சனி, ஜூன் 25, 2011

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து by அப்துல்லாஹ்




கரைகளை மறந்தது நீலக்கடல் 
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம் 
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால் 
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர் 

வைக்கோல் போருக்கும் விலை உண்டு 
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட 
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி 
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே 

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய் 

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு 
பெருபிழையன்றோ நான் செய்தேன் 
காளைகளைப்போல எனக்கும் அன்று 
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....



கரைகளை மறந்தது நீலக்கடல் 
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம் 
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால் 
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர் 

வைக்கோல் போருக்கும் விலை உண்டு 
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட 
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி 
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே 

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய் 

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு 
பெருபிழையன்றோ நான் செய்தேன் 
காளைகளைப்போல எனக்கும் அன்று 
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...