ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

கடுகு - அப்துல்லாஹ்




எண்ணற்ற விருட்சங்களும்
எண்ணமுடியாக் கனிகளும் உள்ளே 
விதை 

ஒன்றுடன் ஒன்று கூட்டினால் இரண்டு 
ஒன்றுடன் ஒன்று கூடினால் ஒன்று 
குழந்தை 

மனசுடன் மகிழ்வாய்ப் பேசினால் மலர்ச்சி 
மனசுடன் மனசு பேசினால் மகிழ்ச்சி
காதல் 

யானை பூதமானது பின்னர் புரவியானது 
உருவங்கள் மாறிக்கொண்டே வந்தன 
மேகக்கலைவு

வண்ணங்களை எழுதிப்பார் ஓவியம 
எண்ணங்களை எழுதிப்பார் காவியம் 
ஜீவிதம் 

நிலவுடன் வானம் கூடினால் இரவு
நினைவுகள் சொந்தம் தேடினால் உறவு 
மறைபவை 

இரண்டு கண்களுக்கும் ஒன்றுதான் காட்சி 
இரண்டு உறவுகளுக்கும் ஒன்று தான் சாட்சி 
மழலை 

மட்கி மண்ணாய்ப் போன மனித சடலத்திற்கு 
வாக்களித்தது போலவே ஓடிக கொண்டிருக்கிறது 
அதன் கைக்கடிகாரம் 



எண்ணற்ற விருட்சங்களும்
எண்ணமுடியாக் கனிகளும் உள்ளே 
விதை 

ஒன்றுடன் ஒன்று கூட்டினால் இரண்டு 
ஒன்றுடன் ஒன்று கூடினால் ஒன்று 
குழந்தை 

மனசுடன் மகிழ்வாய்ப் பேசினால் மலர்ச்சி 
மனசுடன் மனசு பேசினால் மகிழ்ச்சி
காதல் 

யானை பூதமானது பின்னர் புரவியானது 
உருவங்கள் மாறிக்கொண்டே வந்தன 
மேகக்கலைவு

வண்ணங்களை எழுதிப்பார் ஓவியம 
எண்ணங்களை எழுதிப்பார் காவியம் 
ஜீவிதம் 

நிலவுடன் வானம் கூடினால் இரவு
நினைவுகள் சொந்தம் தேடினால் உறவு 
மறைபவை 

இரண்டு கண்களுக்கும் ஒன்றுதான் காட்சி 
இரண்டு உறவுகளுக்கும் ஒன்று தான் சாட்சி 
மழலை 

மட்கி மண்ணாய்ப் போன மனித சடலத்திற்கு 
வாக்களித்தது போலவே ஓடிக கொண்டிருக்கிறது 
அதன் கைக்கடிகாரம் 

6 கருத்துகள்:

  1. சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு

    //யானை பூதமானது பின்னர் புரவியானது
    உருவங்கள் மாறிக்கொண்டே வந்தன
    மேகக்கலைவு//

    நல்ல புனைவு கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உறவே
    உங்களின் தடம் பதிந்ததற்கும் தரமான மதிப்பீட்டுக்கும்...என் அன்பும் மகிழ்ச்சியும்

    பதிலளிநீக்கு
  3. கவிதை அற்புதம். இன்னொரு மனுஷ்ய புத்திரன் தயாராகிக் கொண்டிருப்பது தெரிகிறது.

    http://charuonline.com/blog/?p=1200

    பதிலளிநீக்கு
  4. இரண்டு கண்களுக்கும் ஒன்றுதான் காட்சி
    இரண்டு உறவுகளுக்கும் ஒன்று தான் சாட்சி
    மழலை


    வரிகள் அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  5. இயல்பிலேயே இலக்கிய தாகம் கோடா நீ இப்போதாவது வெளிப்படுகிறாயே... நன்றி.
    உனது ப்ளாக் வந்தேன் நன்றாக இருக்கிறது... தொடர்ந்து பதியேன் அலி..

    பதிலளிநீக்கு
  6. அன்பு அய்யா தமிழ்த்தோட்டம் உங்களின் கருத்துரை என்னை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிக்கடலில் அழுத்துகிறது.. உங்களின் இடையறாத பணிகளுக்கு அப்பாலும் என்னை வாசிக்கும் உங்களுக்கு வாசமுள்ள பாசமுள்ள மனசு தான்...
    வாழ்க தமிழ்
    வளர்க நற்றமிழர்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...