செவ்வாய், செப்டம்பர் 27, 2011

இதயம் மட்டும் ....





தேடாத திரவியமே 
தேடி வந்த சித்திரமே 
கானகத்தின் குளிர் நிலவே 
கண்மணியின் தண்ணொளியே 


சிப்பி சேர்ந்த முத்துப் போல 
சிறையிருந்தாய் உதரத்துள்ளில்
நல்ல ஒரு தருணமதில 
நானிலத்தில் வந்துதித்தாய்


தேனிலிட்ட சுளை நீ யென்
வானுதித்த தாரகை தான் 
கையெடுத்து பிள்ளை உன்னை 
கண்ணெடுத்து நானும் கண்டேன்


கண்ணிருக்கும் இடத்தில் ரெண்டு 
கிண்ணம் மட்டும் உள்ளதய்யா 
விழியிழந்த உந்தன் முகம் 
ஒளியில்லாமல் போச்சுதய்யா





தேடாத திரவியமே 
தேடி வந்த சித்திரமே 
கானகத்தின் குளிர் நிலவே 
கண்மணியின் தண்ணொளியே 


சிப்பி சேர்ந்த முத்துப் போல 
சிறையிருந்தாய் உதரத்துள்ளில்
நல்ல ஒரு தருணமதில 
நானிலத்தில் வந்துதித்தாய்


தேனிலிட்ட சுளை நீ யென்
வானுதித்த தாரகை தான் 
கையெடுத்து பிள்ளை உன்னை 
கண்ணெடுத்து நானும் கண்டேன்


கண்ணிருக்கும் இடத்தில் ரெண்டு 
கிண்ணம் மட்டும் உள்ளதய்யா 
விழியிழந்த உந்தன் முகம் 
ஒளியில்லாமல் போச்சுதய்யா

திங்கள், செப்டம்பர் 26, 2011

ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்




சந்தையில் பேரம் பேசி
சடுதியில் பொருளை வாங்கும்
கந்தையாய் போன திங்கே
கன்னியர் கடி மணமும்

முந்தை யவர்தாயும இங்கு
மூலதனம் இட்டே வந்தார்
விந்தையிங்கு ஏதுமில்லை
விதைத்ததே விளைந்ததன்றோ

உந்தையும் தாயும் உன்னை
ஏலத்தில் விட்டார் அன்றே
பந்தைப் போல் சுழன்று நீ யுன்
பிள்ளைக்கும் கேட்பாய் நாளை


விடை இலா வினாக்கள் நெஞ்சில்
விஞ்சியே நிற்குதம்மா
தடையில்லா தவறுகளும்
தன்போக்கில் வளருதம்மா


அழகிய மங்கையரை
அணிகலன் ரொக்கம் காசு
அனைத்தையும் பெற்றுக் கொண்டு
அடையும் அதன பேர் தான் என்ன

நடையுடை பாவனைகள்
நாகரீகம் ஆனபின்பும்
கடைதனில் காளையரை
கூவிக் கூவி விற்பதென்ன


மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்

வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ!  நீ சொல்

பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!








சந்தையில் பேரம் பேசி
சடுதியில் பொருளை வாங்கும்
கந்தையாய் போன திங்கே
கன்னியர் கடி மணமும்

முந்தை யவர்தாயும இங்கு
மூலதனம் இட்டே வந்தார்
விந்தையிங்கு ஏதுமில்லை
விதைத்ததே விளைந்ததன்றோ

உந்தையும் தாயும் உன்னை
ஏலத்தில் விட்டார் அன்றே
பந்தைப் போல் சுழன்று நீ யுன்
பிள்ளைக்கும் கேட்பாய் நாளை


விடை இலா வினாக்கள் நெஞ்சில்
விஞ்சியே நிற்குதம்மா
தடையில்லா தவறுகளும்
தன்போக்கில் வளருதம்மா


அழகிய மங்கையரை
அணிகலன் ரொக்கம் காசு
அனைத்தையும் பெற்றுக் கொண்டு
அடையும் அதன பேர் தான் என்ன

நடையுடை பாவனைகள்
நாகரீகம் ஆனபின்பும்
கடைதனில் காளையரை
கூவிக் கூவி விற்பதென்ன


மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்

வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ!  நீ சொல்

பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!





ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

மாற்றான் தோட்டத்தின் மங்காத்தா....

பாத்து ரொம்ப நாளாகி விட்ட படியால் மருமகன் என்னைத் தேடி வந்தார். சுகம் நலம் விசாரணைக்குப் பின் 
என்னப்பா ஆளையே காணோம்...
பாத்து நாளாச்சு வேலையெல்லாம் எப்புடி ...கள் எல்லாம் முடிந்த பின் அவனது உரையாடலிடைப்பட்ட பதில் ஒன்று 
பக்ரைன் போனோம் மாமா மங்காத்தா படம் பாத்தோம் ...  

சவுதியிலிருந்து நண்பர்கள் குழு ஒன்று பக்கத்து நாடான பக்ரைன் சென்று சினிமா பார்க்க விசா அட்டஸ்ட் செய்து டிடிஎஸ் அமைப்பிலும் அகண்ட திரையிலும் கண்டு கழித்து வருகிறார்கள்... சந்தோசம்... 

மனதில் பொறி தட்டியது இரண்டு மாதங்களாக ஒதுக்கி வைக்கப் பட்ட சினிமா ஆசையை தூசு தட்டி மங்காத்தா பாக்க நானும் தயாரானேன்.



படம் ஆரம்பித்தது வழக்கம் போல இல்லாத அஜித் தலைக் காட்ட ஆரம்பமே அமர்க்களம் ...கதை அந்த கிரிக்கெட் புக்கிகளிடம் புழங்கும் பணத்தை .....ஆவ்.... அனிச்சையாக வாய் திறந்து மூட ...

இருங்க ஒரு நிமிடம்
படத்தில் ஒரு சுக அனுபவம் 
விஜய் பாய்ந்து பந்தாடினார்.... அலி பாய் ட்ட ஒன் பாச்சா பலிக்காது...
நல்லா விறுவிறுன்னு போச்சு

சூர்யா வந்து ரணகளம் பண்ணினார் வைரத்திற்காக அவர் படும் பாட்டைப் பார்த்தால் பட்ட மரமும் பாலுறிவிடும்...

கடுமையான மோனத்தில் அசைவுகளின்றி தவம புரிவது போல நான் படத்தை கண்ணுறுவதைக் கண்ட என் ரூம் மேட் பதறிப் போய்

சார் ...

உஷாராயிட்டேன். ( தூங்குனத காட்டிக்கக் கூடாது௦...)

திரையில் அர்ஜுன் அஜித் ஒருவரை ஒருவர் அன்போடு மகிழ்ச்சியுடன் கொள்ளையடித்த பணம் பங்கு போடப்பட்டது காண்பிக்கப் படுவதோடு படம் முடிய...

நல்ல படம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் படம். சமீப காலத்தில் என்னை மறந்து இவ்வளவு ஆழமான நித்திரையை நான் அடைந்ததில்லை அந்த சுகத்தை எனக்கு தந்த ஒரு அற்புதப் படைப்பு....

விகடன் பாணியில் மங்காத்தா ஒரு ஆரோக்கியம் தரும் படைப்பு...

இப்படிக் கழிந்த மங்காத்தா அனுபவம்...

பகலில் நல்ல உறங்கியதால் ராத்திரிக்கு தூக்கம் வராது அதனால பேசாம ஏதாவது ஒரு படம் பாக்க நினைத்து மலையாளப் படம் கத்தாமா (gaddama) பாக்க முடிவு செய்து ராத்திரி பத்து மணிக்கு உக்கார்ந்தேன்...

படம் கமல் இயக்கியது 
காவியா மாதவன் அபிநயிச்சது (நடிச்சது) நெசம்மா நூத்துக்கு நூறு ... 



சீனிவாசன், சுராஜ், அப்புறம் கடுமையான வெப்பம் நிறைந்த பாலை மணல, அரபுகளின் அந்நிய நாட்டவருடனான உறவுறும் தொடர் நீட்டல் வாழ்க்கை படிமம் இவை எல்லாம் உண்டு ....கல்பின் கைசேதம்..

கொஞ்சம் சாதாரணமாக ஆரம்பிகிறது இந்தத் திரைப்படம் 

வீட்டு வேலைக்காக வாசல் தாண்டி வேற்று மண்ணுக்குப் புறப்படும் ஒரு பக்கா மலையாளிப் பெண் அசுவதி அவரோடு நாமும் கதாம்மா வேலையில் சேர்ந்து விடுகிறோம். அரபி ஒருவர் வீட்டில் அவர் காணும் யதார்த்தங்கள்  நிகழ்வுகளாக அவர் படும் துயரங்கள் கடைசியில் காலெடுத்து வெளியில் வைத்து தப்பிப்பதற்காய் அவர் சந்திக்கும் கஷ்டமும் அதைத் தொடர்ந்து அவரோடு அலையும் காமிராவும் அது புட்டு வைக்கும் துயரங்களும்......

நம் சங்கை அறுத்து விடுகிறது... 



கண்களில் ஈரம காய முடியாதபடி உலகத்தின் நடப்புகள்,
இங்கு பந்தி பரிமாறப்பட்ட ரத்தமும் சதையுமான மனித உறவுகளின் மரித்துப் போன மனிதாபி மானங்கள் ...

படம் துவங்கும் போது அமரர் அறையில் (மார்ச்சுவரியில்) இழுப்பறையில் வெளிக்காட்டப்பட்ட சிரித்த முகத்துடனான அன்னோன் இந்தியன் எனும்  அடையாளம் காட்டப் படாத ஒரு பிரேதம் படம் முடியும் போது நமக்கு பரிச்சயமான நம்மோடு வாழ்ந்த வேறு ஒரு மனிதாபிமானம் மிக்க சகோதரனின் சிரித்த முகத்துடனான அதே அன்னோன் இந்தியன் எனும் வாசகம் பொருந்திய பிரேதமாக ....

என் கடன் பணி செய்து கிடப்பதே இது சீனிவாசன் செய்யும் கடன் பட்டும் பிறர்க்குதவும் பணி...


அட போங்கப்பா இந்தப் படத்தால என் தூக்கம் போச்சு நாலு நாளா டிஸ்டர்ப் ஆயிட்டேன். 
என் அனுபவத்தில் சொல்லனும்னா 

கத்தாம்மா - ஒரு ஆரோக்கியக் கேடு தரும் படம்...

இந்தப் படம் பாக்க ஒரு அஞ்சு பேருக்கு விசாக் காசும் டிக்கட் காசும் நம்ம கையிலிருந்து நாம தாராளமாக குடுக்கலாம்...

பாத்து ரொம்ப நாளாகி விட்ட படியால் மருமகன் என்னைத் தேடி வந்தார். சுகம் நலம் விசாரணைக்குப் பின் 
என்னப்பா ஆளையே காணோம்...
பாத்து நாளாச்சு வேலையெல்லாம் எப்புடி ...கள் எல்லாம் முடிந்த பின் அவனது உரையாடலிடைப்பட்ட பதில் ஒன்று 
பக்ரைன் போனோம் மாமா மங்காத்தா படம் பாத்தோம் ...  

சவுதியிலிருந்து நண்பர்கள் குழு ஒன்று பக்கத்து நாடான பக்ரைன் சென்று சினிமா பார்க்க விசா அட்டஸ்ட் செய்து டிடிஎஸ் அமைப்பிலும் அகண்ட திரையிலும் கண்டு கழித்து வருகிறார்கள்... சந்தோசம்... 

மனதில் பொறி தட்டியது இரண்டு மாதங்களாக ஒதுக்கி வைக்கப் பட்ட சினிமா ஆசையை தூசு தட்டி மங்காத்தா பாக்க நானும் தயாரானேன்.



படம் ஆரம்பித்தது வழக்கம் போல இல்லாத அஜித் தலைக் காட்ட ஆரம்பமே அமர்க்களம் ...கதை அந்த கிரிக்கெட் புக்கிகளிடம் புழங்கும் பணத்தை .....ஆவ்.... அனிச்சையாக வாய் திறந்து மூட ...

இருங்க ஒரு நிமிடம்
படத்தில் ஒரு சுக அனுபவம் 
விஜய் பாய்ந்து பந்தாடினார்.... அலி பாய் ட்ட ஒன் பாச்சா பலிக்காது...
நல்லா விறுவிறுன்னு போச்சு

சூர்யா வந்து ரணகளம் பண்ணினார் வைரத்திற்காக அவர் படும் பாட்டைப் பார்த்தால் பட்ட மரமும் பாலுறிவிடும்...

கடுமையான மோனத்தில் அசைவுகளின்றி தவம புரிவது போல நான் படத்தை கண்ணுறுவதைக் கண்ட என் ரூம் மேட் பதறிப் போய்

சார் ...

உஷாராயிட்டேன். ( தூங்குனத காட்டிக்கக் கூடாது௦...)

திரையில் அர்ஜுன் அஜித் ஒருவரை ஒருவர் அன்போடு மகிழ்ச்சியுடன் கொள்ளையடித்த பணம் பங்கு போடப்பட்டது காண்பிக்கப் படுவதோடு படம் முடிய...

நல்ல படம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் படம். சமீப காலத்தில் என்னை மறந்து இவ்வளவு ஆழமான நித்திரையை நான் அடைந்ததில்லை அந்த சுகத்தை எனக்கு தந்த ஒரு அற்புதப் படைப்பு....

விகடன் பாணியில் மங்காத்தா ஒரு ஆரோக்கியம் தரும் படைப்பு...

இப்படிக் கழிந்த மங்காத்தா அனுபவம்...

பகலில் நல்ல உறங்கியதால் ராத்திரிக்கு தூக்கம் வராது அதனால பேசாம ஏதாவது ஒரு படம் பாக்க நினைத்து மலையாளப் படம் கத்தாமா (gaddama) பாக்க முடிவு செய்து ராத்திரி பத்து மணிக்கு உக்கார்ந்தேன்...

படம் கமல் இயக்கியது 
காவியா மாதவன் அபிநயிச்சது (நடிச்சது) நெசம்மா நூத்துக்கு நூறு ... 



சீனிவாசன், சுராஜ், அப்புறம் கடுமையான வெப்பம் நிறைந்த பாலை மணல, அரபுகளின் அந்நிய நாட்டவருடனான உறவுறும் தொடர் நீட்டல் வாழ்க்கை படிமம் இவை எல்லாம் உண்டு ....கல்பின் கைசேதம்..

கொஞ்சம் சாதாரணமாக ஆரம்பிகிறது இந்தத் திரைப்படம் 

வீட்டு வேலைக்காக வாசல் தாண்டி வேற்று மண்ணுக்குப் புறப்படும் ஒரு பக்கா மலையாளிப் பெண் அசுவதி அவரோடு நாமும் கதாம்மா வேலையில் சேர்ந்து விடுகிறோம். அரபி ஒருவர் வீட்டில் அவர் காணும் யதார்த்தங்கள்  நிகழ்வுகளாக அவர் படும் துயரங்கள் கடைசியில் காலெடுத்து வெளியில் வைத்து தப்பிப்பதற்காய் அவர் சந்திக்கும் கஷ்டமும் அதைத் தொடர்ந்து அவரோடு அலையும் காமிராவும் அது புட்டு வைக்கும் துயரங்களும்......

நம் சங்கை அறுத்து விடுகிறது... 



கண்களில் ஈரம காய முடியாதபடி உலகத்தின் நடப்புகள்,
இங்கு பந்தி பரிமாறப்பட்ட ரத்தமும் சதையுமான மனித உறவுகளின் மரித்துப் போன மனிதாபி மானங்கள் ...

படம் துவங்கும் போது அமரர் அறையில் (மார்ச்சுவரியில்) இழுப்பறையில் வெளிக்காட்டப்பட்ட சிரித்த முகத்துடனான அன்னோன் இந்தியன் எனும்  அடையாளம் காட்டப் படாத ஒரு பிரேதம் படம் முடியும் போது நமக்கு பரிச்சயமான நம்மோடு வாழ்ந்த வேறு ஒரு மனிதாபிமானம் மிக்க சகோதரனின் சிரித்த முகத்துடனான அதே அன்னோன் இந்தியன் எனும் வாசகம் பொருந்திய பிரேதமாக ....

என் கடன் பணி செய்து கிடப்பதே இது சீனிவாசன் செய்யும் கடன் பட்டும் பிறர்க்குதவும் பணி...


அட போங்கப்பா இந்தப் படத்தால என் தூக்கம் போச்சு நாலு நாளா டிஸ்டர்ப் ஆயிட்டேன். 
என் அனுபவத்தில் சொல்லனும்னா 

கத்தாம்மா - ஒரு ஆரோக்கியக் கேடு தரும் படம்...

இந்தப் படம் பாக்க ஒரு அஞ்சு பேருக்கு விசாக் காசும் டிக்கட் காசும் நம்ம கையிலிருந்து நாம தாராளமாக குடுக்கலாம்...

புதன், செப்டம்பர் 21, 2011

நல்லா நின்னு எரியும்... அப்துல்லாஹ்


கும்பலாய் வந்தனர் 
கூடி நின்று என் அங்கம தொட்டு 
அதில் ஒருவன் சொன்னான்
கிழ மரம்... 
இது சொன்னவன் கையில் 
கோடரி 
உயர்த்திறக்கியபோது  
பொத்...
ஒரே போடு 

வைரம் பாய்ஞ்ச மரம 
நல்லா நின்னு எரியும்...

அங்கங்கள் ஒவ்வொண்ணாய்
அவ்வப்போது தருகிறேனே
எரித்தால் 
எரிந்தால் போதாதா...

தலைமையைக் காக்க 
உயிரோடு பேருந்துகளும் 

தமிழனைக் காக்க
உடனே ஓர் இளம் தளிரும் 

மதவெறியைக் காக்க 
மலை மலையாய் மனிதஇனமும

வேண்டாத மருமகளை  
வீட்டில் கதவடைத்தும்

பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..

தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம் 

நய வஞ்சக மனித உள்ளம 
நரித்தனமாய் ஆடும ஆட்டம் 

மானுடங்களுடன் 
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
வேண்டுமெனில்.... 
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு 

இப்போது அவன் 

வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே 
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான் 

வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...


கும்பலாய் வந்தனர் 
கூடி நின்று என் அங்கம தொட்டு 
அதில் ஒருவன் சொன்னான்
கிழ மரம்... 
இது சொன்னவன் கையில் 
கோடரி 
உயர்த்திறக்கியபோது  
பொத்...
ஒரே போடு 

வைரம் பாய்ஞ்ச மரம 
நல்லா நின்னு எரியும்...

அங்கங்கள் ஒவ்வொண்ணாய்
அவ்வப்போது தருகிறேனே
எரித்தால் 
எரிந்தால் போதாதா...

தலைமையைக் காக்க 
உயிரோடு பேருந்துகளும் 

தமிழனைக் காக்க
உடனே ஓர் இளம் தளிரும் 

மதவெறியைக் காக்க 
மலை மலையாய் மனிதஇனமும

வேண்டாத மருமகளை  
வீட்டில் கதவடைத்தும்

பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..

தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம் 

நய வஞ்சக மனித உள்ளம 
நரித்தனமாய் ஆடும ஆட்டம் 

மானுடங்களுடன் 
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
வேண்டுமெனில்.... 
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு 

இப்போது அவன் 

வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே 
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான் 

வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...

திங்கள், செப்டம்பர் 19, 2011

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்


















அன்பு எனும் மாயமந்திரம் 
மனதுக்குள் நிகழ்ந்தபோது 

என்காலடிகளைக் கூட 
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட 
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய் 
உள்ளிழுத்து விட்டேன் 

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால் 
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு 
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை 
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு 
கண்ணிரண்டின் காட்சியை 
முடக்கி விட்டேன் 

இறந்து போன நிகழ்வுகளின் 
வேட்டைக் களமாக
மனம் மாறியதால் 
இறந்து இறந்து 
நான் இன்னலுடன் 
வாழ்வதை தவிர்க்க 
இதயத்தின் இதயத்தை 
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன 
சருகைப் போன்ற நான் 
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும் 
அன்பைச் செலுத்த 
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ 
நான் ஒரு சூனியம்...

















அன்பு எனும் மாயமந்திரம் 
மனதுக்குள் நிகழ்ந்தபோது 

என்காலடிகளைக் கூட 
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட 
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய் 
உள்ளிழுத்து விட்டேன் 

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால் 
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு 
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை 
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு 
கண்ணிரண்டின் காட்சியை 
முடக்கி விட்டேன் 

இறந்து போன நிகழ்வுகளின் 
வேட்டைக் களமாக
மனம் மாறியதால் 
இறந்து இறந்து 
நான் இன்னலுடன் 
வாழ்வதை தவிர்க்க 
இதயத்தின் இதயத்தை 
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன 
சருகைப் போன்ற நான் 
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும் 
அன்பைச் செலுத்த 
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ 
நான் ஒரு சூனியம்...

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

கடுகு - அப்துல்லாஹ்




எண்ணற்ற விருட்சங்களும்
எண்ணமுடியாக் கனிகளும் உள்ளே 
விதை 

ஒன்றுடன் ஒன்று கூட்டினால் இரண்டு 
ஒன்றுடன் ஒன்று கூடினால் ஒன்று 
குழந்தை 

மனசுடன் மகிழ்வாய்ப் பேசினால் மலர்ச்சி 
மனசுடன் மனசு பேசினால் மகிழ்ச்சி
காதல் 

யானை பூதமானது பின்னர் புரவியானது 
உருவங்கள் மாறிக்கொண்டே வந்தன 
மேகக்கலைவு

வண்ணங்களை எழுதிப்பார் ஓவியம 
எண்ணங்களை எழுதிப்பார் காவியம் 
ஜீவிதம் 

நிலவுடன் வானம் கூடினால் இரவு
நினைவுகள் சொந்தம் தேடினால் உறவு 
மறைபவை 

இரண்டு கண்களுக்கும் ஒன்றுதான் காட்சி 
இரண்டு உறவுகளுக்கும் ஒன்று தான் சாட்சி 
மழலை 

மட்கி மண்ணாய்ப் போன மனித சடலத்திற்கு 
வாக்களித்தது போலவே ஓடிக கொண்டிருக்கிறது 
அதன் கைக்கடிகாரம் 



எண்ணற்ற விருட்சங்களும்
எண்ணமுடியாக் கனிகளும் உள்ளே 
விதை 

ஒன்றுடன் ஒன்று கூட்டினால் இரண்டு 
ஒன்றுடன் ஒன்று கூடினால் ஒன்று 
குழந்தை 

மனசுடன் மகிழ்வாய்ப் பேசினால் மலர்ச்சி 
மனசுடன் மனசு பேசினால் மகிழ்ச்சி
காதல் 

யானை பூதமானது பின்னர் புரவியானது 
உருவங்கள் மாறிக்கொண்டே வந்தன 
மேகக்கலைவு

வண்ணங்களை எழுதிப்பார் ஓவியம 
எண்ணங்களை எழுதிப்பார் காவியம் 
ஜீவிதம் 

நிலவுடன் வானம் கூடினால் இரவு
நினைவுகள் சொந்தம் தேடினால் உறவு 
மறைபவை 

இரண்டு கண்களுக்கும் ஒன்றுதான் காட்சி 
இரண்டு உறவுகளுக்கும் ஒன்று தான் சாட்சி 
மழலை 

மட்கி மண்ணாய்ப் போன மனித சடலத்திற்கு 
வாக்களித்தது போலவே ஓடிக கொண்டிருக்கிறது 
அதன் கைக்கடிகாரம் 

சனி, செப்டம்பர் 17, 2011

உனக்கே உயிரானேன்





கிணுங்கிய ஒலி அழைப்பில் 
கவனம் சிதறியவள்
கைபேசியை எடுத்த போது 
குறுஞ் செய்தியில் 

முடிவு என்ன கண்மணி 
உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உன் உயிரானவன்...

முன்று ஆண்டுகளில் 
கல்லூரிப் படிப்புக்காக 
காலெடுத்து வெளியில் வைத்தவள் 
காதலுற்று கையறு நிலையில்

இதோ அழைக்கிறான் 
இப்போதே கிளம்பவேண்டும் 
அவனுடன்..
இந்த உலகத்தின் இன்ப 
எல்லையைக் காட்டுவதாக 
வாக்களித்துள்ளான்..

சில துணிகளும் சட்டிபிகேட்டுகளும்
எப்போதும் அணியும் நகைகளுமாய் 
கிளம்ப எத்தனித்த போது..

விட்டுத் தொலைபேசி ஒலித்தது
வாப்பா இணைப்பில் 
வழக்கமான விசாரிப்புகள் 
அவருக்கு இப்போது அடிக்கடி 
உடம்புக்கு முடியவில்லையாம் 
என் மீது அன்பைச் சொரிபவர் 
மனசை வலித்தது 

என் ஒருத்தியை 
கரை சேர்க்கத்தான் 
கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு...

தம்பி ஓடி வந்தான் 
வாப்பவிடம்
அவனது குரலைக் கேட்டவுடன் 
முதலில் அவனை 
இரண்டு நிமிடம் கொஞ்சுவார் 
பின்னர் தான் பேசுவார்
அவனுக்கு அதில் ஆசை

தொழுது கொண்டிருந்த உம்மா
ஓடிவந்து பேசினாள்
பெரும்பாலும் அழுதாள் 
மனம் பொறுக்கச் சொன்னாள் 
மிண்டும் விடுப்பில் 
வரும்போது மருத்துவம் 
செய்து கொள்ளலாம் 
நம் மக்களுக்காக 
பல்லைக் கடியுங்கள்.

நாம் பெற்ற மக்கள் 
நம் கல்பின் கனிகள் 
அவர்களுக்காகத் தானே 
உயிர் வாழ்கிறோம்...
அவர்களை சந்தோசமாக 
வைத்துக் கொள்ள 
நாம் என்ன துன்பம் 
வேண்டுமானாலும் படலாம்.

கைபேசியில் மிண்டும் 
குறுஞ் செய்தி 
உனக்கு என்ன ஆச்சு 
பதிலைச்சொல்
மதங்களும் இனங்களும் 
பெற்றோரும் மற்ற யாவும் 
காதலுக்குத் தடை இல்லை

புரிந்து கொள்!!!
புறப்படு கண்மணி 

ஆவேசமாக தரையில் எறிந்தேன்
கைப் பேசியை..
நொறுங்கியதில் எழுப்பிய ஒலி

என்னம்மா ஆச்சு 
கிழே விழுந்து விட்டது

சரி விடு வாப்பா ஆசையாய் 
வாங்கித் தந்தது உனக்கென்று
வேறு புதிதாக ஒன்று 
அனுப்பச் சொல்லுவோம்...

வேண்டாம் ம்மா 
அந்தச் சனியனே 
நமக்கு வேண்டாம்.

எந்தச் சனியன்...











கிணுங்கிய ஒலி அழைப்பில் 
கவனம் சிதறியவள்
கைபேசியை எடுத்த போது 
குறுஞ் செய்தியில் 

முடிவு என்ன கண்மணி 
உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உன் உயிரானவன்...

முன்று ஆண்டுகளில் 
கல்லூரிப் படிப்புக்காக 
காலெடுத்து வெளியில் வைத்தவள் 
காதலுற்று கையறு நிலையில்

இதோ அழைக்கிறான் 
இப்போதே கிளம்பவேண்டும் 
அவனுடன்..
இந்த உலகத்தின் இன்ப 
எல்லையைக் காட்டுவதாக 
வாக்களித்துள்ளான்..

சில துணிகளும் சட்டிபிகேட்டுகளும்
எப்போதும் அணியும் நகைகளுமாய் 
கிளம்ப எத்தனித்த போது..

விட்டுத் தொலைபேசி ஒலித்தது
வாப்பா இணைப்பில் 
வழக்கமான விசாரிப்புகள் 
அவருக்கு இப்போது அடிக்கடி 
உடம்புக்கு முடியவில்லையாம் 
என் மீது அன்பைச் சொரிபவர் 
மனசை வலித்தது 

என் ஒருத்தியை 
கரை சேர்க்கத்தான் 
கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு...

தம்பி ஓடி வந்தான் 
வாப்பவிடம்
அவனது குரலைக் கேட்டவுடன் 
முதலில் அவனை 
இரண்டு நிமிடம் கொஞ்சுவார் 
பின்னர் தான் பேசுவார்
அவனுக்கு அதில் ஆசை

தொழுது கொண்டிருந்த உம்மா
ஓடிவந்து பேசினாள்
பெரும்பாலும் அழுதாள் 
மனம் பொறுக்கச் சொன்னாள் 
மிண்டும் விடுப்பில் 
வரும்போது மருத்துவம் 
செய்து கொள்ளலாம் 
நம் மக்களுக்காக 
பல்லைக் கடியுங்கள்.

நாம் பெற்ற மக்கள் 
நம் கல்பின் கனிகள் 
அவர்களுக்காகத் தானே 
உயிர் வாழ்கிறோம்...
அவர்களை சந்தோசமாக 
வைத்துக் கொள்ள 
நாம் என்ன துன்பம் 
வேண்டுமானாலும் படலாம்.

கைபேசியில் மிண்டும் 
குறுஞ் செய்தி 
உனக்கு என்ன ஆச்சு 
பதிலைச்சொல்
மதங்களும் இனங்களும் 
பெற்றோரும் மற்ற யாவும் 
காதலுக்குத் தடை இல்லை

புரிந்து கொள்!!!
புறப்படு கண்மணி 

ஆவேசமாக தரையில் எறிந்தேன்
கைப் பேசியை..
நொறுங்கியதில் எழுப்பிய ஒலி

என்னம்மா ஆச்சு 
கிழே விழுந்து விட்டது

சரி விடு வாப்பா ஆசையாய் 
வாங்கித் தந்தது உனக்கென்று
வேறு புதிதாக ஒன்று 
அனுப்பச் சொல்லுவோம்...

வேண்டாம் ம்மா 
அந்தச் சனியனே 
நமக்கு வேண்டாம்.

எந்தச் சனியன்...







வெள்ளி, செப்டம்பர் 16, 2011

என் புது வீடு


கலைத்துப் போடடப்பட்ட 
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை 
அவற்றின் வண்ணங்களையும் 
வடிவங்களையும் மனதில் கொண்டு 
வேகமாக ஒன்றோடொன்று 
பொருத்தினான் என்மகன் 

அவை நான் அவனுக்காக 
வாங்கித்தந்த 
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.

கொஞ்சமான நேரத்தில் 
குதித்துச் சத்தமிட்டான் 
வாப்பா இது என்வீடு ! என்று 
அருகில் சென்றேன் 
வலதுகை முஷ்டி மடக்கி 
வலது நெஞ்சில் அழுத்திய 
அவனது முகத்தில் 
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான் 

வாசற்படி தொடர 
தலைவாசலும் தரைத்தளமும் 
சன்னலும் மேல்முகடும் 
ஒவ்வொரு வண்ணங்களில் 
மிளிர்ந்தது.

செல்லமாய் அவன் தலை கலைத்து 
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது

இது என் புது வீடு 
நான் எப்போது சொல்வேன்

கரையேற நிற்கும் 
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட 
பெற்றவர்களும் 
பொறியியல் படிக்கும் 
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும் 
விசேச நாட்களும்...

சிதிலமடைந்து 
காரை பெயர்ந்த 
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில் 
பழகிப் போன 
இதே கவலையுடன்
நான்......


எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!! 




கலைத்துப் போடடப்பட்ட 
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை 
அவற்றின் வண்ணங்களையும் 
வடிவங்களையும் மனதில் கொண்டு 
வேகமாக ஒன்றோடொன்று 
பொருத்தினான் என்மகன் 

அவை நான் அவனுக்காக 
வாங்கித்தந்த 
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.

கொஞ்சமான நேரத்தில் 
குதித்துச் சத்தமிட்டான் 
வாப்பா இது என்வீடு ! என்று 
அருகில் சென்றேன் 
வலதுகை முஷ்டி மடக்கி 
வலது நெஞ்சில் அழுத்திய 
அவனது முகத்தில் 
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான் 

வாசற்படி தொடர 
தலைவாசலும் தரைத்தளமும் 
சன்னலும் மேல்முகடும் 
ஒவ்வொரு வண்ணங்களில் 
மிளிர்ந்தது.

செல்லமாய் அவன் தலை கலைத்து 
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது

இது என் புது வீடு 
நான் எப்போது சொல்வேன்

கரையேற நிற்கும் 
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட 
பெற்றவர்களும் 
பொறியியல் படிக்கும் 
இளைய தம்பியும்
விட்டுச்செலவுகளும் 
விசேச நாட்களும்...

சிதிலமடைந்து 
காரை பெயர்ந்த 
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில் 
பழகிப் போன 
இதே கவலையுடன்
நான்......


எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!! 



செவ்வாய், செப்டம்பர் 13, 2011

விந்தையான நண்பர்கள் - வித்தை தெரிந்தவர்கள்





இன்பமாய்க் கழிய்ம் இனிய தருணங்கள் 
இன்னலாய் மாறிடும் விந்தையும் ஏனோ 
இன்றெனக் கதன் விடை விளக்கிடுவாரோ 
இதுதானோ இவருறவு தவிக்கின்றேன் 


கன்னல் மொழி பேசி களிக்கவைத்த நட்பு
கடுமொழி சொல்வதனால் காயந்தான் ஆகாதோ 
காற்றில் அலைவழியே என்கல்பை நிறைத்தவனே 
தூற்றிய வார்த்தைகண்டு துவண்டு நிற்கின்றேன் 


நேசத்தின் பிம்பமாய் உன்நட்பு என்னோடு 
வாசத்தின் மலர்ச்செண் டேஉன் மணம் நெஞ்சோடு 
பாசத்தின் பனிஊற்றே பரம்பொருளின் நாமத்தானே
பூசல் தான் என்ன புரியாமல் தவிக்கின்றேன் 


இதயத்தை உளிகொண்டு இரண்டாகத் திறந்தாலும்
இன்பக்கனியாய் நீ அங்கிருப்பதைக் காண்பாய்
சிதைத்தபின் சேர்ந்திடுமோ சேதமான அவ்விதயம் 
சிந்தித் துணர்ந்திடு நட்பின் சூத்திரத்தை 


ஆறாத துயரன்றோ அச்சமின்றி நீ செய்தது 
சேராத இடம் சேர்ந்து செய்ததன்றோ இப்பிழையும்
நீரடித்து நீர்விலகாதென் றெண்ணி இருந்தேனே 
நீர்த்துப் போச் சய்யகோ நம்முறவு இன்றோடு ...

                                                                                                                                                                   





இன்பமாய்க் கழிய்ம் இனிய தருணங்கள் 
இன்னலாய் மாறிடும் விந்தையும் ஏனோ 
இன்றெனக் கதன் விடை விளக்கிடுவாரோ 
இதுதானோ இவருறவு தவிக்கின்றேன் 


கன்னல் மொழி பேசி களிக்கவைத்த நட்பு
கடுமொழி சொல்வதனால் காயந்தான் ஆகாதோ 
காற்றில் அலைவழியே என்கல்பை நிறைத்தவனே 
தூற்றிய வார்த்தைகண்டு துவண்டு நிற்கின்றேன் 


நேசத்தின் பிம்பமாய் உன்நட்பு என்னோடு 
வாசத்தின் மலர்ச்செண் டேஉன் மணம் நெஞ்சோடு 
பாசத்தின் பனிஊற்றே பரம்பொருளின் நாமத்தானே
பூசல் தான் என்ன புரியாமல் தவிக்கின்றேன் 


இதயத்தை உளிகொண்டு இரண்டாகத் திறந்தாலும்
இன்பக்கனியாய் நீ அங்கிருப்பதைக் காண்பாய்
சிதைத்தபின் சேர்ந்திடுமோ சேதமான அவ்விதயம் 
சிந்தித் துணர்ந்திடு நட்பின் சூத்திரத்தை 


ஆறாத துயரன்றோ அச்சமின்றி நீ செய்தது 
சேராத இடம் சேர்ந்து செய்ததன்றோ இப்பிழையும்
நீரடித்து நீர்விலகாதென் றெண்ணி இருந்தேனே 
நீர்த்துப் போச் சய்யகோ நம்முறவு இன்றோடு ...

                                                                                                                                                                   

திங்கள், செப்டம்பர் 12, 2011

மாக்கோலம்



அன்றும் வழக்கம் போல கோலப் பொடியை
எடுத்தவாறு வாசலில் குத்தவைத்தாள்  அக்கா 
அடுக்கடுக்கான புள்ளிகள் வைத்தாள் 
அதனை இலகுவாக இணைக்கவும் செய்தாள்
அவளது விரலின் நளினமும் வளைதலும 

பதினெட்டு வயதில் மணம் முடித்து 
மச்சானோடு போய் மறுமாசம் திரும்பியவள் 
மாமியாரின் மரணத்தினால் மறுபடியும் 
கூப்பிடப்படாமல் எங்களோடு வாழ்பவள்..


சில நேரம் அவளது முகம் சோர்ந்து இருக்கும்
அழுதிருப்பாள் போல 
வழக்கமாகிவிட்டது 
இரண்டே உடுப்புகளை மட்டும் 
துவைத்து உடுத்துக் கொள்வாள்.


தனியாகவே இருப்பாள் எதிலும் படமாட்டாள் 
சில நேரம் மிகுந்த கோபமாக இருப்பாள் 
பெரும்பாலும் அமைதி தான் 
நான் நேசிக்கும் அவள் 
என் அன்புள்ள அக்கா


அவளின் மனசு நிறைய புள்ளிகள்
இணைக்க முடியாத கோடுகளுடன் இருந்தது
நல்ல ரசனையுள்ள அழகான அக்கா 
அவளது கோலத்தைப் போலவே....



அன்றும் வழக்கம் போல கோலப் பொடியை
எடுத்தவாறு வாசலில் குத்தவைத்தாள்  அக்கா 
அடுக்கடுக்கான புள்ளிகள் வைத்தாள் 
அதனை இலகுவாக இணைக்கவும் செய்தாள்
அவளது விரலின் நளினமும் வளைதலும 

பதினெட்டு வயதில் மணம் முடித்து 
மச்சானோடு போய் மறுமாசம் திரும்பியவள் 
மாமியாரின் மரணத்தினால் மறுபடியும் 
கூப்பிடப்படாமல் எங்களோடு வாழ்பவள்..


சில நேரம் அவளது முகம் சோர்ந்து இருக்கும்
அழுதிருப்பாள் போல 
வழக்கமாகிவிட்டது 
இரண்டே உடுப்புகளை மட்டும் 
துவைத்து உடுத்துக் கொள்வாள்.


தனியாகவே இருப்பாள் எதிலும் படமாட்டாள் 
சில நேரம் மிகுந்த கோபமாக இருப்பாள் 
பெரும்பாலும் அமைதி தான் 
நான் நேசிக்கும் அவள் 
என் அன்புள்ள அக்கா


அவளின் மனசு நிறைய புள்ளிகள்
இணைக்க முடியாத கோடுகளுடன் இருந்தது
நல்ல ரசனையுள்ள அழகான அக்கா 
அவளது கோலத்தைப் போலவே....

உறவுகளைக் காணவில்லை





















பனிரண்டு வயசிலும் எனை இடுப்பில் சுமந்து
கண்கொத்திப் பாம்பாய் என் நல்லது கெட்டதுகளை 
எனக்குச்சொல்லிய என் மீது உயிராய் இருந்து 
பாசத்தை எனக்கு மட்டும் அளித்த 
உம்மாவைக் காணவில்லை 
அவளுக்கு இப்போது பேரன் பேத்திகள் 
தான் உலகமாயிற்று 

தோழி தந்த தின் பண்டத்தை ஒளித்து வைத்து
என் தம்பி ஆசையாய் தின்பான் என்றும்
அங்கே போகாதே அதைச் செய்யாதே...
என் வேலியாய் எனைச் சூழ்ந்து என்னைப் பேணி
அன்புடன் கவனித்த அக்காவையும் காணவில்லை
அவளுக்குத தன வீடு தன்கணவர் மற்றும் தன்பிள்ளைகள்
தான் உலகமாயிற்று

எங்கெல்லாம் சுற்றினாலும் என்னையும் கைசேர்த்து
விளையாட பள்ளிக்கூடம் சினிமா கடைவீதி
பங்கு வைத்து பகிர்ந்து தின்ற பண்டங்கள் 
எச்சில் நனைந்த இத்தனை நினைவுகளும் 
நட்புடன் பகிர்ந்த நண்பர்களைக் காணோம்
பணியும் பிணியும் பிள்ளைகளும் மனைவியுமாய்
அவர்களின் உலகம் மாறிவிட்டது...

என் தம்பி என் உயிர் அவன் எங்கள் செல்லம்
தன் காசையும் எனக்குத் தந்து செலவு செய்வதை 
ஆசையுடன் கண்டு வாஞ்சையுடன் எனை வளர்த்த 
அண்ணன் அவனது இரக்க குணமுள்ள அன்பு 
இவையெல்லாம் போன இடம் தெரியவில்லை
அவனுக்கு அவன் மனைவி அவன் பிள்ளைகள் 
அவனை பதினாறு ஆண்டுகளாக சந்திக்க கூடஇல்லை 

 நாலணாவுக்கு கடன் தந்தாலும் திருப்பிக் கேட்காத 
அத்தா கடையும் இல்லை அவரது அன்பும் இல்லை 
நல்லம்மாவின் வெற்றிலை எச்சில் படிந்த 
எங்கள் வீ ட்டு சுவர் கூட இன்று இல்லை 
திண்ணையில் பாய் விரித்து அமர்ந்து திட்டினாலும்
எனக்கு அரபு பாடத்தை அன்பாய் கற்றுத்தந்த நல்லாப்பா 
ஒரு நாளைக்கு பள்ளிக்கு வராவிட்டாலும் 
வீட்டுக்கு ஓடிவந்து விவரம் சொல்லி என்னை 
அடித்தாலும் அன்பொழுகக் கற்றுத்தந்த ஆசிரியர்கள் 
யாரும் இன்று என்னுடன் அப்படி இல்லை...

அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும் 
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய 
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...




















பனிரண்டு வயசிலும் எனை இடுப்பில் சுமந்து
கண்கொத்திப் பாம்பாய் என் நல்லது கெட்டதுகளை 
எனக்குச்சொல்லிய என் மீது உயிராய் இருந்து 
பாசத்தை எனக்கு மட்டும் அளித்த 
உம்மாவைக் காணவில்லை 
அவளுக்கு இப்போது பேரன் பேத்திகள் 
தான் உலகமாயிற்று 

தோழி தந்த தின் பண்டத்தை ஒளித்து வைத்து
என் தம்பி ஆசையாய் தின்பான் என்றும்
அங்கே போகாதே அதைச் செய்யாதே...
என் வேலியாய் எனைச் சூழ்ந்து என்னைப் பேணி
அன்புடன் கவனித்த அக்காவையும் காணவில்லை
அவளுக்குத தன வீடு தன்கணவர் மற்றும் தன்பிள்ளைகள்
தான் உலகமாயிற்று

எங்கெல்லாம் சுற்றினாலும் என்னையும் கைசேர்த்து
விளையாட பள்ளிக்கூடம் சினிமா கடைவீதி
பங்கு வைத்து பகிர்ந்து தின்ற பண்டங்கள் 
எச்சில் நனைந்த இத்தனை நினைவுகளும் 
நட்புடன் பகிர்ந்த நண்பர்களைக் காணோம்
பணியும் பிணியும் பிள்ளைகளும் மனைவியுமாய்
அவர்களின் உலகம் மாறிவிட்டது...

என் தம்பி என் உயிர் அவன் எங்கள் செல்லம்
தன் காசையும் எனக்குத் தந்து செலவு செய்வதை 
ஆசையுடன் கண்டு வாஞ்சையுடன் எனை வளர்த்த 
அண்ணன் அவனது இரக்க குணமுள்ள அன்பு 
இவையெல்லாம் போன இடம் தெரியவில்லை
அவனுக்கு அவன் மனைவி அவன் பிள்ளைகள் 
அவனை பதினாறு ஆண்டுகளாக சந்திக்க கூடஇல்லை 

 நாலணாவுக்கு கடன் தந்தாலும் திருப்பிக் கேட்காத 
அத்தா கடையும் இல்லை அவரது அன்பும் இல்லை 
நல்லம்மாவின் வெற்றிலை எச்சில் படிந்த 
எங்கள் வீ ட்டு சுவர் கூட இன்று இல்லை 
திண்ணையில் பாய் விரித்து அமர்ந்து திட்டினாலும்
எனக்கு அரபு பாடத்தை அன்பாய் கற்றுத்தந்த நல்லாப்பா 
ஒரு நாளைக்கு பள்ளிக்கு வராவிட்டாலும் 
வீட்டுக்கு ஓடிவந்து விவரம் சொல்லி என்னை 
அடித்தாலும் அன்பொழுகக் கற்றுத்தந்த ஆசிரியர்கள் 
யாரும் இன்று என்னுடன் அப்படி இல்லை...

அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும் 
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய 
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் - Happy Onam...


அன்புச் சகோதரர்களே
தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் 15 மைலில் பக்கத்திலே சூழ்ந்து நிற்கும் தென் பொதிகை மலையடிவாரத்தில் எங்களோடு கூடி வாழும் மொழி கடந்த மக்களுக்கும் மலையாள மண்ணின் மணம் விசும் அனைத்து கலாச்சாரமும் வேரோடிவிட்ட மனித உறவுகளுக்கும் என் மனம் கனிந்த ஓணம் பண்டிகை
வாழ்த்துக்கள்..

wish you a very happy onam ...
oh my love
it brings you a happy and pleasant moments in your life...





அன்புச் சகோதரர்களே
தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் 15 மைலில் பக்கத்திலே சூழ்ந்து நிற்கும் தென் பொதிகை மலையடிவாரத்தில் எங்களோடு கூடி வாழும் மொழி கடந்த மக்களுக்கும் மலையாள மண்ணின் மணம் விசும் அனைத்து கலாச்சாரமும் வேரோடிவிட்ட மனித உறவுகளுக்கும் என் மனம் கனிந்த ஓணம் பண்டிகை
வாழ்த்துக்கள்..

wish you a very happy onam ...
oh my love
it brings you a happy and pleasant moments in your life...




வியாழன், செப்டம்பர் 08, 2011

நிம்மதியே நிரந்தரம்




ரௌத்திரம் பொங்க
நடுக்கத்தில்
நாசமாய் போனவனே என்றேன்
நாகாசாகி யையும் ஹிரோஷிமவை
நன்றாகப் புரிந்தவர் நீங்கள் என்றான்

கரியாப் போனவனனே
கரித்துக் கொட்டினேன் மறுபடியும்
விலை மதிப்பற்ற வைரமா நான்
விவரமாய்ச் சொன்னிர்கள் என்றான்

கேடு கெட்டவனே என்ற போது
வாழ்த்துக்கு நன்றி என்றான்
கேடு கெட்டால் நல்லதே விளையும்
கோபத்திலும் குணமாய் பேசுகிர்கள்...

மாணவனின் மதிநுட்பம்
மனதை மலரச்செய்ய
உண்மையை உணர்ந்தேன்
வார்த்தைகள் வாழ்க்கையாவதில்லை

வாழ்க்கையில் வழியில் காணும்
துரோகங்களுக்கும் சோகத்திற்கும்
சுகமாக வழிவிட்டு
சந்தோஷிக்கும் நொடிகள் அழகு

மனதில் கொண்டால் மனம் மகிழ்ந்தால்
உறவுகள் கள்ளம் இல்லை இனி
பிரிவுகளும் இல்லை - இங்கு எல்லாம்
தாமரை இலைத் தண்ணீர் போல்

என்னால் உன் மனதில் காயம் பட்டால்
என் குருதியே அதைக் குணப்படுத்துமெனில்
கொத்திக் கீறி கொண்டு போ மகிழ்ச்சியுடன்
கொஞ்சம் நானும் மகிழ்வேன் உனைப் பார்த்து

நீ வேண்டும் நண்பா உன்னால்
நிம்மதி என்றால் மட்டுமே
நீ வேண்டாம் உன்னால்
நிம்மதி கெடும் என்றால் 
போதுமே ...





ரௌத்திரம் பொங்க
நடுக்கத்தில்
நாசமாய் போனவனே என்றேன்
நாகாசாகி யையும் ஹிரோஷிமவை
நன்றாகப் புரிந்தவர் நீங்கள் என்றான்

கரியாப் போனவனனே
கரித்துக் கொட்டினேன் மறுபடியும்
விலை மதிப்பற்ற வைரமா நான்
விவரமாய்ச் சொன்னிர்கள் என்றான்

கேடு கெட்டவனே என்ற போது
வாழ்த்துக்கு நன்றி என்றான்
கேடு கெட்டால் நல்லதே விளையும்
கோபத்திலும் குணமாய் பேசுகிர்கள்...

மாணவனின் மதிநுட்பம்
மனதை மலரச்செய்ய
உண்மையை உணர்ந்தேன்
வார்த்தைகள் வாழ்க்கையாவதில்லை

வாழ்க்கையில் வழியில் காணும்
துரோகங்களுக்கும் சோகத்திற்கும்
சுகமாக வழிவிட்டு
சந்தோஷிக்கும் நொடிகள் அழகு

மனதில் கொண்டால் மனம் மகிழ்ந்தால்
உறவுகள் கள்ளம் இல்லை இனி
பிரிவுகளும் இல்லை - இங்கு எல்லாம்
தாமரை இலைத் தண்ணீர் போல்

என்னால் உன் மனதில் காயம் பட்டால்
என் குருதியே அதைக் குணப்படுத்துமெனில்
கொத்திக் கீறி கொண்டு போ மகிழ்ச்சியுடன்
கொஞ்சம் நானும் மகிழ்வேன் உனைப் பார்த்து

நீ வேண்டும் நண்பா உன்னால்
நிம்மதி என்றால் மட்டுமே
நீ வேண்டாம் உன்னால்
நிம்மதி கெடும் என்றால் 
போதுமே ...


உறவுகள் என்னோடு




எங்களின் விட்டில்
ஒரு பூனையின் குடும்பம்
ஒரு குட்டியும் போட்டுக் கொண்டு 
இங்கும் அங்குமாக 
உலவுவதும் 
மவ்வொலிப்பதும்
சில சமயம் 
மருகுவதும் அறிவேன் 


அதன் வண்ணம் 
குட்டியிடம் காட்டும் பாசம் 
எல்லாந் தெரியும்


நான் அதற்கு 
இதுவரை உணவளித்ததில்லை 
மடியமர்த்தியதில்லை
விரும்பியதுமில்லை
வெறுப்பதுவுமில்லை...


அது 
என்னை வில(க்)கிய 
என் உறவுகளைப்போல்........


அவை வேறு நான் வேறு


ஆயினும் அவை என்னோடு தான்.








எங்களின் விட்டில்
ஒரு பூனையின் குடும்பம்
ஒரு குட்டியும் போட்டுக் கொண்டு 
இங்கும் அங்குமாக 
உலவுவதும் 
மவ்வொலிப்பதும்
சில சமயம் 
மருகுவதும் அறிவேன் 


அதன் வண்ணம் 
குட்டியிடம் காட்டும் பாசம் 
எல்லாந் தெரியும்


நான் அதற்கு 
இதுவரை உணவளித்ததில்லை 
மடியமர்த்தியதில்லை
விரும்பியதுமில்லை
வெறுப்பதுவுமில்லை...


அது 
என்னை வில(க்)கிய 
என் உறவுகளைப்போல்........


அவை வேறு நான் வேறு


ஆயினும் அவை என்னோடு தான்.





ஜன லோக்பால் ஒரு விளக்கம் - காணொளி



அருமையான விளக்கம் முத்துகிருஷ்ணன் சொல்லவரும் செய்தி ஸ்படிகம் போல் தெள்ளத் தெளிவாக நம் கண் வழி புகுந்து கருத்தறிவிக்கிறது ...
ஜன லோக்பால் ஒரு அதிமேதாவிகளின் அழுகுணி ஆட்டம்... இவர் இங்கே தோலுரிக்கிறார் பதிலுண்டா...

புதன், செப்டம்பர் 07, 2011

வலிமை கொண்ட நெஞ்சினன் - டெரிக்


இது ஒரு காணொளி...
ஒலிம்பிக் தடகளத்தில் 1992 ஆம் ஆண்டு கலந்து கொண்டார் டெரிக் ரெட்மொண்ட். தனது தடத்திலிருந்து சீரிக் கிளம்பிய இந்த வீரன் இடையிலேயே  தனது தொடையில் ஏற்பட்ட தசைவலியால் தட்டுத் தடுமாறி நிலைகுலைகிறார். ஆயினும் விடாது கண்ணீரோடு நொண்டிக் கொண்டு தடத்தின் முடிவு வரை தனது தந்தையின் உதவியுடன் இறுதிக் கோட்டைத் தொட... அந்தக் கணத்தில் அங்கே குழுமியிருந்த அறுபத்தைந்தாயிரம் பேரின் கரங்களும் அவர்களை அறியாமலே தட்டி அங்கே ஒலி எழுப்ப...ஈரமான விழிகளின் எண்ணிக்கை அதிகம் அது அவனது பதக்கத்தைக் காட்டிலும் பலமடங்கு உயர்ந்தது தான்...
அங்கங்கள் சிதைந்தாலும் அகம சிதையாத ஆற்றலுள்ள வீரன்...
வாழ்க டெரிக்...

இது ஒரு காணொளி...
ஒலிம்பிக் தடகளத்தில் 1992 ஆம் ஆண்டு கலந்து கொண்டார் டெரிக் ரெட்மொண்ட். தனது தடத்திலிருந்து சீரிக் கிளம்பிய இந்த வீரன் இடையிலேயே  தனது தொடையில் ஏற்பட்ட தசைவலியால் தட்டுத் தடுமாறி நிலைகுலைகிறார். ஆயினும் விடாது கண்ணீரோடு நொண்டிக் கொண்டு தடத்தின் முடிவு வரை தனது தந்தையின் உதவியுடன் இறுதிக் கோட்டைத் தொட... அந்தக் கணத்தில் அங்கே குழுமியிருந்த அறுபத்தைந்தாயிரம் பேரின் கரங்களும் அவர்களை அறியாமலே தட்டி அங்கே ஒலி எழுப்ப...ஈரமான விழிகளின் எண்ணிக்கை அதிகம் அது அவனது பதக்கத்தைக் காட்டிலும் பலமடங்கு உயர்ந்தது தான்...
அங்கங்கள் சிதைந்தாலும் அகம சிதையாத ஆற்றலுள்ள வீரன்...
வாழ்க டெரிக்...

நெய்தல் பாலையான கதை...







அங்கங்களில் பாய்ந்தோடும் செங்குருதி 
தங்கி உறைந்து நான் சடலமாகும்முன்
பொங்கிப் பீறிட்டழும் என் மனக்கடலின்
தூங்க ஒட்டாத துயர நிகழ்வுகள்

அரபுக்கடலின் அலைகளில் எந்தன் 
உறவுக் கடலைத் தொலைத்ததை சொன்னால்
இரவில் உறையும் அந்தக்கடலும் 
இறந்தே மறையும் இனிஎழும்பாது 

கடல் கடந்த வாழ்க்கையில்
காற்று வழிப் பயணத்தில் 
கால்தடம் பதித்தேன் இந்த 
கவின்மிகு அரேபியாவில் 

எட்டுமணி நேரம் இடைவெளியின்றி 
ஏசி பெட்டிகளை தோளில்  சுமந்து 
ஏணிப்படிகளில் எளிதாகக் கடத்த 
ஏறி இறங்கும் ஏழை இந்தியன்

கையில் கிடைக்கும் சொற்பக் காசும் 
கடனையடைக்கவும் காலங்கழிக்கவும் என் 
கண்மணிக் குழந்தைகள் கல்விக்காகவும்  
கருதியே நானும் களிப்புடன் கழிப்பேன்

கழித்திட்ட ஆண்டுகள் கணக்கிட வேண்டின் 
கைவிரல் எண்ணிக்கை காணாது போகும் 
களைப்புடன் நானும் பணி நீங்கி வருகையில் 
அழைத்துப் பேசுவேன் அலையில் உறவுகளை 

பெற்றவளின் மரணமும் தந்தையின் நலிவும்
பிள்ளைகளின் உடுப்பும் பள்ளிகளின் பீசும்
விலைவாசி உயர்வும் வீட்டுச்செலவும் 
வேறென்ன இவைதான் எனக் கன்றாடம்

பிணக்குகள் தோன்றும் காசுதான் காரணம்
பின்னர் சரியாவதற்கும் காசுதான் காரணம் 
தனக்கென எதுவுமின்றி கணக்குகள் பார்த்தால் 
கையில் இருப்பு என் நோயுற்ற உடலம் 

நல்லறமாகவே நடக்குதென் இல்லறம் 
நாடு கடந்தும் நாட்டங்கள் என்னுடன் 
அல்லும் பகலும் உறவுகளின் நினைப்பில்
அலைவழி தானே அன்பின் பரிமாற்றம்...






அங்கங்களில் பாய்ந்தோடும் செங்குருதி 
தங்கி உறைந்து நான் சடலமாகும்முன்
பொங்கிப் பீறிட்டழும் என் மனக்கடலின்
தூங்க ஒட்டாத துயர நிகழ்வுகள்

அரபுக்கடலின் அலைகளில் எந்தன் 
உறவுக் கடலைத் தொலைத்ததை சொன்னால்
இரவில் உறையும் அந்தக்கடலும் 
இறந்தே மறையும் இனிஎழும்பாது 

கடல் கடந்த வாழ்க்கையில்
காற்று வழிப் பயணத்தில் 
கால்தடம் பதித்தேன் இந்த 
கவின்மிகு அரேபியாவில் 

எட்டுமணி நேரம் இடைவெளியின்றி 
ஏசி பெட்டிகளை தோளில்  சுமந்து 
ஏணிப்படிகளில் எளிதாகக் கடத்த 
ஏறி இறங்கும் ஏழை இந்தியன்

கையில் கிடைக்கும் சொற்பக் காசும் 
கடனையடைக்கவும் காலங்கழிக்கவும் என் 
கண்மணிக் குழந்தைகள் கல்விக்காகவும்  
கருதியே நானும் களிப்புடன் கழிப்பேன்

கழித்திட்ட ஆண்டுகள் கணக்கிட வேண்டின் 
கைவிரல் எண்ணிக்கை காணாது போகும் 
களைப்புடன் நானும் பணி நீங்கி வருகையில் 
அழைத்துப் பேசுவேன் அலையில் உறவுகளை 

பெற்றவளின் மரணமும் தந்தையின் நலிவும்
பிள்ளைகளின் உடுப்பும் பள்ளிகளின் பீசும்
விலைவாசி உயர்வும் வீட்டுச்செலவும் 
வேறென்ன இவைதான் எனக் கன்றாடம்

பிணக்குகள் தோன்றும் காசுதான் காரணம்
பின்னர் சரியாவதற்கும் காசுதான் காரணம் 
தனக்கென எதுவுமின்றி கணக்குகள் பார்த்தால் 
கையில் இருப்பு என் நோயுற்ற உடலம் 

நல்லறமாகவே நடக்குதென் இல்லறம் 
நாடு கடந்தும் நாட்டங்கள் என்னுடன் 
அல்லும் பகலும் உறவுகளின் நினைப்பில்
அலைவழி தானே அன்பின் பரிமாற்றம்...

ஊருக்கு நாலு பேர் - குறும்படம் அசத்தல்


இது ஒரு குறும்படம் ஊருக்கு நாலு பேர் இது தான் இப்படத்தின் தலைப்பு.
கொஞ்சம் பாருங்கள் உங்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் விட்டு விடுகிறேன்...

திங்கள், செப்டம்பர் 05, 2011

அய்சாம்மா - மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல்...அப்துல்லாஹ் பதிவு : 2



தாய்க் கிழவி மூளி


ஒரே சத்தமாக சிறுவர்கள் இரைந்து பாடும் ஓசை..

தாய்க் கிழவி மூளி
தண்ணி இறைக்கும் வாளி 
தட்டான் குடிக்குப் போவாத
தாலி கெட்டி நிக்காத...

என்ன இது குழப்பத்தில் கொஞ்சம் எழுந்து வாசல் பக்கம் வந்து பார்வையிட்டேன்.தெருவில் முக்கடி விடு என்னுடையது. ஜன்னலைத் திறந்தால் ஜனங்களின் நடமாட்டம் எளிதில் கண்ணுக்குக் கிட்டும்.அந்த சந்தில் 
முக்கில் சிறுவர்கள் ஏழெட்டுப் பையன்கள் ஒரு வயதான பெண்ணை அதுவும் தடுமாறி நடக்கச் சிரமப்படும் ஒரு மூதாட்டியை சூழ்ந்து கொண்டு இன்னல கொடுப்பதை காண முடிந்தது...
கிராமங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. சிறுவர்கள் கையில் பொம்மைகள் இருந்தால் நலம் ஆனால் சில நேரம் மன நலம் பிறழ்ந்த மனிதர்கள் மாட்டிக் கொண்டால் உண்டு இல்லை என்று பண்ணுவார்கள்...நானும் அந்தப் பருவம் கடந்தவன் தானே.
இப்பொழுத தான் இந்த ஊருக்கு சிறிது இடைவெளி கொடுத்திருக்கிறேன். ஆமாம் நான் பிறந்து படித்தது எல்லாமே இங்கு தான்.எனது பத்தாம் வகுப்பில் தாயார் மரணமடைய அனாதையாய் விடப்பட்டேன். வாப்பா எனது இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் படிக்கையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். என் இரண்டு சகோதரிகள் பின்னர் திருமணம் செய்து கொடுக்க என் வருமானமே அவருக்கு தேவை என்பதால் கடன வுடன வாங்கி என்ன படிக்க வச்சார்...நானும் படிச்சு நல்ல மதிப்பெண் ஈட்டினேன்.
என் தாயாரைத் தவிர அவரது தம்பிமார்கள் கடல் கடந்து வறுமைக்கு பிழைக்க பெற்றோருடன் மலேசியா சென்று அங்கே தங்கி வாழ்ந்து வந்தனர். ஊருக்கு வரும்போது எங்களின் வீட்டில் தான் தங்குவர்.அப்படி ஒரு என் தாயுடன் பிறந்த எனது தாய் மாமன் தன மகளை எனக்குக் கட்டித் தருவதறக்குஎண்ணி என்னை தன்னுடனே வைத்துக்கொள்ள ஆசைப் பட்டார். எனக்கும் பாஸ்போர்ட் எடுத்து தன்னுடன் அழைத்துக் கொண்டார்...
தாய் இல்லாமல் கடந்த ஒரு சில நாட்களில் எனது சாப்பாட்டு பொழப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. அபோது என்னுடன் படித்த நண்பன் சேகனா வீட்டில் அவனது தாய் அய்சாம்மா வாய் நிறையக் கூப்பிடும்
அன்சாரி இங்க நம்ம விட்டில சாப்பிடுன்னு சொல்லி வாஞ்சையா என்னை மடியில் அணைச்சிக்கிடும். தங்கமான மனுஷி... பெரும்பாலான தடவை ரசமும் சோறும் சுடச்சுட சாப்பிடுவேன்..அந்த ம்மா எனக்கு இன்னும் மனசுக்குள் சோறு மணக்க இருக்கிறாள். 
சரி வாங்க இப்ப நான் வந்தது பத்து வருசத்த கழிச்சிட்டுத்தான்.இங்க நெலம எல்லாமே இப்ப தல கீழ். விடுகட்டியாச்சு தங்கச்சிமார கரை சேர்த்தாச்சு...கையில் ஒரு குட்டி மகளுடன் மலேசிய மனைவியுடன் என்னுடைய மண்ணில் நான் நிக்கிறேன் அதே பழைய அன்சாரி...
வெளிய எஞ்சு போய் பார்த்தேன்.சிறுவர்களை விலக்கிவிட்டு வயதான அந்தத்தாயின் வடிவை பார்த்த உடன ஆயிரம் வாட்ஸ் கரண்ட கையக் கொண்டு தொட்ட மாதிரி ஒரு அதிர்ச்சி...கால்கள் வலுவை இழந்து என்னுடைய ஆதாரம் சேதாரமா உணர்ந்து என்னை நான் இழந்து பிடறிஎல்லாம் வேர்க்க விருவிருக்க நின்னுட்டேன். 
அய்சாம்மா..
அந்தத் தாய் அவள் தான் என உணர மனம் மறுத்தது...என்னவாச்சு... சேகனா எங்கே? 
அருகிலிருந்தவர் சொன்னார் ஒரே மகன் கலியாணம் கட்டிய மருமகள், இவரள் தான் பார்த்துக் கட்டிவச்சா.மாமிக்கும் மருமகளுக்கும் சண்டை அவனுக்கு ஒத்து போகலை.வெளிய திரியுது. அவன் பொன்டாட்டி சொல்லக் கேட்டுக் கிட்டு அய்சாம்மாவை இப்படி அனாதையாய் விட்டுட்டான்.

மனுஷன் தானே நானும் மடை உடைத்து வெள்ளமாய் கண்ணிர் பீரிடஅப்படியே வெளிக்காட்ட முடியாமல் துடைத்து அந்தத் தாயை கையை பற்றினேன்.மன நலம் தவறிய அவள் தன குச்சியால் ஒரு அடி என மண்டையில்...
வலித்தது மனசு...
போறியா இல்லியா ...நாய் பெத்த மக்களே... கரவா போவானுவோ...கையில் உள்ள குச்சியால் தரையில் அடித்தாள். தெளிவற்ற கண் பார்வையால் விளங்கியும் விளங்காமலும் ஒரு பார்வை கண்ணில் தளும்பிய நிரை துடைத்துவிட்டு அழுக்கான அய்சாம்மா போப்பா போன்னு..தள்ளிவிட்டாள்.

அன்ஸ் வாட் ஹாப்பன் டியர் ...அருகில் முழுவதும் அலங்கரித்து அந்த மண்ணுக்கே தொடர்பில்லாத ஆடையுடன் என மனைவியும் மகளும் ...
நத்திங் மா...பேசிக்கொண்டே நகர்ந்தேன்.என்னுடன் வர மறுத்த மனசை விட்டுவிட்டு கால்கள் மனைவியுடன்...


நண்பர் சொல்லக் கேட்டு எழுதும் போது ஒரு நாப்பது வயசு பிள்ளை அழுதுக்கிட்டு எழுதுது...என்ன எழுத்த தட்டச்சு செய்றேன்னு என ஈரக் கண்ணைத் தாண்டி காணுவது கஷ்டமாயிருக்கு.
ம்மா மார்கள அல்லாஹ் நமக்கு எதுக்கு குடுத்தான் இப்படி...
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன் இவனுக இடது நெஞ்சுக்குள் இடிச்சிக்கிட்டிருக்கிறது இதயமில்ல எதோ எந்திரம் தான்...

தாயின் காலடியில் இறைவன் சொர்க்கத்தை வச்சிருக்கான்...எந்தப் பெற்றோராலும் சீ என்று சொல்லப்பட்ட மகன் சொர்க்கம் புக முடியாது... இவை வேத வார்த்தையும் நபி மொழிகளும்..




தாய்க் கிழவி மூளி


ஒரே சத்தமாக சிறுவர்கள் இரைந்து பாடும் ஓசை..

தாய்க் கிழவி மூளி
தண்ணி இறைக்கும் வாளி 
தட்டான் குடிக்குப் போவாத
தாலி கெட்டி நிக்காத...

என்ன இது குழப்பத்தில் கொஞ்சம் எழுந்து வாசல் பக்கம் வந்து பார்வையிட்டேன்.தெருவில் முக்கடி விடு என்னுடையது. ஜன்னலைத் திறந்தால் ஜனங்களின் நடமாட்டம் எளிதில் கண்ணுக்குக் கிட்டும்.அந்த சந்தில் 
முக்கில் சிறுவர்கள் ஏழெட்டுப் பையன்கள் ஒரு வயதான பெண்ணை அதுவும் தடுமாறி நடக்கச் சிரமப்படும் ஒரு மூதாட்டியை சூழ்ந்து கொண்டு இன்னல கொடுப்பதை காண முடிந்தது...
கிராமங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. சிறுவர்கள் கையில் பொம்மைகள் இருந்தால் நலம் ஆனால் சில நேரம் மன நலம் பிறழ்ந்த மனிதர்கள் மாட்டிக் கொண்டால் உண்டு இல்லை என்று பண்ணுவார்கள்...நானும் அந்தப் பருவம் கடந்தவன் தானே.
இப்பொழுத தான் இந்த ஊருக்கு சிறிது இடைவெளி கொடுத்திருக்கிறேன். ஆமாம் நான் பிறந்து படித்தது எல்லாமே இங்கு தான்.எனது பத்தாம் வகுப்பில் தாயார் மரணமடைய அனாதையாய் விடப்பட்டேன். வாப்பா எனது இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் படிக்கையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். என் இரண்டு சகோதரிகள் பின்னர் திருமணம் செய்து கொடுக்க என் வருமானமே அவருக்கு தேவை என்பதால் கடன வுடன வாங்கி என்ன படிக்க வச்சார்...நானும் படிச்சு நல்ல மதிப்பெண் ஈட்டினேன்.
என் தாயாரைத் தவிர அவரது தம்பிமார்கள் கடல் கடந்து வறுமைக்கு பிழைக்க பெற்றோருடன் மலேசியா சென்று அங்கே தங்கி வாழ்ந்து வந்தனர். ஊருக்கு வரும்போது எங்களின் வீட்டில் தான் தங்குவர்.அப்படி ஒரு என் தாயுடன் பிறந்த எனது தாய் மாமன் தன மகளை எனக்குக் கட்டித் தருவதறக்குஎண்ணி என்னை தன்னுடனே வைத்துக்கொள்ள ஆசைப் பட்டார். எனக்கும் பாஸ்போர்ட் எடுத்து தன்னுடன் அழைத்துக் கொண்டார்...
தாய் இல்லாமல் கடந்த ஒரு சில நாட்களில் எனது சாப்பாட்டு பொழப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. அபோது என்னுடன் படித்த நண்பன் சேகனா வீட்டில் அவனது தாய் அய்சாம்மா வாய் நிறையக் கூப்பிடும்
அன்சாரி இங்க நம்ம விட்டில சாப்பிடுன்னு சொல்லி வாஞ்சையா என்னை மடியில் அணைச்சிக்கிடும். தங்கமான மனுஷி... பெரும்பாலான தடவை ரசமும் சோறும் சுடச்சுட சாப்பிடுவேன்..அந்த ம்மா எனக்கு இன்னும் மனசுக்குள் சோறு மணக்க இருக்கிறாள். 
சரி வாங்க இப்ப நான் வந்தது பத்து வருசத்த கழிச்சிட்டுத்தான்.இங்க நெலம எல்லாமே இப்ப தல கீழ். விடுகட்டியாச்சு தங்கச்சிமார கரை சேர்த்தாச்சு...கையில் ஒரு குட்டி மகளுடன் மலேசிய மனைவியுடன் என்னுடைய மண்ணில் நான் நிக்கிறேன் அதே பழைய அன்சாரி...
வெளிய எஞ்சு போய் பார்த்தேன்.சிறுவர்களை விலக்கிவிட்டு வயதான அந்தத்தாயின் வடிவை பார்த்த உடன ஆயிரம் வாட்ஸ் கரண்ட கையக் கொண்டு தொட்ட மாதிரி ஒரு அதிர்ச்சி...கால்கள் வலுவை இழந்து என்னுடைய ஆதாரம் சேதாரமா உணர்ந்து என்னை நான் இழந்து பிடறிஎல்லாம் வேர்க்க விருவிருக்க நின்னுட்டேன். 
அய்சாம்மா..
அந்தத் தாய் அவள் தான் என உணர மனம் மறுத்தது...என்னவாச்சு... சேகனா எங்கே? 
அருகிலிருந்தவர் சொன்னார் ஒரே மகன் கலியாணம் கட்டிய மருமகள், இவரள் தான் பார்த்துக் கட்டிவச்சா.மாமிக்கும் மருமகளுக்கும் சண்டை அவனுக்கு ஒத்து போகலை.வெளிய திரியுது. அவன் பொன்டாட்டி சொல்லக் கேட்டுக் கிட்டு அய்சாம்மாவை இப்படி அனாதையாய் விட்டுட்டான்.

மனுஷன் தானே நானும் மடை உடைத்து வெள்ளமாய் கண்ணிர் பீரிடஅப்படியே வெளிக்காட்ட முடியாமல் துடைத்து அந்தத் தாயை கையை பற்றினேன்.மன நலம் தவறிய அவள் தன குச்சியால் ஒரு அடி என மண்டையில்...
வலித்தது மனசு...
போறியா இல்லியா ...நாய் பெத்த மக்களே... கரவா போவானுவோ...கையில் உள்ள குச்சியால் தரையில் அடித்தாள். தெளிவற்ற கண் பார்வையால் விளங்கியும் விளங்காமலும் ஒரு பார்வை கண்ணில் தளும்பிய நிரை துடைத்துவிட்டு அழுக்கான அய்சாம்மா போப்பா போன்னு..தள்ளிவிட்டாள்.

அன்ஸ் வாட் ஹாப்பன் டியர் ...அருகில் முழுவதும் அலங்கரித்து அந்த மண்ணுக்கே தொடர்பில்லாத ஆடையுடன் என மனைவியும் மகளும் ...
நத்திங் மா...பேசிக்கொண்டே நகர்ந்தேன்.என்னுடன் வர மறுத்த மனசை விட்டுவிட்டு கால்கள் மனைவியுடன்...


நண்பர் சொல்லக் கேட்டு எழுதும் போது ஒரு நாப்பது வயசு பிள்ளை அழுதுக்கிட்டு எழுதுது...என்ன எழுத்த தட்டச்சு செய்றேன்னு என ஈரக் கண்ணைத் தாண்டி காணுவது கஷ்டமாயிருக்கு.
ம்மா மார்கள அல்லாஹ் நமக்கு எதுக்கு குடுத்தான் இப்படி...
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன் இவனுக இடது நெஞ்சுக்குள் இடிச்சிக்கிட்டிருக்கிறது இதயமில்ல எதோ எந்திரம் தான்...

தாயின் காலடியில் இறைவன் சொர்க்கத்தை வச்சிருக்கான்...எந்தப் பெற்றோராலும் சீ என்று சொல்லப்பட்ட மகன் சொர்க்கம் புக முடியாது... இவை வேத வார்த்தையும் நபி மொழிகளும்..


சனி, செப்டம்பர் 03, 2011

நான் மனிதன்..abdhullah




பதிவு 1

பறந்து கிடக்கும் இந்தப் பார் முழுவதும் இணையத்தில் தமிழ் தளங்கள் இறைந்துகிடக்கின்றன...அப்படி ஒன்றில் நானும் அங்கத்தினன்...ஒரு நல்ல வாசகன் அருமையான பதிவு ஒன்றை இட்டான்...பதிவு நான் சார்ந்திருக்கும் மதத்திற்கு அப்பாற்பட்டது அதே நேரத்தில் அதன் கருத்துக்களில் ஒன்றிப் போன நான் அதற்க்கு ஒரு பின்னுட்டமும் இட்டேன்...
அருமை எனக்குப் பிடித்திருக்கிறதென்று...
உண்மை தான் என்னைப் பொறுத்த மட்டில் எப்பொருளிலும் மெய்ப்பொருள் தான் எனக்கு முக்கியம்...பெயரில் என்ன இருக்கிறது...அல்லா சிவன் இயேசு இவை பெயர் தான் எனக் கருதுபவன் நான். வழிபாட்டில் இறைவன் என்ற பரம்பொருள் ஒன்று மட்டுமே அதன் ஜிவனுள்ள கரு...இது என் கருத்து.
ஐவேளை தொழுபவன் இறைவனை எல்லா நேரமும் அஞ்சுபவன் நான் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு முரணான எந்தக் காரியங்களையும் மனத்தால் கூட தொடாதவன்...என் மாற்று மத சகோதரனுக்கு அவனது பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி பின்னுட்டமிடுகிறேன்...அவ்விதம் சொல்வது எனக்கும் அவனுக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றால் இதில் மனிதாபிமானம் ஒன்று தான் விஞ்சி நிற்க முடியுமே ஒழிய நான் அவனது மதம் தான் சிறந்ததென்று கருதி என் மதத்தை இழிவு படுத்த வில்லை...ஆனால் என் பின்னுட்டத்தினை மேற்கோள் காட்டி விளம்பரமாக்கினால்...அது பக்கா அடாவடித்தனம் தான்...

நான் மனிதன், இந்தியன், முஸ்லிம், என் தாய் நாட்டை வெறித்தனமாக நேசிக்கும் ஒரு தேசபக்தன்...உலக முழுமையும் வாழும் முஸ்லிம்கள் ( மாற்றுமத சகோதரர்கள் )உங்களைப்போல் எனது உறவுமுறைகள் தான் இதில் எள்ளளவும் சந்தேகமில்லை....
அதற்காக ஒருவர் முஸ்லிம் என்பதற்காக என் கண்ணை முடிக்கொண்டு நான் அவர் செய்யும் தவறுகளை ஆதரிக்கப் போவதில்லை...



தேசத்தின் இதயமான நாடாளுமன்றத்தை தாக்க அண்டை நாட்டின் உதவியுடன் இந்த நாட்டில் பிறந்த ஒருவன் அவன் எந்த மதத்தை சார்ந்தவனாகவும் இருக்கலாம் துணிந்து உள்ளே நுழைந்து துப்பாக்கியும் கையுமாக அரங்க வளாகத்தை சூழ்ந்து வெடி வைத்தும் தாக்க வருவான் என்றால் அவன் என்னைப் பொறுத்தமட்டில் மன்னிக்க முடியாத குற்றம் செய்கிறான்...அதற்கான தண்டனை மரணம் என்றாலும் அவனது உயிரை துள்ளத் துடிக்க எடுக்க வேண்டும் இதில் மதமென்ன மார்க்கமென்ன? மனித உயிர்களின் மதிப்பு மட்டுமே முக்கியம்...




அது போல இந்த தேசத்தின் மதிப்பு வாய்ந்த பதவியில் உள்ள ஒருவரை திட்டமிட்டு கொலை செய்ய ஒரு கும்பல் ஆளனுப்ப அதற்கான வேலை முழுமை பெற்று கசாப்புக் கடையில் வெட்டப்பட்ட மாமிசங்கள் கூட அவற்றின் அங்கங்களைக் காட்டும் ஆனால் ஒரு நூறு மனித உடலங்களின் அங்கங்கள் உருத்தெரியாமல் சிதைக்கப்படக் காரணமானவர்கள் யாராயிருப்பினும் அவர்கள் செய்ததும் மன்னிக்க முடியாத குற்றமே...நிறைவேற்ற வேண்டும் தண்டனையை தாமதம் கூடாது...




இங்கே பிரச்சினை என்னவென்றால் காஷ்மிர முதல்வர் உமர அப்துல்லாஹ் ஒரு தேவையில்லாத விவகாரத்தை துண்டி விட்டிருக்கிறார்...ஒரு முன்று பேரின் துக்குத் தண்டனையை சட்டசபையில் தீர்மானம் இயற்றி நிறுத்த முடியும் என்றால் நாங்களும் அந்தப் பாராளுமன்றத்தை தாக்கியவரை விடுவிக்கச் சொல்லுவோம் என்று...
இந்த அப்துல்லாக்கள் யார்? இவர்களின் உள்நோக்கம் என்ன?  தெரியாது.... அனால ஒன்று உண்மை காங்கிரசு இங்கே கலக்குகிறது குட்டையை அதற்குத் தோதாக அப்போது தான் மீன் பிடிக்க முடியும் என்று ஒரு கீழான தரங்கெட்ட எண்ணம்....
அப்படி இந்த அப்துல்லாக்கள் பேசியது உண்மை என்றால் அது இந்த தேசத்திற்குப் பெரிய நாசம்...யாகாவாராயினும் நாகாக்க...என்பது தான் இதற்குப் பதில்...



பதிவு 1

பறந்து கிடக்கும் இந்தப் பார் முழுவதும் இணையத்தில் தமிழ் தளங்கள் இறைந்துகிடக்கின்றன...அப்படி ஒன்றில் நானும் அங்கத்தினன்...ஒரு நல்ல வாசகன் அருமையான பதிவு ஒன்றை இட்டான்...பதிவு நான் சார்ந்திருக்கும் மதத்திற்கு அப்பாற்பட்டது அதே நேரத்தில் அதன் கருத்துக்களில் ஒன்றிப் போன நான் அதற்க்கு ஒரு பின்னுட்டமும் இட்டேன்...
அருமை எனக்குப் பிடித்திருக்கிறதென்று...
உண்மை தான் என்னைப் பொறுத்த மட்டில் எப்பொருளிலும் மெய்ப்பொருள் தான் எனக்கு முக்கியம்...பெயரில் என்ன இருக்கிறது...அல்லா சிவன் இயேசு இவை பெயர் தான் எனக் கருதுபவன் நான். வழிபாட்டில் இறைவன் என்ற பரம்பொருள் ஒன்று மட்டுமே அதன் ஜிவனுள்ள கரு...இது என் கருத்து.
ஐவேளை தொழுபவன் இறைவனை எல்லா நேரமும் அஞ்சுபவன் நான் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு முரணான எந்தக் காரியங்களையும் மனத்தால் கூட தொடாதவன்...என் மாற்று மத சகோதரனுக்கு அவனது பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி பின்னுட்டமிடுகிறேன்...அவ்விதம் சொல்வது எனக்கும் அவனுக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றால் இதில் மனிதாபிமானம் ஒன்று தான் விஞ்சி நிற்க முடியுமே ஒழிய நான் அவனது மதம் தான் சிறந்ததென்று கருதி என் மதத்தை இழிவு படுத்த வில்லை...ஆனால் என் பின்னுட்டத்தினை மேற்கோள் காட்டி விளம்பரமாக்கினால்...அது பக்கா அடாவடித்தனம் தான்...

நான் மனிதன், இந்தியன், முஸ்லிம், என் தாய் நாட்டை வெறித்தனமாக நேசிக்கும் ஒரு தேசபக்தன்...உலக முழுமையும் வாழும் முஸ்லிம்கள் ( மாற்றுமத சகோதரர்கள் )உங்களைப்போல் எனது உறவுமுறைகள் தான் இதில் எள்ளளவும் சந்தேகமில்லை....
அதற்காக ஒருவர் முஸ்லிம் என்பதற்காக என் கண்ணை முடிக்கொண்டு நான் அவர் செய்யும் தவறுகளை ஆதரிக்கப் போவதில்லை...



தேசத்தின் இதயமான நாடாளுமன்றத்தை தாக்க அண்டை நாட்டின் உதவியுடன் இந்த நாட்டில் பிறந்த ஒருவன் அவன் எந்த மதத்தை சார்ந்தவனாகவும் இருக்கலாம் துணிந்து உள்ளே நுழைந்து துப்பாக்கியும் கையுமாக அரங்க வளாகத்தை சூழ்ந்து வெடி வைத்தும் தாக்க வருவான் என்றால் அவன் என்னைப் பொறுத்தமட்டில் மன்னிக்க முடியாத குற்றம் செய்கிறான்...அதற்கான தண்டனை மரணம் என்றாலும் அவனது உயிரை துள்ளத் துடிக்க எடுக்க வேண்டும் இதில் மதமென்ன மார்க்கமென்ன? மனித உயிர்களின் மதிப்பு மட்டுமே முக்கியம்...




அது போல இந்த தேசத்தின் மதிப்பு வாய்ந்த பதவியில் உள்ள ஒருவரை திட்டமிட்டு கொலை செய்ய ஒரு கும்பல் ஆளனுப்ப அதற்கான வேலை முழுமை பெற்று கசாப்புக் கடையில் வெட்டப்பட்ட மாமிசங்கள் கூட அவற்றின் அங்கங்களைக் காட்டும் ஆனால் ஒரு நூறு மனித உடலங்களின் அங்கங்கள் உருத்தெரியாமல் சிதைக்கப்படக் காரணமானவர்கள் யாராயிருப்பினும் அவர்கள் செய்ததும் மன்னிக்க முடியாத குற்றமே...நிறைவேற்ற வேண்டும் தண்டனையை தாமதம் கூடாது...




இங்கே பிரச்சினை என்னவென்றால் காஷ்மிர முதல்வர் உமர அப்துல்லாஹ் ஒரு தேவையில்லாத விவகாரத்தை துண்டி விட்டிருக்கிறார்...ஒரு முன்று பேரின் துக்குத் தண்டனையை சட்டசபையில் தீர்மானம் இயற்றி நிறுத்த முடியும் என்றால் நாங்களும் அந்தப் பாராளுமன்றத்தை தாக்கியவரை விடுவிக்கச் சொல்லுவோம் என்று...
இந்த அப்துல்லாக்கள் யார்? இவர்களின் உள்நோக்கம் என்ன?  தெரியாது.... அனால ஒன்று உண்மை காங்கிரசு இங்கே கலக்குகிறது குட்டையை அதற்குத் தோதாக அப்போது தான் மீன் பிடிக்க முடியும் என்று ஒரு கீழான தரங்கெட்ட எண்ணம்....
அப்படி இந்த அப்துல்லாக்கள் பேசியது உண்மை என்றால் அது இந்த தேசத்திற்குப் பெரிய நாசம்...யாகாவாராயினும் நாகாக்க...என்பது தான் இதற்குப் பதில்...

பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்



இடிந்து நிற்கும் பாழடைந்த வீடு 
எல்லோரும் கடந்து செல்லும் 
பாதையோரத்தில் பார்வைக்கு 
குருவியொன்று கட்டிய கூடும் 
கொஞ்சம் வைக்கோல் தூசிகளும்

பக்கத்தில் சென்று வாசனையை நுகர்ந்தேன்...
ஒரு வாப்பாவும் ஏழ் ஆண் மக்களைப் பெற்ற தாயும் 
வாழ்நது கெட்ட வீடாம் உம்மா சொன்னது நினைவில் 
கண்டியில் வியாபாரம் செய்தார் காரணர் 
மணிககையில் மல்லிகை சுற்றி 
மைனராய் வலம் வந்தவராம்..

கிருதாவின் நீளத்தில் கிறங்கிய கோழிகளை 
விருதாவாய் விழ்த்தியது தான் அவரின் 
வீணாய்ப்போன வரலாறு
நிதானம் இழந்து மது மயக்கமாக
நெறிகெட்ட வாழ்வில் நிலையிழந்து போனார்...

இடுக்கிய கண்களில் பாசம் வேண்டி ஏக்கத்தில் 
எஞ்சிய இற்றுப்போன நாட்களை கழித்தாராம்...

வாப்பாவுக்கு அருகில் கைத்தடி மட்டுமே 
பாவையின் முகம் பார்த்து பரவசப்படுத்திய 
பார்வை கைவிட்டு காத துரம் போனபின்பு 
நில்லாமல் பம்பரமாய் சுற்றிய கால்கள்
நிற்கவே முடியாது ஆட்டம் காண 

கிழவியும் போய்விட கிடை ஆடாய் மாறினாராம்
கஞ்சி தர ஆளில்லாமல் காட்டுப் பூவாய் கவனிப்பின்றி
கிடந்தே கடந்தாராம் கிழவனார் வாப்பாவும்..
உம்மா சொன்ன கதை உயிர் பெற்று ஓவியமாய்...
பாழடைந்த விடோன்று உள்ளம உடலால் 
பாழடைந்த ஒரு வரலாறு...




இடிந்து நிற்கும் பாழடைந்த வீடு 
எல்லோரும் கடந்து செல்லும் 
பாதையோரத்தில் பார்வைக்கு 
குருவியொன்று கட்டிய கூடும் 
கொஞ்சம் வைக்கோல் தூசிகளும்

பக்கத்தில் சென்று வாசனையை நுகர்ந்தேன்...
ஒரு வாப்பாவும் ஏழ் ஆண் மக்களைப் பெற்ற தாயும் 
வாழ்நது கெட்ட வீடாம் உம்மா சொன்னது நினைவில் 
கண்டியில் வியாபாரம் செய்தார் காரணர் 
மணிககையில் மல்லிகை சுற்றி 
மைனராய் வலம் வந்தவராம்..

கிருதாவின் நீளத்தில் கிறங்கிய கோழிகளை 
விருதாவாய் விழ்த்தியது தான் அவரின் 
வீணாய்ப்போன வரலாறு
நிதானம் இழந்து மது மயக்கமாக
நெறிகெட்ட வாழ்வில் நிலையிழந்து போனார்...

இடுக்கிய கண்களில் பாசம் வேண்டி ஏக்கத்தில் 
எஞ்சிய இற்றுப்போன நாட்களை கழித்தாராம்...

வாப்பாவுக்கு அருகில் கைத்தடி மட்டுமே 
பாவையின் முகம் பார்த்து பரவசப்படுத்திய 
பார்வை கைவிட்டு காத துரம் போனபின்பு 
நில்லாமல் பம்பரமாய் சுற்றிய கால்கள்
நிற்கவே முடியாது ஆட்டம் காண 

கிழவியும் போய்விட கிடை ஆடாய் மாறினாராம்
கஞ்சி தர ஆளில்லாமல் காட்டுப் பூவாய் கவனிப்பின்றி
கிடந்தே கடந்தாராம் கிழவனார் வாப்பாவும்..
உம்மா சொன்ன கதை உயிர் பெற்று ஓவியமாய்...
பாழடைந்த விடோன்று உள்ளம உடலால் 
பாழடைந்த ஒரு வரலாறு...


Related Posts Plugin for WordPress, Blogger...