சிங்காரத் தோட்டமொன்றில்
சிறுமரத்தில் விளைந்த குலை
சித்திரம் வரைந்தார்ப் போல்
சிந்தையை மயக்குதடா
நில மங்கை அவள்மடியில்
நின்ற மரம் ஈந்தகுலை
நீண்டதொரு சாட்டை போல்
நில்லாமல் வளர்நத தம்மா...
வாழைக்குலை இது தான்
மரம் வழியாய் மலர்வளர்ந்து
மலர்ந்த அதன் குலைபணிந்து
நிலம் தொட்ட நீ ...ண்ட
வனப்புள்ள அதன் தாயை
வசதியாய் மறைக்கும் குலை
வந்தவரை எண்ணச்சொன்னால்...
வட்டம் சுற்றி வீழ்ந்திடுவார்.
தொங்காத குலை இது
தொட்டுத் தாழ்பணிகிறது
பங்கு உமக்கு வேணுமெனில்
பல பைகள் தேவைப்படும்
நிறைமதி பெற்ற மாந்தர்
நிலம் நோக்கி பணிவதுபோல்
நிறைந்த கனிக்குலையிதுவும்
நிதர்சனம் காட்டுதிங்கே...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநண்பரே இந்தப் புகைப்படம் உண்மையா? எனில் இது எங்கு எடுக்கப் பட்டது என்ற விவரம் அறியத்தருவீர்களா?
பதிலளிநீக்குஅன்பின் உறவே இந்தப் படம் நான் மின்னஞ்சலில் பெற்றது. கேரளா வில் எர்னாகுளம் பகுதியில் விளைந்த ஒரு வியத்தகு விளைச்சல் தான்....
பதிலளிநீக்கு