
மறைந்தும் மறையாத மஞ்சள் சூரியனாய் நீ
உன் முகம் உள்வாங்கிய ஓயாத அலைகடலாய் நான்
வெளித்தள்ளும் சிப்பிகளாய் வேகாத உன் நினைவுகள்
மாலையும் இரவும் மயங்கிடும் கணத்தில் உன்னுடன்
சிணுங்கி கிறங்கி பின் இணங்கிக் களைப்புடன் காதலானேன்
மாலைகளின் மங்கியஒளியில் கறைபடிந்த காதலாய் நான்மட்டும்
கூதர்க் காற்றின் குளிராய் நடுக்குகிறது உன் வெறுமை
நடுக்கடலின் அரவமில்லாத நடுநிசியாய் என் உள்ளம்
கடலாடி முத்துக்குளித்து கரை சேர்க்கும் பொருள் போல்
உடலாடி உட்புகுந்து உறவாடியவனே
உப்புக்கரிக்குமென் கண்ணீரைக் கரை சேர்ப்பாயா
கனவுப் புகைக் கூண்டில் கையறுநிலையில் நான்
திசைஏதும் அறியாமல் உள்ளுக்குள் முடங்குகிறேன்
அடங்கி ஒடுங்கி உன் வரவுக்காய் வாசல் நோக்கி
அழுதழுது ஓய்வதன்றி வேறேதும் அறிகிலேனே
உன் முகம் உள்வாங்கிய ஓயாத அலைகடலாய் நான்
வெளித்தள்ளும் சிப்பிகளாய் வேகாத உன் நினைவுகள்
மாலையும் இரவும் மயங்கிடும் கணத்தில் உன்னுடன்
சிணுங்கி கிறங்கி பின் இணங்கிக் களைப்புடன் காதலானேன்
மாலைகளின் மங்கியஒளியில் கறைபடிந்த காதலாய் நான்மட்டும்
கூதர்க் காற்றின் குளிராய் நடுக்குகிறது உன் வெறுமை
நடுக்கடலின் அரவமில்லாத நடுநிசியாய் என் உள்ளம்
கடலாடி முத்துக்குளித்து கரை சேர்க்கும் பொருள் போல்
உடலாடி உட்புகுந்து உறவாடியவனே
உப்புக்கரிக்குமென் கண்ணீரைக் கரை சேர்ப்பாயா
கனவுப் புகைக் கூண்டில் கையறுநிலையில் நான்
திசைஏதும் அறியாமல் உள்ளுக்குள் முடங்குகிறேன்
அடங்கி ஒடுங்கி உன் வரவுக்காய் வாசல் நோக்கி
அழுதழுது ஓய்வதன்றி வேறேதும் அறிகிலேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக