திங்கள், ஜூன் 20, 2011

கற்பப்பாத்திரம் என் கண்ணிமை

அம்மாதான் எனக்கு எல்லாம் 
அவளுக்கு நான் தான் செல்லம்
அள்ளி எனை எடுப்பாள் 
ஆசை தீர முத்தம் தந்து

கண்ணின் இமைபோல 
காலமெல்லாம் காத்திடுவாள் 
கல்லையும் கரையச்செய்யும் 
கருணையின் உயிர்வடிவம் 

படைத்தவன் எனக்களித்த 
பரிசுத்தப் புதையல் அவள் 
பாசமும் பற்றும் கொண்ட 
பரிவுள்ள அன்னை அவள்

நோவினை நானுற்றாலோ
நொந்தவள் நோன்பு நோற்ப்பாள்
நெஞ்சோடு எனை அணைத்து
நெற்றியைத் தொட்டுப் பார்ப்பாள் 

பள்ளியில் வகுப்பறையில் 
பாடங்கள் கேட்கும் நேரம் 
ஒளிந்து நின்று ரசித்திடுவாள்
ஒத்தையாய் சன்னலோரம்

பக்குவமாய் எடுத்து என்னை
பத்திரமாய் தன் இடுப்பில்
பரிவுடன் தான் சுமந்தாள்
பத்தாம் வயது வரை

கை நிறைய அள்ளி உண்ணு
விரல் நீக்கிச் சாப்பிடாதே
கனிவுடன் கண்டித்திடுவாள்
அவள் கை மணம் நினைவில் இன்னும்

அம்மாவுக்கென்று ஒரு 
அற்புத வாசமுண்டு அவளின்
சாயம் போன வாயில்ச்சேலை
சாட்சியுண்டு என்னிடத்தில்

அம்மாதான் எனக்கு எல்லாம் 
அவளுக்கு நான் தான் செல்லம்
அள்ளி எனை எடுப்பாள் 
ஆசை தீர முத்தம் தந்து

கண்ணின் இமைபோல 
காலமெல்லாம் காத்திடுவாள் 
கல்லையும் கரையச்செய்யும் 
கருணையின் உயிர்வடிவம் 

படைத்தவன் எனக்களித்த 
பரிசுத்தப் புதையல் அவள் 
பாசமும் பற்றும் கொண்ட 
பரிவுள்ள அன்னை அவள்

நோவினை நானுற்றாலோ
நொந்தவள் நோன்பு நோற்ப்பாள்
நெஞ்சோடு எனை அணைத்து
நெற்றியைத் தொட்டுப் பார்ப்பாள் 

பள்ளியில் வகுப்பறையில் 
பாடங்கள் கேட்கும் நேரம் 
ஒளிந்து நின்று ரசித்திடுவாள்
ஒத்தையாய் சன்னலோரம்

பக்குவமாய் எடுத்து என்னை
பத்திரமாய் தன் இடுப்பில்
பரிவுடன் தான் சுமந்தாள்
பத்தாம் வயது வரை

கை நிறைய அள்ளி உண்ணு
விரல் நீக்கிச் சாப்பிடாதே
கனிவுடன் கண்டித்திடுவாள்
அவள் கை மணம் நினைவில் இன்னும்

அம்மாவுக்கென்று ஒரு 
அற்புத வாசமுண்டு அவளின்
சாயம் போன வாயில்ச்சேலை
சாட்சியுண்டு என்னிடத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...