ஞாயிறு, டிசம்பர் 25, 2011

விட்டில் பூச்சிகள்


விரகமென்னும் திரியின் சுடர்
விரிந்து நின்ற போதிலே - அந்த
நரகமதன் நாசம் காண
நர உயிர்கள் நாடுதே

விறகு போல எரித்து நம்மை
சிறகொடித்து வீழ்த்துதே -அம்
மலர் விரித்த மஞ்சத்தில் 
மதியிழப்பே மிஞ்சுதே

பாலருந்திப் பழம்சுவைக்கப்
பருவம் மட்டும் வெல்லுதே 
பாவையவள் பார்வை பட்டு 
பெற்ற பாசம்வடியுதே

மங்கையவள் சரணம் என
மற்றதெலாம் மறக்குதே

குற்றமிலா கொற்றவனின் 
கற்றகல்வி காற்றிலே
பெற்றவளின் முன்னிலையில் 
உற்றவள் கொடி பறக்குதே 

கன்னியவள் கைப்பிடியில்
கைசேதம் தொடரும் 
காலம் இனிக கழித்திடவே
கட்டில் கதையும் வளரும்

விட்டில் மோதி வீழ்வது போல்
வீணில் காலம் கழியும் 
விரகம் வசம் வீழ்ந்த அவன் 
நரகம் சூழந்த வாழ்வும்...





விரகமென்னும் திரியின் சுடர்
விரிந்து நின்ற போதிலே - அந்த
நரகமதன் நாசம் காண
நர உயிர்கள் நாடுதே

விறகு போல எரித்து நம்மை
சிறகொடித்து வீழ்த்துதே -அம்
மலர் விரித்த மஞ்சத்தில் 
மதியிழப்பே மிஞ்சுதே

பாலருந்திப் பழம்சுவைக்கப்
பருவம் மட்டும் வெல்லுதே 
பாவையவள் பார்வை பட்டு 
பெற்ற பாசம்வடியுதே

மங்கையவள் சரணம் என
மற்றதெலாம் மறக்குதே

குற்றமிலா கொற்றவனின் 
கற்றகல்வி காற்றிலே
பெற்றவளின் முன்னிலையில் 
உற்றவள் கொடி பறக்குதே 

கன்னியவள் கைப்பிடியில்
கைசேதம் தொடரும் 
காலம் இனிக கழித்திடவே
கட்டில் கதையும் வளரும்

விட்டில் மோதி வீழ்வது போல்
வீணில் காலம் கழியும் 
விரகம் வசம் வீழ்ந்த அவன் 
நரகம் சூழந்த வாழ்வும்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...