
விரகம் நீறைந்த விடியாத இரவுகளில்
விழி மூடி விழித்திருந்தேன் எனக்குள்ளே
கழிந்த எச்சில் நாட்களின் ஈர நினைவுகள்
கசகசவென்று ஒரு கற்றாழையின் மனம்
இழந்துவிட்ட சக்தியின் நெறியில்லா பயணம்
கிளர்ச்சியின் கோரப்பிடியில் கோழையாய் பெண்
முகங்களை நினவில் கொள்ள ஒன்றா இரண்டா
சுகித்கிருக்க மட்டுமே விரித்த முந்தியில் பணம்
ஓயாத அலைகளாய் உடைந்தழும் உள்ளே
நியாயம் கேட்டு நீதிபதியாய் மனசாட்சி
விதைத்த வளர்ந்த விருட்சங்கள் வந்தால்
வீடுகள் தோட்டம் என வில்லங்கம் செய்தால்
எந்தெந்த தோட்டத்தில் என்பயிர் வளர்கிறது
என்ன நிறம் எத்தனை உயரம் யாரின் உபயம்
சுற்றிலும் என் உயிர்க்கு எத்தனை கிளைகள்
களைகளாய் கறைகளாய் நான் பாவமூட்டை
நெறி மறந்த வாழ்வில் நீதியில்லா பயணம்
புழுதி படர்ந்த கருவரைகளில் பச்சை துரோகங்கள்
பிச்சைப் பாத்திரத்தின் எச்சில் பருக்கையாய் குருதி
கழுவிக் களைந்திட இயலா மாசு கலந்த நீசன் நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக