ஞாயிறு, நவம்பர் 20, 2011

அன்னை பூமியில் - அப்துல்லாஹ்


அன்னையின் மடியில் சாய்வதும் இன்பம் 
அன்னை பூமியில் வாழ்வதும் இன்பம்

ஆலைகளும் சோலைகளும் சாலைகளும் 
அழகிய மலைத்தொடர் ஆற்று நன்னீர் 
உழவுகள் பயிர்பச்சை ஓடு வேய்ந்த வீடு 
ஒட்டுத்திண்ணை ஒட்டிய உறவுகளுடன்
நல்ல பகலிலும் நடுச்சாமத்திலும் 
கூப்பிட்ட குரலுக்கு குவிந்திடும் பந்தங்கள் சூழ ...

நாட்டிலோர் வாழ்க்கை நயமுடன் வாழ
தேட்டமும் தேவையும் மனதோடு மட்டும்
திட்டமும் தீட்டி காத்திருக்கையில்
நோட்டமிடுவதும் பின்னர் வாட்டம் கொள்வதும்
வழமையாய் போன வாழ்க்கையின் கூறு 

தேனாறும் பாலாரும் தெள்ளு தமிழ் நாடெங்கும் ஓடி 
கள்ளர் பயம் கடும் விலை இத்துயர் கனவில் கூட இன்றி 
நல்லதொரு மக்களாட்சி மலர்ந்து விடும் என்றும்
நாமொரு நாள் அங்கு சென்று நலம் பெறவே நினைத்தோம்...


மாற்றம் வேண்டும் என்று மக்களெல்லாம் வாக்களித்து 
மண்ணள்ளிப் போட்டாரோ மாண்பு மிக்க தம் வாழ்வில் 
ஏற்றம் பெறவேண்டும் என எண்ணித் துணிந்ததனால் 
ஏமாற்றம் தனைக்கண்டு இழிநிலைக் காளானார்

இலவசமாய் அரிசி தந்தார் இருக்கு அது மூலையிலே 
விலை விஷம்போல் ஏறியதால் வேகவைக்க வழியின்றி
பாலும் பேருந்தும் சிட்டாய்ப் பறக்குது சிகரம் நோக்கி 
பாழாப் போன மின் இருட்டுக்கும் ஏறிப்போச்சு துட்டு 

காட்டுக் கூச்சலினி கட்டாயம் எடுபடாது 
கண்ணீரும் கவலைகளும் கைசேதம் துடைக்காது
நாட்டுக்குப் போவோம் எனும் நல்லெண்ணம் இனிவேண்டாம் 
நல்லதோ கெட்டதோ இங்கேயே இனிச் சாவோம்..


அன்னையின் மடியில் சாய்வதும் இன்பம் 
அன்னை பூமியில் வாழ்வதும் இன்பம்

ஆலைகளும் சோலைகளும் சாலைகளும் 
அழகிய மலைத்தொடர் ஆற்று நன்னீர் 
உழவுகள் பயிர்பச்சை ஓடு வேய்ந்த வீடு 
ஒட்டுத்திண்ணை ஒட்டிய உறவுகளுடன்
நல்ல பகலிலும் நடுச்சாமத்திலும் 
கூப்பிட்ட குரலுக்கு குவிந்திடும் பந்தங்கள் சூழ ...

நாட்டிலோர் வாழ்க்கை நயமுடன் வாழ
தேட்டமும் தேவையும் மனதோடு மட்டும்
திட்டமும் தீட்டி காத்திருக்கையில்
நோட்டமிடுவதும் பின்னர் வாட்டம் கொள்வதும்
வழமையாய் போன வாழ்க்கையின் கூறு 

தேனாறும் பாலாரும் தெள்ளு தமிழ் நாடெங்கும் ஓடி 
கள்ளர் பயம் கடும் விலை இத்துயர் கனவில் கூட இன்றி 
நல்லதொரு மக்களாட்சி மலர்ந்து விடும் என்றும்
நாமொரு நாள் அங்கு சென்று நலம் பெறவே நினைத்தோம்...


மாற்றம் வேண்டும் என்று மக்களெல்லாம் வாக்களித்து 
மண்ணள்ளிப் போட்டாரோ மாண்பு மிக்க தம் வாழ்வில் 
ஏற்றம் பெறவேண்டும் என எண்ணித் துணிந்ததனால் 
ஏமாற்றம் தனைக்கண்டு இழிநிலைக் காளானார்

இலவசமாய் அரிசி தந்தார் இருக்கு அது மூலையிலே 
விலை விஷம்போல் ஏறியதால் வேகவைக்க வழியின்றி
பாலும் பேருந்தும் சிட்டாய்ப் பறக்குது சிகரம் நோக்கி 
பாழாப் போன மின் இருட்டுக்கும் ஏறிப்போச்சு துட்டு 

காட்டுக் கூச்சலினி கட்டாயம் எடுபடாது 
கண்ணீரும் கவலைகளும் கைசேதம் துடைக்காது
நாட்டுக்குப் போவோம் எனும் நல்லெண்ணம் இனிவேண்டாம் 
நல்லதோ கெட்டதோ இங்கேயே இனிச் சாவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...