சனி, பிப்ரவரி 04, 2012

நாட்காட்டியில் எண்கள்


சூரியனின் தோன்றலும் அடைதலுமான
மீள்நிகழ்வுகளால்
நாழிகைகளை கடத்தியவாறு
நாட்கள் அவற்றின் போக்கில் கரைகின்றன...

சிலிர்க்கவைக்கும் சில நிகழ்வுகள் மட்டும்
காலநீரோட்டத்தில் கரைதாண்டாமலே
கல்போடு தங்கி கலங்கடிக்கின்றன...

உறவுகளின் கணப்புச்சூட்டில்
உயிர் கரைந்து உள்ளம் அனாதையாய் நான்
உறங்காமல் தவித்த அந்த பொழுதுகளை
உள்ளடக்கிய நாள் ஒன்று
ஒரு கட்டத்துக்குள் எண்ணாக வடிவெடுத்து
நாட்காட்டியில்
ஏதோ ஒரு இடத்தில்
வரிசையோடு வரிசையாக....

அந்தப் பகலில் தான் அது நிகழ்ந்தது
அதனால் எத்தனை சோகம் என்னுள்
அசையாமல் அப்படியே
என் கூப்பிடலுக்கும் என் அசைத்தலுக்கும்
எந்த பதிலும் காட்டாது என் தாய்...
மல்லாந்து கட்டிலில் சலனமில்லாமல்....

வெடித்துச் சிதறும் இதய வேதனைகளை
கொஞ்சமும் அறியாது
ம்மா... ன்னு நான் கதறிய பொழுதில்
தன் கிடப்பை மாற்றாமல்.....
மரணத்தை உடுத்தி மரக்கட்டையாய்
மண்ணோடு மண்ணாய் மாறிப்போன
அந்த நாளும் அந்தப் பொழுதும்
அந்த வேதனைகளும்
ஒரு கட்டத்துக்குள் எண்ணாக வடிவெடுத்து
ஏதோ ஒரு இடத்தில் வரிசையோடு வரிசையாக....
நாட்காட்டியோடு மட்டுமே நான்.....



சூரியனின் தோன்றலும் அடைதலுமான
மீள்நிகழ்வுகளால்
நாழிகைகளை கடத்தியவாறு
நாட்கள் அவற்றின் போக்கில் கரைகின்றன...

சிலிர்க்கவைக்கும் சில நிகழ்வுகள் மட்டும்
காலநீரோட்டத்தில் கரைதாண்டாமலே
கல்போடு தங்கி கலங்கடிக்கின்றன...

உறவுகளின் கணப்புச்சூட்டில்
உயிர் கரைந்து உள்ளம் அனாதையாய் நான்
உறங்காமல் தவித்த அந்த பொழுதுகளை
உள்ளடக்கிய நாள் ஒன்று
ஒரு கட்டத்துக்குள் எண்ணாக வடிவெடுத்து
நாட்காட்டியில்
ஏதோ ஒரு இடத்தில்
வரிசையோடு வரிசையாக....

அந்தப் பகலில் தான் அது நிகழ்ந்தது
அதனால் எத்தனை சோகம் என்னுள்
அசையாமல் அப்படியே
என் கூப்பிடலுக்கும் என் அசைத்தலுக்கும்
எந்த பதிலும் காட்டாது என் தாய்...
மல்லாந்து கட்டிலில் சலனமில்லாமல்....

வெடித்துச் சிதறும் இதய வேதனைகளை
கொஞ்சமும் அறியாது
ம்மா... ன்னு நான் கதறிய பொழுதில்
தன் கிடப்பை மாற்றாமல்.....
மரணத்தை உடுத்தி மரக்கட்டையாய்
மண்ணோடு மண்ணாய் மாறிப்போன
அந்த நாளும் அந்தப் பொழுதும்
அந்த வேதனைகளும்
ஒரு கட்டத்துக்குள் எண்ணாக வடிவெடுத்து
ஏதோ ஒரு இடத்தில் வரிசையோடு வரிசையாக....
நாட்காட்டியோடு மட்டுமே நான்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...