நிழல்தரா மரமுண்டோ தோழி விண்ணில்
நீரில்லா மேகமும்தா னுண்டோ சொல்
விதைமுளைக்கா வெட்டை வீதியாக்கி இறைவன்
விதியாலே சதிசெய்தான் பார்
மென்மலர் பிஞ்சுஒன்று மேன்மையாய் என்வயிற்றில்
வந்துயென்வாட்டம் போக்கி வளர்ந்துயென்செல்வம் காக்கும்
என்றுநான் எண்ணியெண்ணி ஏமாந்து நொந்தேன் தோழி
இன்றுநான் வாழ்வதேன் சொல்
மல்லிகைப் பந்தலிட்டேன் மலருக்குப் பஞ்சமின்றி
அல்லியும் ஆம்பலும் என் அகத்திடை அணிவகுக்க
மலர்க்கூட்டம் மங்கையென்னை மனம்சேர மகிழ்வித்தாலும்
மழலையில்லை என்மடியில் காண்
பிள்ளையில்லையென்றதொரு பெருந்துயர் தவிர்த்து என்னில்
கொள்ளைநோய் ஏதுமில்லை கொடியறுந்து வீழ்வதற்க்கு
வெள்ளையாய் உள்ளம் உண்டு வேதனை சிந்தச்சிந்த
கிள்ளை மொழியாளே பார்
குழலினும் இனிதுயென்பர் குழவியின் கன்னல்மொழி
கழல்தனில் கொலுசு பூட்டி களிக்கவே குதித்துஓடும்
அழல்வண்ணச்சிறுவாய் சிந்தும் புன்னகை காணாதின்று
விழலாச்சுதே என் வாழ்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக