மாடோட்டிப் பயிர் செய்தோம் மண்ணில் நித்தம்
மண்மணக்க விருந்திட்டோம் மனசில் நின்றோம்
காடெல்லாம் வீடாகி கழனியெல்லாம் காரோட
வீடின்றி வாசலின்றி விதிர்க்கின்றான் விவசாயி....
போனதெல்லாம் போகட்டும் போகியுடன் சாம்பலாய்
கானகத்தை காத்திடுவோம் கண்ணிமை போல் காவலாய்
ஊனமின்றிப் பாடுபட்டு உழவர் வாழ்வு ஓங்கவே
உண்மையுடன் வளர்த்திடுவோம் விவசாயத் தொழிலையே...
தமிழை நற்ப் பானையாக்கி தணலுக்குப் பகைகூட்டி
தாய்மைஎனும் நீரூற்றி அன்பு எனும் அரிசியிட்டு
சர்க்கரையாய் சகமனிதச் சமத்துவமும் அதில் சேர்த்துப்
பொங்கலோ பொங்கலென பொங்கட்டும் இன்ப வெள்ளம....
ஏரோடிய நிலமெல்லாம் எங்கள் நிலமே
நீரோடிய வயலெல்லாம் எங்கள வளமே
வேரோடிய தமிழர் குடி எங்கள் குடியே
பார் போற்றும் எங்கள் மொழி தங்கத்தமிழே...
அன்புடன் அப்துல்லாஹ்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக