வெள்ளி, நவம்பர் 25, 2011

ஏன் என்னை நான் நேசிக்கவில்லை ...



நான் என்னுள்ளே 
என்னைக் கேட்கும் ஒரு கேள்வி 
என்னை எனக்குப் பிடிக்குமா


மற்றவருக்குப் பிடிப்பதும்
பிடிக்காது போதலும்
என்னைப் பொருத்தமட்டில் 
ஒரு பொருட்டே அல்ல 


என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக 
என்னை நான் தான் முதலில் 
உற்று நோக்கினேன்


எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும் 
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும் 


சீட்டுக்கட்டு கொண்டு சேர்த்த 
கோபுரமாய் நான்


சிறகுகள், வால், அலகு, 
கீறிக் கிழிக்க கோரைப் பல்லுடன் 
நழுவி ஓட என் உடலம் மூடிய 
வளுவளுக்கும் செதில்களுமாய் 
வீரியத்துடன் விரைந்து 
வெற்றிடமாய் உறைந்து போன 
மனித உருவில் நான் 


என் கோரைப்பற்களின் 
பயன்பாட்டில் என்னை நான் 
வெறுத்ததும்


வால் கொஞ்சம் ஆடியபோது 
வாழ்வும் சற்று திசை மாறியதும்...


சூறாவளியாய் சூழ்ந்து பகை 
சுழற்றிடத் துணிந்த கணத்தில் 
வளுவளுக்கும் செதில்களுடன்
வசதியாய் தப்பித்தொலைந்ததும்


கொஞ்சம் உணர ஆரம்பித்தபோது 
கையில் மண்வெட்டியுடன் 
புதைகுழி தோண்டுகிறேன் நான்...


வெட்டப்பட்ட மண்ணின் 
அளவு கொண்டோ 
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ 
நான் புதையப் போவதில்லை 
என்னைப் புதைக்க 
நானே என்னை அமிழ்த்துவேன்...


நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக 
இருக்க முடியாத போது 
என்னை நான் 
எப்போது நேசிப்பேன்....  





நான் என்னுள்ளே 
என்னைக் கேட்கும் ஒரு கேள்வி 
என்னை எனக்குப் பிடிக்குமா


மற்றவருக்குப் பிடிப்பதும்
பிடிக்காது போதலும்
என்னைப் பொருத்தமட்டில் 
ஒரு பொருட்டே அல்ல 


என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக 
என்னை நான் தான் முதலில் 
உற்று நோக்கினேன்


எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும் 
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும் 


சீட்டுக்கட்டு கொண்டு சேர்த்த 
கோபுரமாய் நான்


சிறகுகள், வால், அலகு, 
கீறிக் கிழிக்க கோரைப் பல்லுடன் 
நழுவி ஓட என் உடலம் மூடிய 
வளுவளுக்கும் செதில்களுமாய் 
வீரியத்துடன் விரைந்து 
வெற்றிடமாய் உறைந்து போன 
மனித உருவில் நான் 


என் கோரைப்பற்களின் 
பயன்பாட்டில் என்னை நான் 
வெறுத்ததும்


வால் கொஞ்சம் ஆடியபோது 
வாழ்வும் சற்று திசை மாறியதும்...


சூறாவளியாய் சூழ்ந்து பகை 
சுழற்றிடத் துணிந்த கணத்தில் 
வளுவளுக்கும் செதில்களுடன்
வசதியாய் தப்பித்தொலைந்ததும்


கொஞ்சம் உணர ஆரம்பித்தபோது 
கையில் மண்வெட்டியுடன் 
புதைகுழி தோண்டுகிறேன் நான்...


வெட்டப்பட்ட மண்ணின் 
அளவு கொண்டோ 
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ 
நான் புதையப் போவதில்லை 
என்னைப் புதைக்க 
நானே என்னை அமிழ்த்துவேன்...


நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக 
இருக்க முடியாத போது 
என்னை நான் 
எப்போது நேசிப்பேன்....  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...