மாதங்கள் பன்னிரண்டில் மகுடம் தரித்த
மானுடம் செழிக்க வந்த சுவனத்து பாதை
தன்னுடன் அடியானை தக்கவைத்துக்கொள்ள
தயாபரன் தந்த தரமிக்க பரிசு
எழுபது தாயினும் கருணையில் மிகைத்த
ஏக இறைவனை நினைத்துப் பசித்து
நித்திரை கலைத்துநின் றழுது தொழுது
நிரந்தர சுவனம் குறிக்கோள் கொண்டு
இம்மை வாழ்வில் பட்ட துயரெலாம்
இதயம் உருகி இரு விழி நீராய்
செய்த பாவம் பழிகளையெல்லாம்
சேர்த்துக் களைந்திடும் சிர்மிக்க மாதம்
மன்னுயிர் செழித்து மாண்புடன் வாழ
மக்கமா நகரில் முகமது நபிக்கு
வானவர் ஜிப்ரயில் சிரகோடணைத்து
வான்மறை குர்ஆன் வழங்கிய மாதம்
வருந்திடும் ஏழை வாட்டம் போக்கிட
வகுத்தொரு கணக்கினை வரும்படியிலிருந்து
வாரி வழங்கிஅவர் வறுமை போக்கிட
வசந்தம் விசிடும் சக்காத் மாதம்
ரமலான் மாதம் ரஹ்மத் மாதம்
ரய்யான் வாசலில் ரட்சிக்கும் மாதம்
மெய்யான இன்பத்தை மென்மேலும் ஈந்து
கையோடு நம்மைக் கரை சேர்க்கும் மாதம்.
நோன்பின் பயனை நோன்புற்று அடைவோம்
நன்மை ஈந்திடும் நற்செயல் புரிவோம்
தீமை உணர்ந்து தீயதைத் தவிர்ப்போம்
தூய நாயனை தினமும் துதிப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக