வியாழன், ஜனவரி 12, 2012

அதிர்ந்ததால் உதிர்க்கிறேன்....



மரங்களடர்ந்த தோப்பில்
காவலாளியின் கவன்த்துக்குத் தப்பி
கனி ஒன்று வீழ்ந்து 
தரை தொட 

அசைந்த மரத்தின் 
ஆடிய கிளையின் 
அதன் கனிகளின் எண்ணிக்கையில் 
ஒன்று குறைகிறது....

கிளையொன்றில் ஓடிய 
அணிலின் சுழலும் பார்வைக்குள் 
வீழ்ந்த கனியின் உருளல்...

அதற்கு எதுவும் முக்கியமில்லை 
அசையாமல மடிப்பெற்ற 
அம்மரத்தையே தாங்கிய 
வனத்தின் தளத்தில்
கனியொன்று தரையுடன் கொண்ட 
புதிய உறவையோ 
அம்மரத்தின் இழப்பு சோகத்தையோ 
கனிக்கும் விருட்சத்திற்குமான 
அறுந்துபோன இணைப்பை
அற்றுப்போன உறவையோ..

அறியாத அணிலும் 
அந்தக் காவலாளியும் 
இன்னும் சில பறவைகளும் 
சிற்சில மரங்களும் 
கண்டும் காணாமல் 
அறிந்தும் அறியாமல் 
ஒன்றுமே நிகழாதது போல 
எல்லாமே நிகழ்கிறது அதுபோல் 

ஒவ்வொரு நாளும் 
 உன்னால் நான் அதிர்வதாலும்
துவண்டு போவதாலும்
உதிர்த்துக்கொண்டே இருக்கிறேன்
உன் பற்றிய என் நன்மதிப்பீடுகளை
அடியில் என் பாதம் சுற்றி 
இப்பொழுது நிறையக் கனிகளும்
சருகுகளும்......
அவற்றை 
நம்மைத்தவிர 
யாரும் கவனியாமல்
குப்பைகளாய்..... 




மரங்களடர்ந்த தோப்பில்
காவலாளியின் கவன்த்துக்குத் தப்பி
கனி ஒன்று வீழ்ந்து 
தரை தொட 

அசைந்த மரத்தின் 
ஆடிய கிளையின் 
அதன் கனிகளின் எண்ணிக்கையில் 
ஒன்று குறைகிறது....

கிளையொன்றில் ஓடிய 
அணிலின் சுழலும் பார்வைக்குள் 
வீழ்ந்த கனியின் உருளல்...

அதற்கு எதுவும் முக்கியமில்லை 
அசையாமல மடிப்பெற்ற 
அம்மரத்தையே தாங்கிய 
வனத்தின் தளத்தில்
கனியொன்று தரையுடன் கொண்ட 
புதிய உறவையோ 
அம்மரத்தின் இழப்பு சோகத்தையோ 
கனிக்கும் விருட்சத்திற்குமான 
அறுந்துபோன இணைப்பை
அற்றுப்போன உறவையோ..

அறியாத அணிலும் 
அந்தக் காவலாளியும் 
இன்னும் சில பறவைகளும் 
சிற்சில மரங்களும் 
கண்டும் காணாமல் 
அறிந்தும் அறியாமல் 
ஒன்றுமே நிகழாதது போல 
எல்லாமே நிகழ்கிறது அதுபோல் 

ஒவ்வொரு நாளும் 
 உன்னால் நான் அதிர்வதாலும்
துவண்டு போவதாலும்
உதிர்த்துக்கொண்டே இருக்கிறேன்
உன் பற்றிய என் நன்மதிப்பீடுகளை
அடியில் என் பாதம் சுற்றி 
இப்பொழுது நிறையக் கனிகளும்
சருகுகளும்......
அவற்றை 
நம்மைத்தவிர 
யாரும் கவனியாமல்
குப்பைகளாய்..... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...