினாலும்

நான் ஒளிந்து நின்று
கருப்போடு கருப்பை காதலிக்கிறேன்
எனக்கான இரவுகளை
என்னோடு உயிர்த்து
என்னோடு மரணிக்கவும்
ஆசைப் படுகிறேன்...

நான் என் இருட்டை
நேசிப்பதால் என்னவனே!
நீ என்னை அலங்கரிக்கச் சொல்கையில்
என் இயல்பை
என் உண்மையை
என்னை
உனக்காக பூச்சுக்களாலும்
பொய்ச் சிரிப்புகளாலும்
அந்த விளக்குகளால் தனையிழந்த இருளைப் போல்
என்னையும்  
உன்னிலிருந்து நான் இழந்து போனேன்
உண்மையில் நான் இறந்து போனேன்......

மயக்கத்தில் அது.....


மதியினை நழுவவிட்டு மனசில் சூழ்ந்த
விரகத்தின் கனல் நிரம்பிய
மயக்கம் பீடித்த அந்த மர்ம நாழிகையின்
மணிக்கட்டைப் பிடித்து
மறுபடி மறுபடிக் கேட்டான்
மனசும் மங்கையும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பேதையின் போதையில்
புலன்களை மறந்து
புருவ வில்லினின்று புரவியாய் பாயும்
பார்வைக்கணையில் தப்பிய
பாவையவள் விழியம்புக்காயங்களுடன்
மேனி நடுங்க மேலும் மேலும்
மேவினான் காதலும் காமமும் ஒன்றா....
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

உடல மடல்களில் வழியும்
வியர்வையை கசகசப்பை
விரகம் நீராய்ச்சூழ்ந்தவனை  
விரவிப்பரவி வியாபிக்க
சுவாசம்தன்னில் சுருட்டிய அவனும்
சுருண்டு படுத்து சுகத்தை உடுத்தி
சுற்றம் தொலைத்து வழியிலும் வெளியிலும்
அலையும் தன்னை
உடலம் இழந்த வேற்றாய் காற்றாய்
காணவியலாக் கருப்பாய் களித்தவன்  
கண்மலர் சுருக்கிக் காதருகே
கிசுகிசுப்பாய் கேட்டான்
மதுவும் மாதும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பதில் பிறந்தது
மழை நனைத்த நிலமும்
மரத்தை நனைத்த நிலவும்
மதியை விரட்டும் இன்பமும்
மனசை வென்ற அவளும்....
நிலவும் நிலமும் தருவும்
அவளும் இன்பமும் மறுபடி மறுபடி 
நனைவதும் நனைப்பதும்
அது அதுவாய் அதனால் தான்...



மதியினை நழுவவிட்டு மனசில் சூழ்ந்த
விரகத்தின் கனல் நிரம்பிய
மயக்கம் பீடித்த அந்த மர்ம நாழிகையின்
மணிக்கட்டைப் பிடித்து
மறுபடி மறுபடிக் கேட்டான்
மனசும் மங்கையும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பேதையின் போதையில்
புலன்களை மறந்து
புருவ வில்லினின்று புரவியாய் பாயும்
பார்வைக்கணையில் தப்பிய
பாவையவள் விழியம்புக்காயங்களுடன்
மேனி நடுங்க மேலும் மேலும்
மேவினான் காதலும் காமமும் ஒன்றா....
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

உடல மடல்களில் வழியும்
வியர்வையை கசகசப்பை
விரகம் நீராய்ச்சூழ்ந்தவனை  
விரவிப்பரவி வியாபிக்க
சுவாசம்தன்னில் சுருட்டிய அவனும்
சுருண்டு படுத்து சுகத்தை உடுத்தி
சுற்றம் தொலைத்து வழியிலும் வெளியிலும்
அலையும் தன்னை
உடலம் இழந்த வேற்றாய் காற்றாய்
காணவியலாக் கருப்பாய் களித்தவன்  
கண்மலர் சுருக்கிக் காதருகே
கிசுகிசுப்பாய் கேட்டான்
மதுவும் மாதும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பதில் பிறந்தது
மழை நனைத்த நிலமும்
மரத்தை நனைத்த நிலவும்
மதியை விரட்டும் இன்பமும்
மனசை வென்ற அவளும்....
நிலவும் நிலமும் தருவும்
அவளும் இன்பமும் மறுபடி மறுபடி 
நனைவதும் நனைப்பதும்
அது அதுவாய் அதனால் தான்...


திங்கள், ஜனவரி 09, 2012

மழலைப் புழுக்கள்


ஏற்றங்கள் தம்மோடு இறக்கத்தையும் சுமந்து
இல்லாமை இருளோடு இப்புவியும் தவிக்குதம்மா

தோற்றங்கள் புதிதான மாற்றங்கள் காட்டிடினும்
தோற்றுத்தான் நிற்கின்றோம் துன்பங்கள் தீரவில்லை

செல்வக் குடிகளிலோ சேய்களோடு சுகபோகம்
செங்கல் சுமக்கும் ஏழைக் (இ)கிருளோடு சகவாசம்

விதைப்பெட்டி நிறைய விஞ்ஞானம் அள்ளினோம்
விண்ணில் கால்பதித்து விதைத்தோம் விரவச்செய்தோம்

வீடெங்கும் காட்சிகளாய் பிரபஞ்சம் அடக்கிட்டோம்
வீதியெங்கும் சாட்சிகளாய் சகமனிதம் சாவுதய்யா...

மண்ணில் மானுடம் மலைமுகட்டின் உச்சிதொட்டோம்
மண்வீடும் இல்லாது மழலைகளை மடியவிட்டோம்

கட்டிலிலே கண்ணயர்ந்து ஒருகூட்டம் சுகிக்கையிலே
பட்டினிப் பாவங்களோ பார்முழுதும் அலையுதம்மா....

எழுச்சிகளோடு ஏலம்போகும் இவர்கள்தம் புவிவாழ்வு
இழிந்தும் இழந்தும் இன்னல்பட வாடுவதோ...

மும்மாரி பெய்திடினும் முப்போகம் ஈட்டிடினும்
மூழ்கிவிட்ட கப்பலைப்போல் இவர்உலகம் ஆனதென்ன

கட்டுமானக்கலையில் நாம் கடல்தாண்டி வென்றாலும்
கழிப்பறையில் குடியிருக்கும்  கடினவாழ்வு தீர்வதெப்போ...

அவலந்தான் மாறாதா இந்தஅகிலந்தான் உணராதா
ஆறடி உடலத்தில் அறையடிதானே அடி(உ)யுதரம்
சாவடி அடிக்குதம்மா சக்கையாக்கி பிழியுதம்மா
சாக்கடை தான் போக்கிடமா சரீரத்தை சாய்ப்பதற்க்கு
சங்கடங்கள் தீராது நம் சத்தமொன்றும் ஒலிக்காது
சகோதரக் கண்மணியே சகித்து வாழப் பழகிவிடு...



ஏற்றங்கள் தம்மோடு இறக்கத்தையும் சுமந்து
இல்லாமை இருளோடு இப்புவியும் தவிக்குதம்மா

தோற்றங்கள் புதிதான மாற்றங்கள் காட்டிடினும்
தோற்றுத்தான் நிற்கின்றோம் துன்பங்கள் தீரவில்லை

செல்வக் குடிகளிலோ சேய்களோடு சுகபோகம்
செங்கல் சுமக்கும் ஏழைக் (இ)கிருளோடு சகவாசம்

விதைப்பெட்டி நிறைய விஞ்ஞானம் அள்ளினோம்
விண்ணில் கால்பதித்து விதைத்தோம் விரவச்செய்தோம்

வீடெங்கும் காட்சிகளாய் பிரபஞ்சம் அடக்கிட்டோம்
வீதியெங்கும் சாட்சிகளாய் சகமனிதம் சாவுதய்யா...

மண்ணில் மானுடம் மலைமுகட்டின் உச்சிதொட்டோம்
மண்வீடும் இல்லாது மழலைகளை மடியவிட்டோம்

கட்டிலிலே கண்ணயர்ந்து ஒருகூட்டம் சுகிக்கையிலே
பட்டினிப் பாவங்களோ பார்முழுதும் அலையுதம்மா....

எழுச்சிகளோடு ஏலம்போகும் இவர்கள்தம் புவிவாழ்வு
இழிந்தும் இழந்தும் இன்னல்பட வாடுவதோ...

மும்மாரி பெய்திடினும் முப்போகம் ஈட்டிடினும்
மூழ்கிவிட்ட கப்பலைப்போல் இவர்உலகம் ஆனதென்ன

கட்டுமானக்கலையில் நாம் கடல்தாண்டி வென்றாலும்
கழிப்பறையில் குடியிருக்கும்  கடினவாழ்வு தீர்வதெப்போ...

அவலந்தான் மாறாதா இந்தஅகிலந்தான் உணராதா
ஆறடி உடலத்தில் அறையடிதானே அடி(உ)யுதரம்
சாவடி அடிக்குதம்மா சக்கையாக்கி பிழியுதம்மா
சாக்கடை தான் போக்கிடமா சரீரத்தை சாய்ப்பதற்க்கு
சங்கடங்கள் தீராது நம் சத்தமொன்றும் ஒலிக்காது
சகோதரக் கண்மணியே சகித்து வாழப் பழகிவிடு...


Related Posts Plugin for WordPress, Blogger...