அன்றும் மழைபெய்தது
நனைந்தவாறு என் மகள்
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
பரிவோடு பார்த்தாள்
கிண்ணமொன்றில் பிடித்து
கொஞ்சமாய் வடிகட்டி
ஓடோடிச்சென்று தன் குடத்திலிட்டாள்...
அந்தக்குடத்தில்
ஏற்கெனவே கொஞ்சம் நீருண்டு.
அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...
அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு..
எங்காவது வெளியூர் போனாலும்
மறக்காமல் கிண்ணமும் ஒரு
குப்பியும் அவளோடு கூட வரும்....
பொழிதலின் புனிதத்தை
புரிந்து உணர்ந்தவள் அவள்...
அவளது கல்லூரிப் படிப்புக்காய்
கசகசக்கும் வெயிலில்
கால் கடுக்க வரிசையில் நின்று
அங்குமிங்கும் அலைந்து
அனைத்தும் முடிந்து மகிழ்வுடன்
அவளருகில் வந்த போது
என் காதின் மடல் வழியே
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
பட்டென எடுத்தாள் குப்பியை
விழப்போன வியர்வைதுளியை
வீழ்ந்திடாமல் பக்குமாய்
பத்திரப்படுத்தினாள் குப்பிக்குள்...
அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...
அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு..
ம்ம்ம் அசத்தலான கவிதை
பதிலளிநீக்குவாசித்து முடிக்கையில் எனக்கு மெய்சிலிர்த்தது பெருந்தொகையே
இந்த வரிகள் ம்ம்ம் சான்சே இல்லங்க
அற்புதம் எவ்வளவு உண்மை
கவிதைக்கு பாராட்டுக்கள் பெருந்தொகையே
அழகு கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.