ஞாயிறு, டிசம்பர் 25, 2011

பாதைகள்



பாதைகள் பயணத்தின் நடுவுகள்
பாதைகளை கொண்டே
பயணங்கள் அமையும்
ஆயினும்
அவை ஒரு போதும்
பயணிப்பதில்லை
நிச்சயமாய்
பாதைகளைக்கழித்து
பயணங்களுமில்லை

பாதைகள் தான்
பயணங்களின் இலக்குகள்
அவற்றின் நீளங்களும் தூரங்களும்
சூழ்ந்த மரங்களும் மாமலைகளும்
சுழித்தோடும் ஆறுகளும் அருவிகளும்
உடன் வருகையில்
அவற்றுக்கு மதிப்பை தருவன

பாதைகள்
பயணங்களின் வேற்றுமைகள்
ஊரோடும் நீரோடும்
நிலத்தோடும் வளியோடும்
நிரந்து நிலைத்தவை அவை .....

பாதைகள்
பயணங்களின் குடுவைகள்
அவற்றின் கழுத்தளவு வரை
ரண நிகழ்வுகளும்
ரத்தம் சிந்திய சிலிர்ப்புகளும்
மயங்கவைக்கும் மகிழ்வுகளும்
மலைக்க வைக்கும்
மரணங்களுமாய்

பாதைகள்
உருக்குலைந்த உடல்களின்
சிதறிய நிணங்களின்
சொல்லாமல் பிரிந்த உயிர்களின்
கடைசி நேர தலை சாய் மடிகள்
ஆங்கு
அவை மட்டுமே பிரிவோரின்
இறுதி நேர நெஞ்சிடிப்பை
உணர்பவைகள்....

மரித்தவர்களையும் அவர்களை
மடியேநதிக் காக்க வரும்
மனிதர்களையும் அவர்தம்
சிதைந்த கனவுகள்
சிதறிய உறவுகளையும்
கண்ணிமைக்காமல்
பார்த்து கலங்கி நிற்பவை....

பாதைகள்
நிறம் சூடி நிலை குலையாது
இரு கதவுகளை மட்டுமே
தம்முடன் வைத்துக் கொள்பவை
ஒன்றில் நீ தொடங்கையில்
மற்றொன்றில் நீ நிச்சயம்
விடை பெற்றே தீர வேண்டி...

பாதைகள்
நீ விடை பெறும் வரை
அவை உன்னிடமிருந்து
விடை பெறுவதில்லை....




பாதைகள் பயணத்தின் நடுவுகள்
பாதைகளை கொண்டே
பயணங்கள் அமையும்
ஆயினும்
அவை ஒரு போதும்
பயணிப்பதில்லை
நிச்சயமாய்
பாதைகளைக்கழித்து
பயணங்களுமில்லை

பாதைகள் தான்
பயணங்களின் இலக்குகள்
அவற்றின் நீளங்களும் தூரங்களும்
சூழ்ந்த மரங்களும் மாமலைகளும்
சுழித்தோடும் ஆறுகளும் அருவிகளும்
உடன் வருகையில்
அவற்றுக்கு மதிப்பை தருவன

பாதைகள்
பயணங்களின் வேற்றுமைகள்
ஊரோடும் நீரோடும்
நிலத்தோடும் வளியோடும்
நிரந்து நிலைத்தவை அவை .....

பாதைகள்
பயணங்களின் குடுவைகள்
அவற்றின் கழுத்தளவு வரை
ரண நிகழ்வுகளும்
ரத்தம் சிந்திய சிலிர்ப்புகளும்
மயங்கவைக்கும் மகிழ்வுகளும்
மலைக்க வைக்கும்
மரணங்களுமாய்

பாதைகள்
உருக்குலைந்த உடல்களின்
சிதறிய நிணங்களின்
சொல்லாமல் பிரிந்த உயிர்களின்
கடைசி நேர தலை சாய் மடிகள்
ஆங்கு
அவை மட்டுமே பிரிவோரின்
இறுதி நேர நெஞ்சிடிப்பை
உணர்பவைகள்....

மரித்தவர்களையும் அவர்களை
மடியேநதிக் காக்க வரும்
மனிதர்களையும் அவர்தம்
சிதைந்த கனவுகள்
சிதறிய உறவுகளையும்
கண்ணிமைக்காமல்
பார்த்து கலங்கி நிற்பவை....

பாதைகள்
நிறம் சூடி நிலை குலையாது
இரு கதவுகளை மட்டுமே
தம்முடன் வைத்துக் கொள்பவை
ஒன்றில் நீ தொடங்கையில்
மற்றொன்றில் நீ நிச்சயம்
விடை பெற்றே தீர வேண்டி...

பாதைகள்
நீ விடை பெறும் வரை
அவை உன்னிடமிருந்து
விடை பெறுவதில்லை....


விட்டில் பூச்சிகள்


விரகமென்னும் திரியின் சுடர்
விரிந்து நின்ற போதிலே - அந்த
நரகமதன் நாசம் காண
நர உயிர்கள் நாடுதே

விறகு போல எரித்து நம்மை
சிறகொடித்து வீழ்த்துதே -அம்
மலர் விரித்த மஞ்சத்தில் 
மதியிழப்பே மிஞ்சுதே

பாலருந்திப் பழம்சுவைக்கப்
பருவம் மட்டும் வெல்லுதே 
பாவையவள் பார்வை பட்டு 
பெற்ற பாசம்வடியுதே

மங்கையவள் சரணம் என
மற்றதெலாம் மறக்குதே

குற்றமிலா கொற்றவனின் 
கற்றகல்வி காற்றிலே
பெற்றவளின் முன்னிலையில் 
உற்றவள் கொடி பறக்குதே 

கன்னியவள் கைப்பிடியில்
கைசேதம் தொடரும் 
காலம் இனிக கழித்திடவே
கட்டில் கதையும் வளரும்

விட்டில் மோதி வீழ்வது போல்
வீணில் காலம் கழியும் 
விரகம் வசம் வீழ்ந்த அவன் 
நரகம் சூழந்த வாழ்வும்...





விரகமென்னும் திரியின் சுடர்
விரிந்து நின்ற போதிலே - அந்த
நரகமதன் நாசம் காண
நர உயிர்கள் நாடுதே

விறகு போல எரித்து நம்மை
சிறகொடித்து வீழ்த்துதே -அம்
மலர் விரித்த மஞ்சத்தில் 
மதியிழப்பே மிஞ்சுதே

பாலருந்திப் பழம்சுவைக்கப்
பருவம் மட்டும் வெல்லுதே 
பாவையவள் பார்வை பட்டு 
பெற்ற பாசம்வடியுதே

மங்கையவள் சரணம் என
மற்றதெலாம் மறக்குதே

குற்றமிலா கொற்றவனின் 
கற்றகல்வி காற்றிலே
பெற்றவளின் முன்னிலையில் 
உற்றவள் கொடி பறக்குதே 

கன்னியவள் கைப்பிடியில்
கைசேதம் தொடரும் 
காலம் இனிக கழித்திடவே
கட்டில் கதையும் வளரும்

விட்டில் மோதி வீழ்வது போல்
வீணில் காலம் கழியும் 
விரகம் வசம் வீழ்ந்த அவன் 
நரகம் சூழந்த வாழ்வும்...




புதன், டிசம்பர் 21, 2011

பெண் அடிமை




பெண்ணடிமை....
பெண்சுதந்திரம்....
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிய
விந்தை மனிதர்களை சாடி
கவிஞனின் அறைகூவல்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே! மாதர் சங்கங்கள்..
ஆணுக்குப் பெண்
சரிநிகர் சமானமே
இனி அடிமைப்படுத்த
விட மாட்டோம்
நாங்கள் விழித்துக் கொண்டோம்.
ஆங்காங்கே பேரணிகள்...
ஆமாம் இவர்களெல்லாம்  
யாருக்கு அடிமைகள்...

ஐயாயிரம் ரூபாய்க்கும் மேல்
அகலச் சரிகைப் பட்டு
ஆடைகளும்

ஓடி ஓடி வாங்கிக் குவிக்கும்
ஒப்பனைப் பொருட்களென்று
மைகளும் மஸ்காராக்களும்

மலை போல விலைஉயர்ந்தும்
மயங்கியே வாங்கி அணியும்
மாசற்ற பொன்னும் மணியும்



மதிமறந்து உறவாய்ச் சேர்த்த
தொலைகாட்சியும்
தொடர்காட்சிகளும்
உலகோ டுனை அடிமையாக்கி
விலங்கிட்டு வீழ்த்த
வேட்டைக்கு இலக்கான நீயோ...

தாயாகவும் தாரமாகவும்
தமக்கையாகவும் தன் மகளாகவும்
உன் அன்புக்கும் காதலுக்கும்
பாசத்துக்கும் அடிமைப்பட்ட
ஆடவர் எம்மிடம்
விடுதலை கேட்டு
வீதிக்கு வருகிறாய்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே!
ஆடவரும் கேட்கின்றோம்
விலங்கொடித்து வருவாயா....
வீதிக்கு நம் குடும்பம்
வரு முன்னர் தடுப்பாயா...




பெண்ணடிமை....
பெண்சுதந்திரம்....
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிய
விந்தை மனிதர்களை சாடி
கவிஞனின் அறைகூவல்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே! மாதர் சங்கங்கள்..
ஆணுக்குப் பெண்
சரிநிகர் சமானமே
இனி அடிமைப்படுத்த
விட மாட்டோம்
நாங்கள் விழித்துக் கொண்டோம்.
ஆங்காங்கே பேரணிகள்...
ஆமாம் இவர்களெல்லாம்  
யாருக்கு அடிமைகள்...

ஐயாயிரம் ரூபாய்க்கும் மேல்
அகலச் சரிகைப் பட்டு
ஆடைகளும்

ஓடி ஓடி வாங்கிக் குவிக்கும்
ஒப்பனைப் பொருட்களென்று
மைகளும் மஸ்காராக்களும்

மலை போல விலைஉயர்ந்தும்
மயங்கியே வாங்கி அணியும்
மாசற்ற பொன்னும் மணியும்



மதிமறந்து உறவாய்ச் சேர்த்த
தொலைகாட்சியும்
தொடர்காட்சிகளும்
உலகோ டுனை அடிமையாக்கி
விலங்கிட்டு வீழ்த்த
வேட்டைக்கு இலக்கான நீயோ...

தாயாகவும் தாரமாகவும்
தமக்கையாகவும் தன் மகளாகவும்
உன் அன்புக்கும் காதலுக்கும்
பாசத்துக்கும் அடிமைப்பட்ட
ஆடவர் எம்மிடம்
விடுதலை கேட்டு
வீதிக்கு வருகிறாய்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே!
ஆடவரும் கேட்கின்றோம்
விலங்கொடித்து வருவாயா....
வீதிக்கு நம் குடும்பம்
வரு முன்னர் தடுப்பாயா...

வெள்ளி, டிசம்பர் 16, 2011

கொடுக்கல் வாங்கல் இதயம் வழி...



பிரார்த்தனைகள்
மனசு சம்பந்தப்பட்டவை
கேட்பவனுக்கும் 
கொடுப்பவனுக்கும் 
இடையில் மட்டுமே 
நிகழும் வியாபாரம் இது...

கேட்பதைக் கண்டு 
இறைவனும் 
கொடுப்பதைக் கொண்டு
மனிதனும் 
மகிழ்கின்றனர்...
 
கேட்டலும்
கொடுத்தலும் 
படைப்பில் அந்தரங்கம்...

சூத்திரம் இதனை சுற்றியே  
சுழல்கிறது இந்த 
சுற்றும் மானுட அரங்கம் ...

வையகத்தில் தத்தமது
உன்னத நிலையை
வேண்டுதலிலும் 
வழங்குதலிலும் 
நிலைப்படுத்துகின்றனர்.......

கற்றறிந்த மேதைகளும் 
பட்டறிந்த ஞானிகளும்
பரம்பொருளின் உள்ளமையை 
பாருக்குச் சொன்னார்கள்
பயனுற வாழ்ந்தார்கள் 
படைத்தவனைப் புகழ்ந்தார்கள்
பாதத்தில் முள் தைத்தாலும் 
பரம்பொருளிடமே 
பதறி உருகி உறைந்தார்கள்....

பிரார்த்தனைகள் எனும் 
சுமைதாங்கி கற்களில் நம் 
சோகங்களை 
சுலபமாக இறக்கி வைப்பதால் 
சுழலும் இப்பூமியில் நாம் 
சுகம் பெற வாழ்கிறோம்....

காலம் முழுவதும் 
கைப்படம் மலர்த்தி 
கேட்டுப் பிரார்த்திக்க 
கர்த்தாவின் முன்னில் 
கைகட்டி நிற்கையிலே

ஐயகோ எந்தன்  
கண்கள் ஒன்றை நோக்க
கருத்தும் அதன் வழியில்...

காதுகளில் உரசும் 
கானங்களின் இசையும் 
கல்பின் கதவைக்
கொஞ்சம் திறக்க...

கடிதொரு வாசனை நாசியில் 
கொண்டு கடிவாளமில்லா
குதிரை போல உள்ளம் 
காற்றின் திசைகளில் 
காரணனை மறந்து....

நான் நின்றும், குனிந்தும், 
நெற்றியை குத்தி 
நெடுஞ்ஜாண் கிடையாய்
நான் செய்யும் அவற்றின் பெயர்
பிரார்த்தனைகளா...



பிரார்த்தனைகள்
மனசு சம்பந்தப்பட்டவை
கேட்பவனுக்கும் 
கொடுப்பவனுக்கும் 
இடையில் மட்டுமே 
நிகழும் வியாபாரம் இது...

கேட்பதைக் கண்டு 
இறைவனும் 
கொடுப்பதைக் கொண்டு
மனிதனும் 
மகிழ்கின்றனர்...
 
கேட்டலும்
கொடுத்தலும் 
படைப்பில் அந்தரங்கம்...

சூத்திரம் இதனை சுற்றியே  
சுழல்கிறது இந்த 
சுற்றும் மானுட அரங்கம் ...

வையகத்தில் தத்தமது
உன்னத நிலையை
வேண்டுதலிலும் 
வழங்குதலிலும் 
நிலைப்படுத்துகின்றனர்.......

கற்றறிந்த மேதைகளும் 
பட்டறிந்த ஞானிகளும்
பரம்பொருளின் உள்ளமையை 
பாருக்குச் சொன்னார்கள்
பயனுற வாழ்ந்தார்கள் 
படைத்தவனைப் புகழ்ந்தார்கள்
பாதத்தில் முள் தைத்தாலும் 
பரம்பொருளிடமே 
பதறி உருகி உறைந்தார்கள்....

பிரார்த்தனைகள் எனும் 
சுமைதாங்கி கற்களில் நம் 
சோகங்களை 
சுலபமாக இறக்கி வைப்பதால் 
சுழலும் இப்பூமியில் நாம் 
சுகம் பெற வாழ்கிறோம்....

காலம் முழுவதும் 
கைப்படம் மலர்த்தி 
கேட்டுப் பிரார்த்திக்க 
கர்த்தாவின் முன்னில் 
கைகட்டி நிற்கையிலே

ஐயகோ எந்தன்  
கண்கள் ஒன்றை நோக்க
கருத்தும் அதன் வழியில்...

காதுகளில் உரசும் 
கானங்களின் இசையும் 
கல்பின் கதவைக்
கொஞ்சம் திறக்க...

கடிதொரு வாசனை நாசியில் 
கொண்டு கடிவாளமில்லா
குதிரை போல உள்ளம் 
காற்றின் திசைகளில் 
காரணனை மறந்து....

நான் நின்றும், குனிந்தும், 
நெற்றியை குத்தி 
நெடுஞ்ஜாண் கிடையாய்
நான் செய்யும் அவற்றின் பெயர்
பிரார்த்தனைகளா...

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

பாரதி - பாட்டுடைத்தலைவன்




எட்டயபுரம் தந்த ஏழைக் கவிஞன் இவன்
சாட்டையை உருமாற்றி எழுத்தாணியாக்கியதால்
கோட்டை கொத்தளங்கள் கொதித்தடங்கியது
ராட்டையை சுழற்றிய காந்திமகான் கை ஓங்கியது

சூட்டுக்கோல் போல இவன்வரிகள் சுட்டதனால்
சுதந்திரக் கனல் சூழ்ந்து சூறையாடி வென்றது...
மண்ணில் மானுடம் மாண்புகளை வென்றிடவே
பண்ணில் விதையேற்றி தூவினான் பாரதத்தில்

மங்கையாய் ஜனித்திடவே மாதவமே காரணம்
இங்கவர் அடுப்பூதும் இழிநிலையும் இனியில்லை 
சங்கை முழங்கச்செய்தான் சண்டாளர் ஒடுங்கிடவே 
சிங்கம் எங்கள் பாரதித்தின் புரட்ச்சிக்கவி வாழி....

நாட்டுடைமை யாக்கப்பட்ட பாடுடைதலைவனிவன் 
பாட்டால் பரங்கியர் பட்டார் பெரும்பாடு 
வேட்டை தொடங்கியது வெண்பா வழியாக பகையன் 
நாட்டை விட்டான் நமக்கும் வெற்றி கிட்டியதே.....

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே 
ஆனந்தம் கொண்டாடுது பாரதம் இன்று 
அன்புடை பாரதி நம்மில் பிறந்தான் என்று 
ஆருயிர் பாரதத்தில் நாம் பிறந்தோம் என்று 

ஆடுவோமே...பாரதியை நினைத்து 




எட்டயபுரம் தந்த ஏழைக் கவிஞன் இவன்
சாட்டையை உருமாற்றி எழுத்தாணியாக்கியதால்
கோட்டை கொத்தளங்கள் கொதித்தடங்கியது
ராட்டையை சுழற்றிய காந்திமகான் கை ஓங்கியது

சூட்டுக்கோல் போல இவன்வரிகள் சுட்டதனால்
சுதந்திரக் கனல் சூழ்ந்து சூறையாடி வென்றது...
மண்ணில் மானுடம் மாண்புகளை வென்றிடவே
பண்ணில் விதையேற்றி தூவினான் பாரதத்தில்

மங்கையாய் ஜனித்திடவே மாதவமே காரணம்
இங்கவர் அடுப்பூதும் இழிநிலையும் இனியில்லை 
சங்கை முழங்கச்செய்தான் சண்டாளர் ஒடுங்கிடவே 
சிங்கம் எங்கள் பாரதித்தின் புரட்ச்சிக்கவி வாழி....

நாட்டுடைமை யாக்கப்பட்ட பாடுடைதலைவனிவன் 
பாட்டால் பரங்கியர் பட்டார் பெரும்பாடு 
வேட்டை தொடங்கியது வெண்பா வழியாக பகையன் 
நாட்டை விட்டான் நமக்கும் வெற்றி கிட்டியதே.....

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே 
ஆனந்தம் கொண்டாடுது பாரதம் இன்று 
அன்புடை பாரதி நம்மில் பிறந்தான் என்று 
ஆருயிர் பாரதத்தில் நாம் பிறந்தோம் என்று 

ஆடுவோமே...பாரதியை நினைத்து 

சனி, டிசம்பர் 10, 2011

ஓய்வாய் ஒரு நாள்


உறவுகளையும் அவர் நேசத்தையும் 
உள்ளம் கனமாய் கனக்க சுமந்து 
ஓடிய கால்கள் திரவியம் தேடி அலுத்து
திண்டில் உறைகிறது 
திரும்பவும் எழுந்து..
அதோ அந்த விண்ணைத் தொடும் 
பலமாடியை பளிஙகு 
மாதிரி துடைக்கணும் ...
எப்ப நான் சந்தோசமாய்
நான்கு சுவருக்குள் உறைவேன் ..
கபரிலா...

உறவுகளையும் அவர் நேசத்தையும் 
உள்ளம் கனமாய் கனக்க சுமந்து 
ஓடிய கால்கள் திரவியம் தேடி அலுத்து
திண்டில் உறைகிறது 
திரும்பவும் எழுந்து..
அதோ அந்த விண்ணைத் தொடும் 
பலமாடியை பளிஙகு 
மாதிரி துடைக்கணும் ...
எப்ப நான் சந்தோசமாய்
நான்கு சுவருக்குள் உறைவேன் ..
கபரிலா...

சனி, டிசம்பர் 03, 2011

பார்வைக் கணை



போர்க்காலங்களின் வாழ்வீச்சினுங் கொடிதுன் 
பார்வையின் பக்க விளைவுகள்...
அந்த நாளின் உன் ஆயிரம் கதைகளில் 
இளவரசிகளின் காதல் தலைவனுக்கு 
நீ அன்பினால் அதரம் குவிப்பாயே...


இங்கே அருகினில் பைம்புனலாய் பசுந்தளிராய்
உன் பாதச்சுவட்டை பார்த்து நடக்கும் 
நான் ....


விழிக்கணை தொடுத்து எனை 
வீழ்த்தியது போதும் கொஞ்சம்
விட்டுவிடு ... நான் வேண்டும் எனக்கு 
பெண்ணே !


காலமெல்லாம் கண்ணில் வைத்து 
என் நெஞ்சார உன்னை நேசிக்க....


அப்துல்லாஹ்....


போர்க்காலங்களின் வாழ்வீச்சினுங் கொடிதுன் 
பார்வையின் பக்க விளைவுகள்...
அந்த நாளின் உன் ஆயிரம் கதைகளில் 
இளவரசிகளின் காதல் தலைவனுக்கு 
நீ அன்பினால் அதரம் குவிப்பாயே...


இங்கே அருகினில் பைம்புனலாய் பசுந்தளிராய்
உன் பாதச்சுவட்டை பார்த்து நடக்கும் 
நான் ....


விழிக்கணை தொடுத்து எனை 
வீழ்த்தியது போதும் கொஞ்சம்
விட்டுவிடு ... நான் வேண்டும் எனக்கு 
பெண்ணே !


காலமெல்லாம் கண்ணில் வைத்து 
என் நெஞ்சார உன்னை நேசிக்க....


அப்துல்லாஹ்....

நீர்மடி



என் விழியைத்துளைத்து
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது

அப்துல்லாஹ்




என் விழியைத்துளைத்து
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது

அப்துல்லாஹ்


Related Posts Plugin for WordPress, Blogger...