புதன், ஜூன் 15, 2011

கலந்த வண்ணங்கள் Abdullah




பச்சைப்பசேல் என
பாய்கின்ற நீர் கொண்டு பயிர் வளரும்
பாய் விரித்து பள்ளிகொள்ளும் அத்தருணம்

செக்கச்செவேல் என
செந்தணலும் சோதியுடன் சுடர்விரிக்கும்
செம்மாதுளை அதரங்கள் நிறம் பரப்பும்

வெள்ளைவெளேர் என
விடைபெற்றுப் பனிமலையும் வெடித்துதிரும்
வெண்முத்துப் பற்க்கடித்து வெட்கமுறும்

கன்னங்கரேல் என
கார்முகிலும் கண்விழித்து நடைபயிலும்
கருங்கூந்தல் குழலவிழ்ந்து களிப்படையும்

அருவி நீர் அருந்தியும் அடங்காது தாகம்
அடக்கினாலும் அடங்காது அடங்கிடாது போகும்...   



பச்சைப்பசேல் என
பாய்கின்ற நீர் கொண்டு பயிர் வளரும்
பாய் விரித்து பள்ளிகொள்ளும் அத்தருணம்

செக்கச்செவேல் என
செந்தணலும் சோதியுடன் சுடர்விரிக்கும்
செம்மாதுளை அதரங்கள் நிறம் பரப்பும்

வெள்ளைவெளேர் என
விடைபெற்றுப் பனிமலையும் வெடித்துதிரும்
வெண்முத்துப் பற்க்கடித்து வெட்கமுறும்

கன்னங்கரேல் என
கார்முகிலும் கண்விழித்து நடைபயிலும்
கருங்கூந்தல் குழலவிழ்ந்து களிப்படையும்

அருவி நீர் அருந்தியும் அடங்காது தாகம்
அடக்கினாலும் அடங்காது அடங்கிடாது போகும்...   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...