திங்கள், நவம்பர் 14, 2011

பொற்ச்சித்திரம் - அப்துல்லாஹ்




கண்களால் காண்பீர் களிப்பீர் - மடல் இரண்டு 
காதுகள் உமக்கு மொழியுணர உணர்த்த எனில் 
நாசித்துளை வழியே நறுமணத்தை ருசி சுவாசி
பற்களும் கால்களும் இதழ்களும் புருவமும் 
கழுத்தும் நன்நெஞ்சும் தடந்தோள் கைகளும் 
அவற்றிடை விரல்களும் அதனதன் தொழில் செய்ய


குறைவிலா அங்கங்கள் அத்தனையும் அவர் பெற்று 
மறைவில் செய்வதெல்லாம் மானங்கெட்ட தொழிலம்மா 
பாழும் வையமதில் பண்பற்ற தொழில் செய்வோர் 
பசிக்குத் தன்குஞ்சை புசித்திடும் கோலம கொண்டு 


விசத்திர மனிதர் கூட்டம் விளையாடும் இப்புவியில் 
குற்றமிலா மாதே நின் பொற்பாதம் வடிப்பது 
குறைவிலாச்சித்திரமெனில் நீ இந்த மண்ணின் 
மங்கை வடிவெடுத்த பொற்ச்சித்திரமே....



கண்களால் காண்பீர் களிப்பீர் - மடல் இரண்டு 
காதுகள் உமக்கு மொழியுணர உணர்த்த எனில் 
நாசித்துளை வழியே நறுமணத்தை ருசி சுவாசி
பற்களும் கால்களும் இதழ்களும் புருவமும் 
கழுத்தும் நன்நெஞ்சும் தடந்தோள் கைகளும் 
அவற்றிடை விரல்களும் அதனதன் தொழில் செய்ய


குறைவிலா அங்கங்கள் அத்தனையும் அவர் பெற்று 
மறைவில் செய்வதெல்லாம் மானங்கெட்ட தொழிலம்மா 
பாழும் வையமதில் பண்பற்ற தொழில் செய்வோர் 
பசிக்குத் தன்குஞ்சை புசித்திடும் கோலம கொண்டு 


விசத்திர மனிதர் கூட்டம் விளையாடும் இப்புவியில் 
குற்றமிலா மாதே நின் பொற்பாதம் வடிப்பது 
குறைவிலாச்சித்திரமெனில் நீ இந்த மண்ணின் 
மங்கை வடிவெடுத்த பொற்ச்சித்திரமே....

2 கருத்துகள்:

  1. படத்தின் வலியை .சொல்லும் உங்கள் வரிகள்,
    முடிவில் சொல்லும் வரிகள்
    குறைவிலாச்சித்திரமெனில் நீ இந்த மண்ணின்
    மங்கை வடிவெடுத்த பொற்ச்சித்திரமே....
    மனதுக்கு ஒரு ஊக்கத்தை தந்தது உண்மை.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...