ஞாயிறு, ஜூன் 19, 2011

பிரபஞ்சம் - விஞ்ஞானக் கழிப்பிடம்...Abdullah



நிரந்தரம் என்றில்லாத நீல வான மாயை 

சூரியனையும் சந்திரனையும் தவழ விட்ட வடுக்களின்றி

தகவல் சூல் கொண்ட ஒளிஒலிவரிகள் மேகங்கள் விரவலில்
உண்மைகளும் ஒருகோடிபொய்களும் ஊடகங்களுக்காய்
பரிமாறும் செய்திகள் பரவலாய் நீர்மேகங்களுக்கருகில்
பாயும் ஓடங்கள் பகுத்தறியும் மனிதப் பறவைகள் 
காயும் வெப்பம் கணக்கின்றி உயர
கைதட்டும் ஏவுகணை வெற்றிக் கூட்டம் 
மழை வற்றிப்போன விவசாயியின் வெறுமை 
ஆழ்குழாய் நீருக்கு அடுத்த கண்டமும் துளைக்க
வேசியின் கணக்காய் மாறிப்போன மாசுக்காற்று 
எஞ்சிய குடி நீர் இங்கு எட்டு ரூபாய் ஆன பின்னும்
அஞ்சி ஒடுங்கிப்போய் அரண்டு நிற்கும் அவலம் 
மண்புழுவுக்காய் தோண்டிய மண்ணில் இரத்தம் 
கடல் தாண்டினானாம் கரையோரமாய் சடல எண்ணிக்கை
இலவச எச்சில் மீனுக்காய் ஏங்கும் காக்கை போல்
ஆசைகள் அரித்து அழுகிய இலவச மனிதக்கூட்டம் 
ஆயிரம் மதிப்பெண்ணுடன் அடக்கம் செய்யப்பட்ட ஏழைக்கல்வி 
பயிர் வளர்த்திட நச்சுக் கலக்கும் நவீன விவசாயம் 
மகளின் தாலி அறுக்க பெரிய தொகைக கைமாற்றும் பெற்றோர்
பிரபஞ்சத்தில் கதிரொளி காற்று நீருடன் கஞ்சியும்
கலப்படமாகிட கற்பும் நட்பும் சுற்றமும் பாசமும்
செத்துச்சுண்ணாம்பாய் செல்கிறது சமாதி நோக்கி 
இனி மரங்களும் விலங்குகளும் மலர் வளையம் வைக்கட்டும்
மாண்டு மடிந்து மட்கிப்போன மானிடகுறியிடுகளுக்கு








நிரந்தரம் என்றில்லாத நீல வான மாயை 

சூரியனையும் சந்திரனையும் தவழ விட்ட வடுக்களின்றி

தகவல் சூல் கொண்ட ஒளிஒலிவரிகள் மேகங்கள் விரவலில்
உண்மைகளும் ஒருகோடிபொய்களும் ஊடகங்களுக்காய்
பரிமாறும் செய்திகள் பரவலாய் நீர்மேகங்களுக்கருகில்
பாயும் ஓடங்கள் பகுத்தறியும் மனிதப் பறவைகள் 
காயும் வெப்பம் கணக்கின்றி உயர
கைதட்டும் ஏவுகணை வெற்றிக் கூட்டம் 
மழை வற்றிப்போன விவசாயியின் வெறுமை 
ஆழ்குழாய் நீருக்கு அடுத்த கண்டமும் துளைக்க
வேசியின் கணக்காய் மாறிப்போன மாசுக்காற்று 
எஞ்சிய குடி நீர் இங்கு எட்டு ரூபாய் ஆன பின்னும்
அஞ்சி ஒடுங்கிப்போய் அரண்டு நிற்கும் அவலம் 
மண்புழுவுக்காய் தோண்டிய மண்ணில் இரத்தம் 
கடல் தாண்டினானாம் கரையோரமாய் சடல எண்ணிக்கை
இலவச எச்சில் மீனுக்காய் ஏங்கும் காக்கை போல்
ஆசைகள் அரித்து அழுகிய இலவச மனிதக்கூட்டம் 
ஆயிரம் மதிப்பெண்ணுடன் அடக்கம் செய்யப்பட்ட ஏழைக்கல்வி 
பயிர் வளர்த்திட நச்சுக் கலக்கும் நவீன விவசாயம் 
மகளின் தாலி அறுக்க பெரிய தொகைக கைமாற்றும் பெற்றோர்
பிரபஞ்சத்தில் கதிரொளி காற்று நீருடன் கஞ்சியும்
கலப்படமாகிட கற்பும் நட்பும் சுற்றமும் பாசமும்
செத்துச்சுண்ணாம்பாய் செல்கிறது சமாதி நோக்கி 
இனி மரங்களும் விலங்குகளும் மலர் வளையம் வைக்கட்டும்
மாண்டு மடிந்து மட்கிப்போன மானிடகுறியிடுகளுக்கு






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...