சனி, அக்டோபர் 29, 2011

ஊஞ்சல் - அப்துல்லாஹ்





மனம் கிறங்குகிறது 
மலையின் முகடு தொட்டுப்பின் 
அங்கேயே தொடங்கி 
மிண்டும் தரையை நோக்கி...
தேடுதலின் ஓட்டம...

மீள்தலும் முடித்தலும் 
மீள்தலோடு மீண்டும் மீண்டும் 
முகடும் தரையுமாய் 
முடிவதும் மீள்வதுமாய்
காலத்தையும் என் கனவையும் 
உள்ளடிக்கிய பயணம்


பயணத்தின் போது
களைப்பும் அலுப்பும் 
வருவதே இல்லை 
அலற முடியாத 
அடிவாங்குதலும் 
அவமானம் உணராத 
உயிர் தொடும் வலிகளும்
இருளோடு பேசி
இருப்பை உணர்ந்து 
இழிவு தவிர்க்க 
இரவு பகல் வேறுபாடு களைந்து 
ஈட்டிடும் பொருளே
பயணத்தின் பிரதானமாக...


கைகட்டி நின்றுவிவிடாமல்.....
காலம் என்னைக் கடந்து விடாமல் 
கனவுகள் என்னோடு சிதைந்து 
அவற்றின் முகங்கள் விகாரமாகி 
என்னை அச்சுறுத்தி விடாமல் ...
கைப்பொருள் குப்பி காலியாகி 
கூடிய என் உறவுகளுக்கு 
நான் கேலியாக விடாமல்..... 


பொழுதுகளைச் சுமந்து 
விடியலில் தரை தொடங்கி 
பொன் அந்தியில் முகடு தொட்டு 
மறுபடியும் விடியலாய் விரியும் 
சூரிய உஞ்சலின் தொங்கு நாளத்தில் 
என் சூடான மூச்சுக் காற்றின் 
ஸ்பரிசம் பட்டும் பற்றியும் 
அதனை ஆட்டிக் கொண்டும்
அதனுடன் ஓடிக கொண்டும்...
ஐயகோ ....


ஊஞ்சல் வாழ்க்கையில் 
உறவுகளை சுமந்துகொண்டு 
முகட்டிலும் இல்லாமல் 
தரையிலும் நில்லாமல் 
தடங்கல் நிகழாமல் 
தாலிக் கொடியென்னும்
தொங்கு நாளத்தில் 
தொடர்கிறது 
என் சாய்ந்தாட்டம் 
புரி முறியாத வரை......






மனம் கிறங்குகிறது 
மலையின் முகடு தொட்டுப்பின் 
அங்கேயே தொடங்கி 
மிண்டும் தரையை நோக்கி...
தேடுதலின் ஓட்டம...

மீள்தலும் முடித்தலும் 
மீள்தலோடு மீண்டும் மீண்டும் 
முகடும் தரையுமாய் 
முடிவதும் மீள்வதுமாய்
காலத்தையும் என் கனவையும் 
உள்ளடிக்கிய பயணம்


பயணத்தின் போது
களைப்பும் அலுப்பும் 
வருவதே இல்லை 
அலற முடியாத 
அடிவாங்குதலும் 
அவமானம் உணராத 
உயிர் தொடும் வலிகளும்
இருளோடு பேசி
இருப்பை உணர்ந்து 
இழிவு தவிர்க்க 
இரவு பகல் வேறுபாடு களைந்து 
ஈட்டிடும் பொருளே
பயணத்தின் பிரதானமாக...


கைகட்டி நின்றுவிவிடாமல்.....
காலம் என்னைக் கடந்து விடாமல் 
கனவுகள் என்னோடு சிதைந்து 
அவற்றின் முகங்கள் விகாரமாகி 
என்னை அச்சுறுத்தி விடாமல் ...
கைப்பொருள் குப்பி காலியாகி 
கூடிய என் உறவுகளுக்கு 
நான் கேலியாக விடாமல்..... 


பொழுதுகளைச் சுமந்து 
விடியலில் தரை தொடங்கி 
பொன் அந்தியில் முகடு தொட்டு 
மறுபடியும் விடியலாய் விரியும் 
சூரிய உஞ்சலின் தொங்கு நாளத்தில் 
என் சூடான மூச்சுக் காற்றின் 
ஸ்பரிசம் பட்டும் பற்றியும் 
அதனை ஆட்டிக் கொண்டும்
அதனுடன் ஓடிக கொண்டும்...
ஐயகோ ....


ஊஞ்சல் வாழ்க்கையில் 
உறவுகளை சுமந்துகொண்டு 
முகட்டிலும் இல்லாமல் 
தரையிலும் நில்லாமல் 
தடங்கல் நிகழாமல் 
தாலிக் கொடியென்னும்
தொங்கு நாளத்தில் 
தொடர்கிறது 
என் சாய்ந்தாட்டம் 
புரி முறியாத வரை......


செவ்வாய், அக்டோபர் 25, 2011

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


ஞாயிறு, அக்டோபர் 23, 2011

நான் மகான்- அப்துல்லாஹ்





எண்ணங்கள் இரைதேட
கிளம்பிய சிறகடித்தலில் 
இறுதியில் சிக்கிய 
ஒரு எச்சில்கவளம்
நான் மகான்..


இது எப்படி இருக்கு...


இறைவன் பெயரில் ஒரு 
சீட்டிங் கம்பெனி 
கயிறுகளில் முடிச்சிட்டு 
கருப்பு மைதடவி 
தாயத்துக் குப்பிகளில் 
தேடிவருபவரின் சிந்தனையை
மும்முறை துப்பி மடக்கி 
சிந்தித்து விடாமல் முடக்கி 
சிறிய தாயத்தின் வாயைப் 
பத்தவைச்சு அவன பதற வைக்கும் 
தனி மரியாதையுள்ள பதவி...


செய்வினைகளும் 
செய்யாமல் செலவிடப்பட்ட 
பாவங்களும் இங்கே
நடுநிசியில் கபரஸ்தானில் 
நின்று எரியும் நெருப்பில் 
மண்டை ஓட்டருகே 
மனத்துணிவுடேன் 
மண்டியிட்டமர்ந்து 
மடியச் செய்வது என் பணி ...
காசு கொஞ்சம் கூட ஆகும் 
பரவாயில்லையா? 


விவசாயம் தழைக்கணுமா
வேலி தாண்டி மேயணுமா
விசா உடன கிடைக்கணுமா
வேண்டிய பொண்ண அடையணுமா
வீட்டின் முனியை விரட்டணுமா
கடன் தொல்லை தீரணுமா
வாங்க எங்கிட்ட....


கல்யாணம் சிறப்பா நடக்கவும் 
கருக மணி பெலக்கவும் 
காசு பணம் பெருகவும் 


ஆண்டவனை நான் கண்டு 
அவனிடம் சேதி சொல்லி
அக்கறைக்கு கூட்டிப் போறேன்
அப்படி இப்படின்னு பொய் சொல்லி 
ஆனையின் வயிறு போல
அத்தனை சொத்தும் தேடி 
இந்தப் பொழப்ப நான் ஏத்தா...


என்ன இது ஹராம் பொழப்பு!!!
எம்மவன் எங்கட்டே சொல்றான்...


அட போடா சொத்தும் சோகமும்
வயலும் வரப்பும் நிலமும் நீச்சும் 
பொன்னும் பொருளும் 
நான் பொய் சொல்லி பறிச்சது 
பொன்னு மவனே ஒனக்குத்தாண்டா...


தவ்ஹீதாம் தாலியறுப்பாம்
ஒரு பத்து ரூபா காசு சம்பாதிக்க 
தெம்பில்லாதவன் இவன்!!!
ஏங்க 
இதெல்லாம் போன மாசம்...
இப்ப அவன் ...


அவன் தான் குழந்தை வரம் 
வாங்கிக் குடுக்க ஆண்டவனைக்
கேட்டு அதிர்ஷ்டப் பலன் தரும் 
அற்புதம் நிகழ்த்தும் ஸ்பெசலிஸ்ட்...





எண்ணங்கள் இரைதேட
கிளம்பிய சிறகடித்தலில் 
இறுதியில் சிக்கிய 
ஒரு எச்சில்கவளம்
நான் மகான்..


இது எப்படி இருக்கு...


இறைவன் பெயரில் ஒரு 
சீட்டிங் கம்பெனி 
கயிறுகளில் முடிச்சிட்டு 
கருப்பு மைதடவி 
தாயத்துக் குப்பிகளில் 
தேடிவருபவரின் சிந்தனையை
மும்முறை துப்பி மடக்கி 
சிந்தித்து விடாமல் முடக்கி 
சிறிய தாயத்தின் வாயைப் 
பத்தவைச்சு அவன பதற வைக்கும் 
தனி மரியாதையுள்ள பதவி...


செய்வினைகளும் 
செய்யாமல் செலவிடப்பட்ட 
பாவங்களும் இங்கே
நடுநிசியில் கபரஸ்தானில் 
நின்று எரியும் நெருப்பில் 
மண்டை ஓட்டருகே 
மனத்துணிவுடேன் 
மண்டியிட்டமர்ந்து 
மடியச் செய்வது என் பணி ...
காசு கொஞ்சம் கூட ஆகும் 
பரவாயில்லையா? 


விவசாயம் தழைக்கணுமா
வேலி தாண்டி மேயணுமா
விசா உடன கிடைக்கணுமா
வேண்டிய பொண்ண அடையணுமா
வீட்டின் முனியை விரட்டணுமா
கடன் தொல்லை தீரணுமா
வாங்க எங்கிட்ட....


கல்யாணம் சிறப்பா நடக்கவும் 
கருக மணி பெலக்கவும் 
காசு பணம் பெருகவும் 


ஆண்டவனை நான் கண்டு 
அவனிடம் சேதி சொல்லி
அக்கறைக்கு கூட்டிப் போறேன்
அப்படி இப்படின்னு பொய் சொல்லி 
ஆனையின் வயிறு போல
அத்தனை சொத்தும் தேடி 
இந்தப் பொழப்ப நான் ஏத்தா...


என்ன இது ஹராம் பொழப்பு!!!
எம்மவன் எங்கட்டே சொல்றான்...


அட போடா சொத்தும் சோகமும்
வயலும் வரப்பும் நிலமும் நீச்சும் 
பொன்னும் பொருளும் 
நான் பொய் சொல்லி பறிச்சது 
பொன்னு மவனே ஒனக்குத்தாண்டா...


தவ்ஹீதாம் தாலியறுப்பாம்
ஒரு பத்து ரூபா காசு சம்பாதிக்க 
தெம்பில்லாதவன் இவன்!!!
ஏங்க 
இதெல்லாம் போன மாசம்...
இப்ப அவன் ...


அவன் தான் குழந்தை வரம் 
வாங்கிக் குடுக்க ஆண்டவனைக்
கேட்டு அதிர்ஷ்டப் பலன் தரும் 
அற்புதம் நிகழ்த்தும் ஸ்பெசலிஸ்ட்...

சனி, அக்டோபர் 22, 2011

விரல்வழி வேகமாய் - அப்துல்லாஹ்




ரகசியங்கள் திணித்து வைக்கப்படும் 
ராத்திரிக்கு நெருங்கிய மாலை வானம் 
ராந்தர் விளக்கொளி இறைத்த மணற்ப்பரப்பில்

விரல் பிணைப்பில் வினாஎழுப்பும் நானும் 
விடை பகரும் விந்தையான தந்தையும் 
எனக்காக தன்னை சுருக்கிய அவர் மெதுவாக 
என்னுடன் ஒரு குழந்தைபோல் நடந்தார் 
அவரால் வேகமாக நடக்க முடியும் 
முடிந்தும்...... 
எனக்காக மெல்ல மெல்ல தடம் பதிய 
தன்னையும் என்னுடன் இணைத்தவாறு...


அவர் காலடிகளை வேகமாக்க எண்ணியபோது 
என்னை சுமந்து இடுக்கியபடி 
நடக்க நான் 
அவரின் சுமையினில் ஒன்றாக ...


நண்டுகள் தோண்டிய வளைகளும் 
சில சிப்பிகளும் காண்பது எனக்கு மகிழ்ச்சி
வளைகளும் சிப்பிகளும் 
எப்பொழுதும் காணக் கிடைக்கின்றன 
நாற்பதாண்டுகளாய் என் பார்வையில் 
அவை மாற்றமில்லை...


இன்று...
நான் மட்டும் வேகமாக நடந்து 
கடந்து விரைந்து சேர்ந்த போது 
அவர் என்னுடன் வரவில்லை..
என் நடை வேகமான போது
நான் தளர்ந்து நடக்கும் தந்தையின் 
அருகில் அவரின் நடையை ஒத்து 
என் நடையை சுருக்கவில்லை 
அவருக்கும் தெரியும் 
நான் அவரின் விரலைப் 
பிடிக்கவேயில்லை ....

நாற்பதாண்டுகளில் நான்
மனதளவில் சுருங்கி 
மாறிவிட்டேன்...



ரகசியங்கள் திணித்து வைக்கப்படும் 
ராத்திரிக்கு நெருங்கிய மாலை வானம் 
ராந்தர் விளக்கொளி இறைத்த மணற்ப்பரப்பில்

விரல் பிணைப்பில் வினாஎழுப்பும் நானும் 
விடை பகரும் விந்தையான தந்தையும் 
எனக்காக தன்னை சுருக்கிய அவர் மெதுவாக 
என்னுடன் ஒரு குழந்தைபோல் நடந்தார் 
அவரால் வேகமாக நடக்க முடியும் 
முடிந்தும்...... 
எனக்காக மெல்ல மெல்ல தடம் பதிய 
தன்னையும் என்னுடன் இணைத்தவாறு...


அவர் காலடிகளை வேகமாக்க எண்ணியபோது 
என்னை சுமந்து இடுக்கியபடி 
நடக்க நான் 
அவரின் சுமையினில் ஒன்றாக ...


நண்டுகள் தோண்டிய வளைகளும் 
சில சிப்பிகளும் காண்பது எனக்கு மகிழ்ச்சி
வளைகளும் சிப்பிகளும் 
எப்பொழுதும் காணக் கிடைக்கின்றன 
நாற்பதாண்டுகளாய் என் பார்வையில் 
அவை மாற்றமில்லை...


இன்று...
நான் மட்டும் வேகமாக நடந்து 
கடந்து விரைந்து சேர்ந்த போது 
அவர் என்னுடன் வரவில்லை..
என் நடை வேகமான போது
நான் தளர்ந்து நடக்கும் தந்தையின் 
அருகில் அவரின் நடையை ஒத்து 
என் நடையை சுருக்கவில்லை 
அவருக்கும் தெரியும் 
நான் அவரின் விரலைப் 
பிடிக்கவேயில்லை ....

நாற்பதாண்டுகளில் நான்
மனதளவில் சுருங்கி 
மாறிவிட்டேன்...

வியாழன், அக்டோபர் 20, 2011

சுவடுகள் அழியும்...அப்துல்லாஹ்


முடிவிலி...அப்துல்லாஹ்




செவ்வாய், அக்டோபர் 18, 2011

நீரே சாட்சி (கண்வழிக் காமம்)...அப்துல்லாஹ்


மலையடிவாரங்கள் 
மனசுக்கு சுகம்தானே 
மாலை நேரங்களும் 
மஞ்சள் கதிரொளியும் 
தண்ணீர் கரைகளும் 
தனித்தமரும் பொழுதுகளும் 
விட்டில் பூச்சிகளாய் 
கட்டில் நினைவுகளுடன்

அங்கே 
நானும் அவனும்
காற்றும் கதிரும் 
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர ஏதுமில்லாமல் 

சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின் 
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல் 
குருவியாய் ஒடுங்கினேன் நான் 
கருவியாய் எனைக் கொண்டான் 
காமத்தின் அருவியானேன் நான்...

தண்ணீரில் நானிருந்தும் 
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில் 
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும் 
இருள் தழுவிட சுகித்திட்டேன் 
விட்டிலாய் விளக்கொளியில் 
விரும்பி அவனுள் புதைந்திட்டேன்

மட்டிலா மகிழ்வு கொண்டேன் 
கட்டிலாய் நீர்மேல் இன்பத் 
தொட்டிலை நான் இனி 
மறந்திடிலேன்...

மலையடிவாரங்கள் 
மன்னவன் இருக்க சுகம்தானே 
மாலை நேரங்களில் 
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!! 
மஞ்சள் கதிரொளி 
மட்டற்ற மகிழ்ச்சி அது 
கட்டற்ற காளைக்கு....



மலையடிவாரங்கள் 
மனசுக்கு சுகம்தானே 
மாலை நேரங்களும் 
மஞ்சள் கதிரொளியும் 
தண்ணீர் கரைகளும் 
தனித்தமரும் பொழுதுகளும் 
விட்டில் பூச்சிகளாய் 
கட்டில் நினைவுகளுடன்

அங்கே 
நானும் அவனும்
காற்றும் கதிரும் 
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர ஏதுமில்லாமல் 

சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின் 
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல் 
குருவியாய் ஒடுங்கினேன் நான் 
கருவியாய் எனைக் கொண்டான் 
காமத்தின் அருவியானேன் நான்...

தண்ணீரில் நானிருந்தும் 
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில் 
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும் 
இருள் தழுவிட சுகித்திட்டேன் 
விட்டிலாய் விளக்கொளியில் 
விரும்பி அவனுள் புதைந்திட்டேன்

மட்டிலா மகிழ்வு கொண்டேன் 
கட்டிலாய் நீர்மேல் இன்பத் 
தொட்டிலை நான் இனி 
மறந்திடிலேன்...

மலையடிவாரங்கள் 
மன்னவன் இருக்க சுகம்தானே 
மாலை நேரங்களில் 
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!! 
மஞ்சள் கதிரொளி 
மட்டற்ற மகிழ்ச்சி அது 
கட்டற்ற காளைக்கு....


ஞாயிறு, அக்டோபர் 16, 2011

மனசையறுக்கும் ரணம்



ரத்தமும் சதையும் கொண்ட மானுடப் பிறவி இது 
முத்தமும் முலைப்பாலும் சுவைத்திடும் நேரம் இது 
சித்தமே கலங்கினாலும் உதறுவாரோ நடு வீதியில்.
குத்தம் தான் என்ன இந்த சிசு செய்தது...


பத்தரை மாத்துப் பொன்னே பசுங்கிளியே நீ
இத்தரை வந்துற்றுக் கண்டதோர் காட்சி இது
நச் சுதரம் பெற்று நீ கருவானாய் உருவானாய் 
இச்சையை அடக்காத ஈனத்தாய்க்கு..


இல்லையே ஓர் மழலை என்றிங்கு எண்ணிப் பலர்
சொல்லொணாத் துயருற்று சோர்ந்திடுவார் சோகத்தில்
செல்லப் பெண்மகளே சேர்த்தணைக்க யாருமின்றி
கொல்லத் துணிந்தாரடி கொடுமையிதுவே..


அன்னையின்குரல் கேட்டு ஆனந்தம் அடையவில்லை 
அத்தையின் மடி மீது ஆராரோ கேட்கவில்லை 
அப்பாவின் அடிநெஞ்சில் ஈரமும் நனைக்கவில்லை
தப்பான காட்சியாக தரை மீது மீன் இன்று...


தொப்புள் கொடியறுத்து தோட்டத்தில் புதைக்காமல் 
சப்பும் வித்தையை உன் செப்பு வாய்க்கும் சொல்லாமல்  
உச்சி தொட்டுப் பாதம் வரை சலவாத்துடன் தடவாமல் 
எச்சில் இலை போல என்ன கொடுமையிது...


ரத்தமும் சதையும் கொண்ட மானுடப் பிறவி இது 
முத்தமும் முலைப்பாலும் சுவைத்திடும் நேரம் இது 
சித்தமே கலங்கினாலும் உதறுவாரோ நடு வீதியில்.
குத்தம் தான் என்ன இந்த சிசு செய்தது...


பத்தரை மாத்துப் பொன்னே பசுங்கிளியே நீ
இத்தரை வந்துற்றுக் கண்டதோர் காட்சி இது
நச் சுதரம் பெற்று நீ கருவானாய் உருவானாய் 
இச்சையை அடக்காத ஈனத்தாய்க்கு..


இல்லையே ஓர் மழலை என்றிங்கு எண்ணிப் பலர்
சொல்லொணாத் துயருற்று சோர்ந்திடுவார் சோகத்தில்
செல்லப் பெண்மகளே சேர்த்தணைக்க யாருமின்றி
கொல்லத் துணிந்தாரடி கொடுமையிதுவே..


அன்னையின்குரல் கேட்டு ஆனந்தம் அடையவில்லை 
அத்தையின் மடி மீது ஆராரோ கேட்கவில்லை 
அப்பாவின் அடிநெஞ்சில் ஈரமும் நனைக்கவில்லை
தப்பான காட்சியாக தரை மீது மீன் இன்று...


தொப்புள் கொடியறுத்து தோட்டத்தில் புதைக்காமல் 
சப்பும் வித்தையை உன் செப்பு வாய்க்கும் சொல்லாமல்  
உச்சி தொட்டுப் பாதம் வரை சலவாத்துடன் தடவாமல் 
எச்சில் இலை போல என்ன கொடுமையிது...

படுகொலை செய்யப்பட்ட பஞ்சுப் பொதி...




15th - ஜுன் 
சூனியமான நான் கருவறைக்குள் புகுந்தேன்..
17th ஜுன் 

வயிற்றுக்குள் உயிர்பெற்று வளரும் ஒரு உயிர் திசு ...
30 ஜுன் 

என் அருமைத் தாய் என் தந்தையிடம் வெட்கம் தின்ன வெல்லமென மெல்லச் சொன்னாள்...

"நீங்கள் அப்பா ஆகப் போகிறீர்கள"

மகிழ்ச்சிக்கடலில் எந்தையும் தாயும் நீந்தி திளைத்தனர் ...

15th செப்டம்பர் :- 

என் இதயத் துடிப்பை நானே உணரும் தருணம்... இது எத்தனை மகிழ்ச்சி...

14அக்டோபர் : 

செப்பு போன்ற குட்டிக் குட்டிக் கால்கள் கைகளும் வயிறும் தலை என அத்தனையும் தளிர்களாக பஞ்சுப் பாதங்களுடன் இன்னும் முடியவில்லை...

13நவம்பர்: 

என் தாயை இன்று ஸ்கேன் செய்யும் படி மருத்துவர் சொல்ல ....

வாவ் ... நான் உங்களில் ஒரு அழகுப் பெண்....

14நவம்பர். 

நான் சாகடிக்கப்பட்டேன்....

என் அன்புத் தந்தையும் தாயுமே என்னைக் கொன்றனர்...

ஏன்

ஏன்???

நான் ஒரு பெண் குழந்தை என்பதால்

கொள்ளைப் பாசத்திற்குத் தாய் வேண்டும் 
கூடிக குலாவத் தாரம் வேண்டும் - ஏன் 
கூத்தடிக்க கேள் பிரண்டு என 
அத்தனையும் பெண்ணாய் வேண்டும் 
ஆனால் 
மகள் மட்டும் ????
ஏன் 
ஏன் 

சீ... மனிதம் தெரியாத மானிடக் கொல்லி....




15th - ஜுன் 
சூனியமான நான் கருவறைக்குள் புகுந்தேன்..
17th ஜுன் 

வயிற்றுக்குள் உயிர்பெற்று வளரும் ஒரு உயிர் திசு ...
30 ஜுன் 

என் அருமைத் தாய் என் தந்தையிடம் வெட்கம் தின்ன வெல்லமென மெல்லச் சொன்னாள்...

"நீங்கள் அப்பா ஆகப் போகிறீர்கள"

மகிழ்ச்சிக்கடலில் எந்தையும் தாயும் நீந்தி திளைத்தனர் ...

15th செப்டம்பர் :- 

என் இதயத் துடிப்பை நானே உணரும் தருணம்... இது எத்தனை மகிழ்ச்சி...

14அக்டோபர் : 

செப்பு போன்ற குட்டிக் குட்டிக் கால்கள் கைகளும் வயிறும் தலை என அத்தனையும் தளிர்களாக பஞ்சுப் பாதங்களுடன் இன்னும் முடியவில்லை...

13நவம்பர்: 

என் தாயை இன்று ஸ்கேன் செய்யும் படி மருத்துவர் சொல்ல ....

வாவ் ... நான் உங்களில் ஒரு அழகுப் பெண்....

14நவம்பர். 

நான் சாகடிக்கப்பட்டேன்....

என் அன்புத் தந்தையும் தாயுமே என்னைக் கொன்றனர்...

ஏன்

ஏன்???

நான் ஒரு பெண் குழந்தை என்பதால்

கொள்ளைப் பாசத்திற்குத் தாய் வேண்டும் 
கூடிக குலாவத் தாரம் வேண்டும் - ஏன் 
கூத்தடிக்க கேள் பிரண்டு என 
அத்தனையும் பெண்ணாய் வேண்டும் 
ஆனால் 
மகள் மட்டும் ????
ஏன் 
ஏன் 

சீ... மனிதம் தெரியாத மானிடக் கொல்லி....

வியாழன், அக்டோபர் 13, 2011

தொலைவில் புள்ளியாகத் தொலையாமல்....





குளிர் ஊடுருவும் முன்பனிக்காலம்
ஓர் உயிர் உருகிய 
கூடலின் பிந்திய புழுக்கத்தில் 
கசகசத்த வியர்வை ஒட்டிய 
காது மடலின் கீழ் என் கேசத்தில்
சுடும் அவனது மூச்சுக் காற்று


என்னையும் என்ரகசியங்களையும் 
என்னோடு தவிக்க விட்டு 


உறவுற்ற உஷ்ணம் உள்ளடக்கி 
உடற்கூடு ஒடுங்கிக் கிடக்கையில்


அருகினில் என்னில் மூழ்கி
தொலைவினில் புள்ளியாக என்னைத் 
தொட்டவாறு நித்திரைக்கும்
என் வாழ்வாகிப்போன அவன் 


அவனை விலக்கியும் 
பின் விலகியும்...
இமை மூடிய அவனது விழிகளை
உற்று நோக்கினேன்....

ஒன்றுமறியாத இவனுக்கு தெரியாது 
என் பெயரைத் தன் மகளுக்கு இட்டு 
என்னை நினைத்து 
வேறோருத்தியுடன் வாழும்
என் கடந்தகால உறவைப் பற்றி...


சே....என்ன வாழ்விது...
அடுத்தவன் சட்டையை 
போட்டு அழகு காட்டும்
அற்பத்தனமான வாழ்க்கை...


கடைக்கண்ணில் ஈரம்
அனிச்சையாய் கைதுடைக்க 
உறங்கிப் போனேன்
வழக்கம்போல...




குளிர் ஊடுருவும் முன்பனிக்காலம்
ஓர் உயிர் உருகிய 
கூடலின் பிந்திய புழுக்கத்தில் 
கசகசத்த வியர்வை ஒட்டிய 
காது மடலின் கீழ் என் கேசத்தில்
சுடும் அவனது மூச்சுக் காற்று


என்னையும் என்ரகசியங்களையும் 
என்னோடு தவிக்க விட்டு 


உறவுற்ற உஷ்ணம் உள்ளடக்கி 
உடற்கூடு ஒடுங்கிக் கிடக்கையில்


அருகினில் என்னில் மூழ்கி
தொலைவினில் புள்ளியாக என்னைத் 
தொட்டவாறு நித்திரைக்கும்
என் வாழ்வாகிப்போன அவன் 


அவனை விலக்கியும் 
பின் விலகியும்...
இமை மூடிய அவனது விழிகளை
உற்று நோக்கினேன்....

ஒன்றுமறியாத இவனுக்கு தெரியாது 
என் பெயரைத் தன் மகளுக்கு இட்டு 
என்னை நினைத்து 
வேறோருத்தியுடன் வாழும்
என் கடந்தகால உறவைப் பற்றி...


சே....என்ன வாழ்விது...
அடுத்தவன் சட்டையை 
போட்டு அழகு காட்டும்
அற்பத்தனமான வாழ்க்கை...


கடைக்கண்ணில் ஈரம்
அனிச்சையாய் கைதுடைக்க 
உறங்கிப் போனேன்
வழக்கம்போல...

புதன், அக்டோபர் 12, 2011

நானும் நீங்களும் - அப்துல்லாஹ்




கருத்த மேகங்கள் நீர்ச்சூல்
சுமந்து அலைவது போல 
நானும் உறவுகளை
என்மனதில் எப்போதும் ....

அவை பொழியுமா 
நனைக்குமா கொட்டுமா
அல்லது
பனிக்கட்டிகளோடு குட்டுமா

இப்படித்தான் ஒருநாள் 
என் வீட்டின் முற்றத்தில் 
நான் வளர்க்கும் ரோஜாவின் அருகில்

இறைந்து இறைத்துப் பேசியது
என் உறவு ஒன்று...
இறுதியில் மனசு விட்டு அழுது 
வாட்டத்துடன் பிரிந்தது...

மழையின் வரவில் மலர்ந்த ரோஜா 
அதன் முகத்தை வாஞ்சையுடன்....
பனிக்கட்டியும் பேரிறைச்சலுமாய்
வந்தது மழை...

மறுநாள் ரோஜா வாடி வதங்கிக் 
கிடையாய் கிழே....
என் மனசு போல ...

எனக்குப் பூக்கள் எப்போதும் 
மலர்ச்சியாய் இருக்க வேண்டும்.
அவற்றை மலர்த்திட மழை வேண்டும்
சாறலாக சீலை நனையும் அளவுக்குப் 
போதுமே...
அந்த மேகம் தரும் மழை....



கருத்த மேகங்கள் நீர்ச்சூல்
சுமந்து அலைவது போல 
நானும் உறவுகளை
என்மனதில் எப்போதும் ....

அவை பொழியுமா 
நனைக்குமா கொட்டுமா
அல்லது
பனிக்கட்டிகளோடு குட்டுமா

இப்படித்தான் ஒருநாள் 
என் வீட்டின் முற்றத்தில் 
நான் வளர்க்கும் ரோஜாவின் அருகில்

இறைந்து இறைத்துப் பேசியது
என் உறவு ஒன்று...
இறுதியில் மனசு விட்டு அழுது 
வாட்டத்துடன் பிரிந்தது...

மழையின் வரவில் மலர்ந்த ரோஜா 
அதன் முகத்தை வாஞ்சையுடன்....
பனிக்கட்டியும் பேரிறைச்சலுமாய்
வந்தது மழை...

மறுநாள் ரோஜா வாடி வதங்கிக் 
கிடையாய் கிழே....
என் மனசு போல ...

எனக்குப் பூக்கள் எப்போதும் 
மலர்ச்சியாய் இருக்க வேண்டும்.
அவற்றை மலர்த்திட மழை வேண்டும்
சாறலாக சீலை நனையும் அளவுக்குப் 
போதுமே...
அந்த மேகம் தரும் மழை....

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

தாலாட்டு என் மகனுக்கு. - அப்துல்லாஹ்




அழகான மலர்க் காம்பு 
அம்மாவின் விரல்கள் போல 
அந்த விரல்கள் 
கொஞ்சம் கருத்தும் 
காய்ந்தும் வரிவரிகளாக
வெடித்தும்

காய்ச்சலின் போது 
களிம்பு தடவ அம்மாவின் அந்த 
கருத்த காய்த்த வரியுள்ள... 
விரல்கள் 
எத்தனை முறை 
என் நெற்றியை நெஞ்சை 
முதுகின் தண்டை 
களிம்பு தொட்டுத் 
தடவுகையில்   
விரலில் அந்தச் சூடும் 
அவளின் மன ஏக்கமும் 
என் நோய்மை பற்றிய கவலையும்
என் மீதான அளவு கடந்த 
வாஞ்சையுமாய் 
விரல் காய்ப்பின் வழி ஊடுறுவும்...
உடலைத் தொட்டுத் தடவும் 

அது படரும் பாதையில்
சில சமயம் அவளின் 
விழிநீரின் முத்துக்களும்  
சேர்த்தே நீவப்படும்...

மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் அவளது 
தாலாட்டுப் பாடல் 
அதன் இறுதில் விசித்து 
கசிந்து கண்ணீர் சிந்தி 
வழக்கம் போலவே முடியும்...

அம்மாவின் மனசில் 
அடிக்கடி சோகம் காண 
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட 
வீட்டில் 
நெளிந்திருக்கும் சொம்பு 
தட்டைகள் கிண்ணங்கள் 
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட  
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...

அவளின் 
அழகான நெற்றியில் 
காணும் கூட்டல் தழும்பு
இன்னமும் இருள் 
தழுவிய அவளின் 
புனித அதரங்களில்
எத்தனை எத்தனையோ 
அம்மா எனும் அப்பிராணி 
அவருக்கு ரௌத்திரம் காட்ட 
அவசியம்;;; அது போல 
அம்மாவுக்கும் அவருக்கு 
அடிமையாய் வாழ

என் அம்மா பாடிய தாலாட்டை 
நான் பாடச் சொல்லி 
அதை அடிக்கடிக் கேட்க 
என் மகனுக்கும்ஆசை 

மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் என் தாய் வழித் 
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து 
கசிந்து கண்ணீர் சிந்தி 
வழக்கம் போலவே முடிகிறது
அவளது நினைவுகளில்...



அழகான மலர்க் காம்பு 
அம்மாவின் விரல்கள் போல 
அந்த விரல்கள் 
கொஞ்சம் கருத்தும் 
காய்ந்தும் வரிவரிகளாக
வெடித்தும்

காய்ச்சலின் போது 
களிம்பு தடவ அம்மாவின் அந்த 
கருத்த காய்த்த வரியுள்ள... 
விரல்கள் 
எத்தனை முறை 
என் நெற்றியை நெஞ்சை 
முதுகின் தண்டை 
களிம்பு தொட்டுத் 
தடவுகையில்   
விரலில் அந்தச் சூடும் 
அவளின் மன ஏக்கமும் 
என் நோய்மை பற்றிய கவலையும்
என் மீதான அளவு கடந்த 
வாஞ்சையுமாய் 
விரல் காய்ப்பின் வழி ஊடுறுவும்...
உடலைத் தொட்டுத் தடவும் 

அது படரும் பாதையில்
சில சமயம் அவளின் 
விழிநீரின் முத்துக்களும்  
சேர்த்தே நீவப்படும்...

மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் அவளது 
தாலாட்டுப் பாடல் 
அதன் இறுதில் விசித்து 
கசிந்து கண்ணீர் சிந்தி 
வழக்கம் போலவே முடியும்...

அம்மாவின் மனசில் 
அடிக்கடி சோகம் காண 
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட 
வீட்டில் 
நெளிந்திருக்கும் சொம்பு 
தட்டைகள் கிண்ணங்கள் 
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட  
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...

அவளின் 
அழகான நெற்றியில் 
காணும் கூட்டல் தழும்பு
இன்னமும் இருள் 
தழுவிய அவளின் 
புனித அதரங்களில்
எத்தனை எத்தனையோ 
அம்மா எனும் அப்பிராணி 
அவருக்கு ரௌத்திரம் காட்ட 
அவசியம்;;; அது போல 
அம்மாவுக்கும் அவருக்கு 
அடிமையாய் வாழ

என் அம்மா பாடிய தாலாட்டை 
நான் பாடச் சொல்லி 
அதை அடிக்கடிக் கேட்க 
என் மகனுக்கும்ஆசை 

மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் என் தாய் வழித் 
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து 
கசிந்து கண்ணீர் சிந்தி 
வழக்கம் போலவே முடிகிறது
அவளது நினைவுகளில்...

வரவு செலவு - அப்துல்லாஹ்



எனக்கும் காலங்களுக்கும்
இடையிலான கணக்குத் தீர்த்தலில்
கழிந்த இருபது ஆண்டுகளும்
கொஞ்சம் பரஸ்பரம் வேதனையும்


தலை துவட்டியும் 
காயாத ஈரம போல
திருப்தியடையாத 
இரைதேடல்கள்
கழுகைப் போல 
கடல் கடந்த பயண நீட்சி
பொருள் ஒன்றை 
மட்டுமே குறிவைத்து


செலவுகளும் வரவுகளும்
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்


செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட 
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.


தோண்டித் தோண்டி 
என்னை நானே 
தூசு நிறைந்த 
பாலைச்சொரிமாணலில்
துளைத்துப் புதைத்த 
துரதிருஷ்டம்...


குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த 
பிறவியாய் இப்பிறப்பு 


போதும் .....


சிறகுகள் மடித்துக் கொஞ்சம் 
சிறுபொழுதுஒய்வு வேண்டும் 
பழுதான உடலைக் கொஞ்சம் 
பக்குவம் பார்க்க வேண்டும் 


சரிதானா என் கணக்கு 
சற்றே சொல்லிச் செல்வீர்
அரிதாய் நான் அயர்ந்துறங்கும்


அந்த ஓர் கடைசி நாளில்.... 


என் கணக்கில் வரவுகள் ஏதும் 
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள் 
கடைசி செலவாய் நான் ....





எனக்கும் காலங்களுக்கும்
இடையிலான கணக்குத் தீர்த்தலில்
கழிந்த இருபது ஆண்டுகளும்
கொஞ்சம் பரஸ்பரம் வேதனையும்


தலை துவட்டியும் 
காயாத ஈரம போல
திருப்தியடையாத 
இரைதேடல்கள்
கழுகைப் போல 
கடல் கடந்த பயண நீட்சி
பொருள் ஒன்றை 
மட்டுமே குறிவைத்து


செலவுகளும் வரவுகளும்
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்


செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட 
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.


தோண்டித் தோண்டி 
என்னை நானே 
தூசு நிறைந்த 
பாலைச்சொரிமாணலில்
துளைத்துப் புதைத்த 
துரதிருஷ்டம்...


குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த 
பிறவியாய் இப்பிறப்பு 


போதும் .....


சிறகுகள் மடித்துக் கொஞ்சம் 
சிறுபொழுதுஒய்வு வேண்டும் 
பழுதான உடலைக் கொஞ்சம் 
பக்குவம் பார்க்க வேண்டும் 


சரிதானா என் கணக்கு 
சற்றே சொல்லிச் செல்வீர்
அரிதாய் நான் அயர்ந்துறங்கும்


அந்த ஓர் கடைசி நாளில்.... 


என் கணக்கில் வரவுகள் ஏதும் 
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள் 
கடைசி செலவாய் நான் ....



திங்கள், அக்டோபர் 03, 2011

மனசை கொடுங்கள் வித்யா வந்தனா விடம்...


உன்னருள் பார்வை இல்லாதவர்க்கு 
உலகிலே வாழ வழி ஏதும் உண்டோ? 


நீநீ மழையில் ஆட 
நாம் நாம் நனைந்தே வாட 
என் நாணத்தில் ஒன்றட்டும் 
நாடிக்குள் உன் சத்தம் உயிரே
தோழி ஒரு சில நாழி 
தனியென ஆனாள்
தரையினில் மீனாய் 



கொஞ்சம் மறக்கத்தான் செய்கிறது துன்பங்கள் எல்லாம்.......

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

காமராசு... அப்துல்லாஹ்




நெடிதுயர்ந்த நன்நெஞ்சில் நிறைகுடமாய் 
                                                                         நாட்டோர் நலம் நாடிய நற்பெருந்தலை 
நாடார் இவர் நம்நாட்டார் நாட்டின் பொருள்மீது 
நாட்டமிலா நல்லார் அன்றோ



பசியோடு வாடிய தளிர்களைத் தேடிய 
பாட்டாளிகளின் மாணவக் கூட்டாளி  
பள்ளிகளும் நிறையவைத்து அங்கு 
பிள்ளையர் பசியையும் குறையவைத்தார் 



முதலின் மீது பிரியம் காட்டாமுதலமைச்சு 
முழுமையான அர்ப்பணிப்பின் உயிர்மூச்சு  
எளிமையான தோற்றத்தில் பிரியமுள்ள  
எழ்மைஎனும் தாய்க்கு இவர் மூத்தபிள்ளை 



விருதுபட்டி பெற்றெடுத்த வீரசிங்கம் 
வேசமில்லா வெள்ளைஉளம் கொண்ட தங்கம் 
இந்தியாவும் இந்திராவும் போற்றும் எங்கள் 
கருமவிரர் காமராசர் வாழ்க வாழ்க...






நெடிதுயர்ந்த நன்நெஞ்சில் நிறைகுடமாய் 
                                                                         நாட்டோர் நலம் நாடிய நற்பெருந்தலை 
நாடார் இவர் நம்நாட்டார் நாட்டின் பொருள்மீது 
நாட்டமிலா நல்லார் அன்றோ



பசியோடு வாடிய தளிர்களைத் தேடிய 
பாட்டாளிகளின் மாணவக் கூட்டாளி  
பள்ளிகளும் நிறையவைத்து அங்கு 
பிள்ளையர் பசியையும் குறையவைத்தார் 



முதலின் மீது பிரியம் காட்டாமுதலமைச்சு 
முழுமையான அர்ப்பணிப்பின் உயிர்மூச்சு  
எளிமையான தோற்றத்தில் பிரியமுள்ள  
எழ்மைஎனும் தாய்க்கு இவர் மூத்தபிள்ளை 



விருதுபட்டி பெற்றெடுத்த வீரசிங்கம் 
வேசமில்லா வெள்ளைஉளம் கொண்ட தங்கம் 
இந்தியாவும் இந்திராவும் போற்றும் எங்கள் 
கருமவிரர் காமராசர் வாழ்க வாழ்க...



ஒரு ஓரத்தில் தானே...அப்துல்லாஹ்





எல்லாவிதமான 
என் இளவயதின் 
ஒடுங்கிய நினைவுகளும் 
பொருட்களாக சாட்சிகளாக 
உண்மையாக 
என்னிடமே உள்ளன


அவற்றில் சில 
விளையாட்டுப் பொருட்களாக 
காட்சிப் படங்களாக 
என் வாசிப்பில் கற்பிழந்த 
புத்தகங்களாக 
நான் பயன்படுத்தி 
கிழித்த கழிந்த 
உடுப்புகளாக 
காலத்தைப் போர்த்திய 
நினைவுகளாகவும் ...


ஆயினும் 
என் கையில் இருக்கும் 
உச்சியில் சில்லு தெறித்த 
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானது 
உம்மா சொல்லுவாள்

என்னால் எவ்வளவு காலம் 
ரணப் படுத்தப்பட்டவள்
என் உம்மா அந்த பம்பரத்தை மட்டும் 
யாரையும் தொட விட மாட்டாள் 


நான் அந்தப் பம்பரத்தை 
அதிகம் நேசித்தேன் 
வகுப்பறையில் 
மாமா வீட்டில் 
படுக்கையில் 
பஸ்சில் ஏறி உம்மாவுடன் 
தென்காசிக்கு பயணிக்கையில் 
பள்ளிவாசலில் 
தினமும் குளிக்க செல்லும் 
குளத்தின் படித்துறையில் 
என எல்லா இடத்திலும்...


என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த 
அந்தப் பம்பரத்தை...


இத்தனை ஆண்டுகளாக 
இருந்ததே தெரியாமல் 
மறந்தே போனேன் 
என்னை விட்டுப் பிரிந்த 
என் அன்புத் தாயைப்போல 
அவளது வஞ்சையின் 
வாடாத மணத்தைப் போல்


ஆனாலும் என் கூடவே
இருக்கிறது 
இருக்கட்டுமே...
ஒரு ஓரத்தில் தானே 




எல்லாவிதமான 
என் இளவயதின் 
ஒடுங்கிய நினைவுகளும் 
பொருட்களாக சாட்சிகளாக 
உண்மையாக 
என்னிடமே உள்ளன


அவற்றில் சில 
விளையாட்டுப் பொருட்களாக 
காட்சிப் படங்களாக 
என் வாசிப்பில் கற்பிழந்த 
புத்தகங்களாக 
நான் பயன்படுத்தி 
கிழித்த கழிந்த 
உடுப்புகளாக 
காலத்தைப் போர்த்திய 
நினைவுகளாகவும் ...


ஆயினும் 
என் கையில் இருக்கும் 
உச்சியில் சில்லு தெறித்த 
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானது 
உம்மா சொல்லுவாள்

என்னால் எவ்வளவு காலம் 
ரணப் படுத்தப்பட்டவள்
என் உம்மா அந்த பம்பரத்தை மட்டும் 
யாரையும் தொட விட மாட்டாள் 


நான் அந்தப் பம்பரத்தை 
அதிகம் நேசித்தேன் 
வகுப்பறையில் 
மாமா வீட்டில் 
படுக்கையில் 
பஸ்சில் ஏறி உம்மாவுடன் 
தென்காசிக்கு பயணிக்கையில் 
பள்ளிவாசலில் 
தினமும் குளிக்க செல்லும் 
குளத்தின் படித்துறையில் 
என எல்லா இடத்திலும்...


என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த 
அந்தப் பம்பரத்தை...


இத்தனை ஆண்டுகளாக 
இருந்ததே தெரியாமல் 
மறந்தே போனேன் 
என்னை விட்டுப் பிரிந்த 
என் அன்புத் தாயைப்போல 
அவளது வஞ்சையின் 
வாடாத மணத்தைப் போல்


ஆனாலும் என் கூடவே
இருக்கிறது 
இருக்கட்டுமே...
ஒரு ஓரத்தில் தானே 

சனி, அக்டோபர் 01, 2011

முற்று...அப்துல்லாஹ்









பிறர்க்காக வடியாத கண்ணீரும்
தனக்காக இல்லாத தயாளமும்

அன்பிலா உறவும் 
அடிக்காத துயரும்

தூய்மையிலா நீரும் 
வாய்மையிலா சொல்லும் 
நோய்மையிலா உடலும்

வியர்வையிலா உழைப்பும் 
சீர்மையிலா ஊதியமும்

பார்வையற்ற பரம்பொருளும்
பக்திய்ற்ற படைப்பினமும்

பறக்காத பறவையினமும் 
சுரக்காத நீர்ச்சுனையும் 

இறைக்காத ஊற்றும்
இரங்காத மனிதமும்

மறக்காத துயரும் 
துறக்காத ஆசையும் 

பிறக்காத பிண்டமும் 
கறக்காத பால்மடியும்

சிறக்காத பண்புகளும் 
இறக்காத உயிர்களும் - எனக்காக 
திறக்காத உன் இதயமும்... 

முரண்பட்டவை 
முற்றுப்புள்ளிகள்.....










பிறர்க்காக வடியாத கண்ணீரும்
தனக்காக இல்லாத தயாளமும்

அன்பிலா உறவும் 
அடிக்காத துயரும்

தூய்மையிலா நீரும் 
வாய்மையிலா சொல்லும் 
நோய்மையிலா உடலும்

வியர்வையிலா உழைப்பும் 
சீர்மையிலா ஊதியமும்

பார்வையற்ற பரம்பொருளும்
பக்திய்ற்ற படைப்பினமும்

பறக்காத பறவையினமும் 
சுரக்காத நீர்ச்சுனையும் 

இறைக்காத ஊற்றும்
இரங்காத மனிதமும்

மறக்காத துயரும் 
துறக்காத ஆசையும் 

பிறக்காத பிண்டமும் 
கறக்காத பால்மடியும்

சிறக்காத பண்புகளும் 
இறக்காத உயிர்களும் - எனக்காக 
திறக்காத உன் இதயமும்... 

முரண்பட்டவை 
முற்றுப்புள்ளிகள்.....


பொருந்திய பொழுதுகள்...அப்துல்லாஹ்




அதிகாலையும் 
அந்தி மாலையும்
மதிய வேளையும் 
மங்கின பகலும் 
மழை வெறிவும் 
இவற்றுடன் 
சில மணக்கும் பொழுதுகளும் 
மயக்கும் இரவுகளும் 
வெறுக்கும் கணங்களுடன் ....


மனதுக்கும் பொழுதுக்கும் 
இணைப்பு உண்டா 


பாசி படர்ந்த கிணற்றின் படியில் 
பாதத்தை பொத்தி அழுத்தி 
லாவகமாக மேல தாவ 
எனக்கு உதவுவது 
என் பாதமா அல்லது 
பத்திரமான உந்துதலா...


தேடித் தேடி இந்த இணைப்புகள் 
என்னோடு இணைந்திட இங்கே 
வழிகாட்டும் இடம் எதுவோ ...


இல்லாவிட்டால் 
நான் அழுத நேரத்தில் என்முகம் 
பார்த்து தன் முகத்தில் எனது அத்தனை 
வேதனையையும் உள்வாங்கிய 
என் சின்ன மகன் 
சிலிர்த்து அழுதானே..
எங்கே இருந்தான் அவன் 
பதினான்கு ஆண்டுக்கு முன்....


மழை வெறித்த அந்த 
மாலையும் பிற்பகலும் 
சேர்ந்த மங்கிய வெளிச்சத்தில் 


இறந்து கிடந்த என் தாயின் சடலத்தை
தோளில்சுமந்து கொண்டு நான் 
வீட்டிலிருந்து வெளிவரும்போது


என்மனசும் அந்தப் பொழுதும் 
ஒரே நிறம் ஒரே வாசம் 
மழை வெறித்த 
மாலையும் பிற்பகலும் 
சேர்ந்த மங்கிய நேரம் வந்தால் 
உம்மாவை நினைத்து 
ஒடுங்கி உருகி அழத் தோணுதே ஏன்


ஆழம நிறைந்த கிணற்றில் 
பாசி படர்ந்த கல் படியில் 
தடுமாறி நிற்கும்
உணர்வுகளும் 
தடுமாற்றங்களும் 
லாவகமாக தாவி மேல ஏற 
ஒரு கை தூக்கி விட 


கொஞ்சம் உதவி வேணும்...




அதிகாலையும் 
அந்தி மாலையும்
மதிய வேளையும் 
மங்கின பகலும் 
மழை வெறிவும் 
இவற்றுடன் 
சில மணக்கும் பொழுதுகளும் 
மயக்கும் இரவுகளும் 
வெறுக்கும் கணங்களுடன் ....


மனதுக்கும் பொழுதுக்கும் 
இணைப்பு உண்டா 


பாசி படர்ந்த கிணற்றின் படியில் 
பாதத்தை பொத்தி அழுத்தி 
லாவகமாக மேல தாவ 
எனக்கு உதவுவது 
என் பாதமா அல்லது 
பத்திரமான உந்துதலா...


தேடித் தேடி இந்த இணைப்புகள் 
என்னோடு இணைந்திட இங்கே 
வழிகாட்டும் இடம் எதுவோ ...


இல்லாவிட்டால் 
நான் அழுத நேரத்தில் என்முகம் 
பார்த்து தன் முகத்தில் எனது அத்தனை 
வேதனையையும் உள்வாங்கிய 
என் சின்ன மகன் 
சிலிர்த்து அழுதானே..
எங்கே இருந்தான் அவன் 
பதினான்கு ஆண்டுக்கு முன்....


மழை வெறித்த அந்த 
மாலையும் பிற்பகலும் 
சேர்ந்த மங்கிய வெளிச்சத்தில் 


இறந்து கிடந்த என் தாயின் சடலத்தை
தோளில்சுமந்து கொண்டு நான் 
வீட்டிலிருந்து வெளிவரும்போது


என்மனசும் அந்தப் பொழுதும் 
ஒரே நிறம் ஒரே வாசம் 
மழை வெறித்த 
மாலையும் பிற்பகலும் 
சேர்ந்த மங்கிய நேரம் வந்தால் 
உம்மாவை நினைத்து 
ஒடுங்கி உருகி அழத் தோணுதே ஏன்


ஆழம நிறைந்த கிணற்றில் 
பாசி படர்ந்த கல் படியில் 
தடுமாறி நிற்கும்
உணர்வுகளும் 
தடுமாற்றங்களும் 
லாவகமாக தாவி மேல ஏற 
ஒரு கை தூக்கி விட 


கொஞ்சம் உதவி வேணும்...

Related Posts Plugin for WordPress, Blogger...