புதன், ஜனவரி 11, 2012

இருளோடிய உண்மைகள்



எனக்கு அந்த விளக்குகளை
பிடிக்கவில்லை
எத்தனை பிரகாசம்....
இருட்டின்  அழகை
குலைத்தது அதுதானே...
கருப்பின் கருவுக்குள்
காத்திட்ட ரகசியங்களைக்
கைநிறைய அள்ளிக்
கண்களுக்கு
காட்சியாக்கிய அந்த விளக்குகளை
வெறுக்கிறேன்.
இருள் என் ஆடையாய்
தொடமுடியாத் தனிமையாய்
என் உயிரில் கலந்த ஒரு உணர்வாய்...
என் பகல்முழுக்க கண்பூத்துக்
காத்திருத்தலில் விளைந்த
எனக்கான தோழியாய்
பறவைகளின் விலங்குகளின்
போர்த்தித் துயில் காக்கும்
போர்வையாய்
கிசுகிசுப்புகளின் மொட்டுக்களை
மலரவிடாது மனசோடு
மனசாய் மாறிப்போன
அவற்றின் புறத்தை
வெள்ளையாக்க வந்த
விளக்குகளை
விட்டு நானும் விலகுகிறேன்...

நான் இருளோடு
அதன்இரவோடு
அவற்றின்
கைமூடிய ரகசியங்களோடு
ரகசியங்களில்
காதல் மிகக் கொள்பவன்..

உனது வீச்சை விவரிக்க
விழாக்காலங்களில்
இரவின் இருட்டாடையை
விளக்குக் கத்தியால்
கிழித்துச் சிதைப்பதும்
சரவிளக்குகலால் சட்டையிடுவதும்  
உன் ஒளியாட்சியின்
ஆளுமையை என்னிடம் காட்டினாலும்

நான் ஒளிந்து நின்று
கருப்போடு கருப்பை காதலிக்கிறேன்
எனக்கான இரவுகளை
என்னோடு உயிர்த்து
என்னோடு மரணிக்கவும்
ஆசைப் படுகிறேன்...

நான் என் இருட்டை
நேசிப்பதால் என்னவனே!
நீ என்னை அலங்கரிக்கச் சொல்கையில்
என் இயல்பை
என் உண்மையை
என்னை
உனக்காக பூச்சுக்களாலும்
பொய்ச் சிரிப்புகளாலும்
அந்த விளக்குகளால் தனையிழந்த இருளைப் போல்
என்னையும்  
உன்னிலிருந்து நான் இழந்து போனேன்
உண்மையில் நான் இறந்து போனேன்......


எனக்கு அந்த விளக்குகளை
பிடிக்கவில்லை
எத்தனை பிரகாசம்....
இருட்டின்  அழகை
குலைத்தது அதுதானே...
கருப்பின் கருவுக்குள்
காத்திட்ட ரகசியங்களைக்
கைநிறைய அள்ளிக்
கண்களுக்கு
காட்சியாக்கிய அந்த விளக்குகளை
வெறுக்கிறேன்.
இருள் என் ஆடையாய்
தொடமுடியாத் தனிமையாய்
என் உயிரில் கலந்த ஒரு உணர்வாய்...
என் பகல்முழுக்க கண்பூத்துக்
காத்திருத்தலில் விளைந்த
எனக்கான தோழியாய்
பறவைகளின் விலங்குகளின்
போர்த்தித் துயில் காக்கும்
போர்வையாய்
கிசுகிசுப்புகளின் மொட்டுக்களை
மலரவிடாது மனசோடு
மனசாய் மாறிப்போன
அவற்றின் புறத்தை
வெள்ளையாக்க வந்த
விளக்குகளை
விட்டு நானும் விலகுகிறேன்...

நான் இருளோடு
அதன்இரவோடு
அவற்றின்
கைமூடிய ரகசியங்களோடு
ரகசியங்களில்
காதல் மிகக் கொள்பவன்..

உனது வீச்சை விவரிக்க
விழாக்காலங்களில்
இரவின் இருட்டாடையை
விளக்குக் கத்தியால்
கிழித்துச் சிதைப்பதும்
சரவிளக்குகலால் சட்டையிடுவதும்  
உன் ஒளியாட்சியின்
ஆளுமையை என்னிடம் காட்டினாலும்

நான் ஒளிந்து நின்று
கருப்போடு கருப்பை காதலிக்கிறேன்
எனக்கான இரவுகளை
என்னோடு உயிர்த்து
என்னோடு மரணிக்கவும்
ஆசைப் படுகிறேன்...

நான் என் இருட்டை
நேசிப்பதால் என்னவனே!
நீ என்னை அலங்கரிக்கச் சொல்கையில்
என் இயல்பை
என் உண்மையை
என்னை
உனக்காக பூச்சுக்களாலும்
பொய்ச் சிரிப்புகளாலும்
அந்த விளக்குகளால் தனையிழந்த இருளைப் போல்
என்னையும்  
உன்னிலிருந்து நான் இழந்து போனேன்
உண்மையில் நான் இறந்து போனேன்......

மயக்கத்தில் அது.....


மதியினை நழுவவிட்டு மனசில் சூழ்ந்த
விரகத்தின் கனல் நிரம்பிய
மயக்கம் பீடித்த அந்த மர்ம நாழிகையின்
மணிக்கட்டைப் பிடித்து
மறுபடி மறுபடிக் கேட்டான்
மனசும் மங்கையும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பேதையின் போதையில்
புலன்களை மறந்து
புருவ வில்லினின்று புரவியாய் பாயும்
பார்வைக்கணையில் தப்பிய
பாவையவள் விழியம்புக்காயங்களுடன்
மேனி நடுங்க மேலும் மேலும்
மேவினான் காதலும் காமமும் ஒன்றா....
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

உடல மடல்களில் வழியும்
வியர்வையை கசகசப்பை
விரகம் நீராய்ச்சூழ்ந்தவனை  
விரவிப்பரவி வியாபிக்க
சுவாசம்தன்னில் சுருட்டிய அவனும்
சுருண்டு படுத்து சுகத்தை உடுத்தி
சுற்றம் தொலைத்து வழியிலும் வெளியிலும்
அலையும் தன்னை
உடலம் இழந்த வேற்றாய் காற்றாய்
காணவியலாக் கருப்பாய் களித்தவன்  
கண்மலர் சுருக்கிக் காதருகே
கிசுகிசுப்பாய் கேட்டான்
மதுவும் மாதும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பதில் பிறந்தது
மழை நனைத்த நிலமும்
மரத்தை நனைத்த நிலவும்
மதியை விரட்டும் இன்பமும்
மனசை வென்ற அவளும்....
நிலவும் நிலமும் தருவும்
அவளும் இன்பமும் மறுபடி மறுபடி 
நனைவதும் நனைப்பதும்
அது அதுவாய் அதனால் தான்...



மதியினை நழுவவிட்டு மனசில் சூழ்ந்த
விரகத்தின் கனல் நிரம்பிய
மயக்கம் பீடித்த அந்த மர்ம நாழிகையின்
மணிக்கட்டைப் பிடித்து
மறுபடி மறுபடிக் கேட்டான்
மனசும் மங்கையும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பேதையின் போதையில்
புலன்களை மறந்து
புருவ வில்லினின்று புரவியாய் பாயும்
பார்வைக்கணையில் தப்பிய
பாவையவள் விழியம்புக்காயங்களுடன்
மேனி நடுங்க மேலும் மேலும்
மேவினான் காதலும் காமமும் ஒன்றா....
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

உடல மடல்களில் வழியும்
வியர்வையை கசகசப்பை
விரகம் நீராய்ச்சூழ்ந்தவனை  
விரவிப்பரவி வியாபிக்க
சுவாசம்தன்னில் சுருட்டிய அவனும்
சுருண்டு படுத்து சுகத்தை உடுத்தி
சுற்றம் தொலைத்து வழியிலும் வெளியிலும்
அலையும் தன்னை
உடலம் இழந்த வேற்றாய் காற்றாய்
காணவியலாக் கருப்பாய் களித்தவன்  
கண்மலர் சுருக்கிக் காதருகே
கிசுகிசுப்பாய் கேட்டான்
மதுவும் மாதும் ஒன்றா...
மனசோடு விதைத்த வினா
மறுகி மீண்டும் அவனுள் சென்று
மறுபடி மறுபடி முடங்க...

பதில் பிறந்தது
மழை நனைத்த நிலமும்
மரத்தை நனைத்த நிலவும்
மதியை விரட்டும் இன்பமும்
மனசை வென்ற அவளும்....
நிலவும் நிலமும் தருவும்
அவளும் இன்பமும் மறுபடி மறுபடி 
நனைவதும் நனைப்பதும்
அது அதுவாய் அதனால் தான்...


திங்கள், ஜனவரி 09, 2012

மழலைப் புழுக்கள்


ஏற்றங்கள் தம்மோடு இறக்கத்தையும் சுமந்து
இல்லாமை இருளோடு இப்புவியும் தவிக்குதம்மா

தோற்றங்கள் புதிதான மாற்றங்கள் காட்டிடினும்
தோற்றுத்தான் நிற்கின்றோம் துன்பங்கள் தீரவில்லை

செல்வக் குடிகளிலோ சேய்களோடு சுகபோகம்
செங்கல் சுமக்கும் ஏழைக் (இ)கிருளோடு சகவாசம்

விதைப்பெட்டி நிறைய விஞ்ஞானம் அள்ளினோம்
விண்ணில் கால்பதித்து விதைத்தோம் விரவச்செய்தோம்

வீடெங்கும் காட்சிகளாய் பிரபஞ்சம் அடக்கிட்டோம்
வீதியெங்கும் சாட்சிகளாய் சகமனிதம் சாவுதய்யா...

மண்ணில் மானுடம் மலைமுகட்டின் உச்சிதொட்டோம்
மண்வீடும் இல்லாது மழலைகளை மடியவிட்டோம்

கட்டிலிலே கண்ணயர்ந்து ஒருகூட்டம் சுகிக்கையிலே
பட்டினிப் பாவங்களோ பார்முழுதும் அலையுதம்மா....

எழுச்சிகளோடு ஏலம்போகும் இவர்கள்தம் புவிவாழ்வு
இழிந்தும் இழந்தும் இன்னல்பட வாடுவதோ...

மும்மாரி பெய்திடினும் முப்போகம் ஈட்டிடினும்
மூழ்கிவிட்ட கப்பலைப்போல் இவர்உலகம் ஆனதென்ன

கட்டுமானக்கலையில் நாம் கடல்தாண்டி வென்றாலும்
கழிப்பறையில் குடியிருக்கும்  கடினவாழ்வு தீர்வதெப்போ...

அவலந்தான் மாறாதா இந்தஅகிலந்தான் உணராதா
ஆறடி உடலத்தில் அறையடிதானே அடி(உ)யுதரம்
சாவடி அடிக்குதம்மா சக்கையாக்கி பிழியுதம்மா
சாக்கடை தான் போக்கிடமா சரீரத்தை சாய்ப்பதற்க்கு
சங்கடங்கள் தீராது நம் சத்தமொன்றும் ஒலிக்காது
சகோதரக் கண்மணியே சகித்து வாழப் பழகிவிடு...



ஏற்றங்கள் தம்மோடு இறக்கத்தையும் சுமந்து
இல்லாமை இருளோடு இப்புவியும் தவிக்குதம்மா

தோற்றங்கள் புதிதான மாற்றங்கள் காட்டிடினும்
தோற்றுத்தான் நிற்கின்றோம் துன்பங்கள் தீரவில்லை

செல்வக் குடிகளிலோ சேய்களோடு சுகபோகம்
செங்கல் சுமக்கும் ஏழைக் (இ)கிருளோடு சகவாசம்

விதைப்பெட்டி நிறைய விஞ்ஞானம் அள்ளினோம்
விண்ணில் கால்பதித்து விதைத்தோம் விரவச்செய்தோம்

வீடெங்கும் காட்சிகளாய் பிரபஞ்சம் அடக்கிட்டோம்
வீதியெங்கும் சாட்சிகளாய் சகமனிதம் சாவுதய்யா...

மண்ணில் மானுடம் மலைமுகட்டின் உச்சிதொட்டோம்
மண்வீடும் இல்லாது மழலைகளை மடியவிட்டோம்

கட்டிலிலே கண்ணயர்ந்து ஒருகூட்டம் சுகிக்கையிலே
பட்டினிப் பாவங்களோ பார்முழுதும் அலையுதம்மா....

எழுச்சிகளோடு ஏலம்போகும் இவர்கள்தம் புவிவாழ்வு
இழிந்தும் இழந்தும் இன்னல்பட வாடுவதோ...

மும்மாரி பெய்திடினும் முப்போகம் ஈட்டிடினும்
மூழ்கிவிட்ட கப்பலைப்போல் இவர்உலகம் ஆனதென்ன

கட்டுமானக்கலையில் நாம் கடல்தாண்டி வென்றாலும்
கழிப்பறையில் குடியிருக்கும்  கடினவாழ்வு தீர்வதெப்போ...

அவலந்தான் மாறாதா இந்தஅகிலந்தான் உணராதா
ஆறடி உடலத்தில் அறையடிதானே அடி(உ)யுதரம்
சாவடி அடிக்குதம்மா சக்கையாக்கி பிழியுதம்மா
சாக்கடை தான் போக்கிடமா சரீரத்தை சாய்ப்பதற்க்கு
சங்கடங்கள் தீராது நம் சத்தமொன்றும் ஒலிக்காது
சகோதரக் கண்மணியே சகித்து வாழப் பழகிவிடு...


ஞாயிறு, டிசம்பர் 25, 2011

பாதைகள்



பாதைகள் பயணத்தின் நடுவுகள்
பாதைகளை கொண்டே
பயணங்கள் அமையும்
ஆயினும்
அவை ஒரு போதும்
பயணிப்பதில்லை
நிச்சயமாய்
பாதைகளைக்கழித்து
பயணங்களுமில்லை

பாதைகள் தான்
பயணங்களின் இலக்குகள்
அவற்றின் நீளங்களும் தூரங்களும்
சூழ்ந்த மரங்களும் மாமலைகளும்
சுழித்தோடும் ஆறுகளும் அருவிகளும்
உடன் வருகையில்
அவற்றுக்கு மதிப்பை தருவன

பாதைகள்
பயணங்களின் வேற்றுமைகள்
ஊரோடும் நீரோடும்
நிலத்தோடும் வளியோடும்
நிரந்து நிலைத்தவை அவை .....

பாதைகள்
பயணங்களின் குடுவைகள்
அவற்றின் கழுத்தளவு வரை
ரண நிகழ்வுகளும்
ரத்தம் சிந்திய சிலிர்ப்புகளும்
மயங்கவைக்கும் மகிழ்வுகளும்
மலைக்க வைக்கும்
மரணங்களுமாய்

பாதைகள்
உருக்குலைந்த உடல்களின்
சிதறிய நிணங்களின்
சொல்லாமல் பிரிந்த உயிர்களின்
கடைசி நேர தலை சாய் மடிகள்
ஆங்கு
அவை மட்டுமே பிரிவோரின்
இறுதி நேர நெஞ்சிடிப்பை
உணர்பவைகள்....

மரித்தவர்களையும் அவர்களை
மடியேநதிக் காக்க வரும்
மனிதர்களையும் அவர்தம்
சிதைந்த கனவுகள்
சிதறிய உறவுகளையும்
கண்ணிமைக்காமல்
பார்த்து கலங்கி நிற்பவை....

பாதைகள்
நிறம் சூடி நிலை குலையாது
இரு கதவுகளை மட்டுமே
தம்முடன் வைத்துக் கொள்பவை
ஒன்றில் நீ தொடங்கையில்
மற்றொன்றில் நீ நிச்சயம்
விடை பெற்றே தீர வேண்டி...

பாதைகள்
நீ விடை பெறும் வரை
அவை உன்னிடமிருந்து
விடை பெறுவதில்லை....




பாதைகள் பயணத்தின் நடுவுகள்
பாதைகளை கொண்டே
பயணங்கள் அமையும்
ஆயினும்
அவை ஒரு போதும்
பயணிப்பதில்லை
நிச்சயமாய்
பாதைகளைக்கழித்து
பயணங்களுமில்லை

பாதைகள் தான்
பயணங்களின் இலக்குகள்
அவற்றின் நீளங்களும் தூரங்களும்
சூழ்ந்த மரங்களும் மாமலைகளும்
சுழித்தோடும் ஆறுகளும் அருவிகளும்
உடன் வருகையில்
அவற்றுக்கு மதிப்பை தருவன

பாதைகள்
பயணங்களின் வேற்றுமைகள்
ஊரோடும் நீரோடும்
நிலத்தோடும் வளியோடும்
நிரந்து நிலைத்தவை அவை .....

பாதைகள்
பயணங்களின் குடுவைகள்
அவற்றின் கழுத்தளவு வரை
ரண நிகழ்வுகளும்
ரத்தம் சிந்திய சிலிர்ப்புகளும்
மயங்கவைக்கும் மகிழ்வுகளும்
மலைக்க வைக்கும்
மரணங்களுமாய்

பாதைகள்
உருக்குலைந்த உடல்களின்
சிதறிய நிணங்களின்
சொல்லாமல் பிரிந்த உயிர்களின்
கடைசி நேர தலை சாய் மடிகள்
ஆங்கு
அவை மட்டுமே பிரிவோரின்
இறுதி நேர நெஞ்சிடிப்பை
உணர்பவைகள்....

மரித்தவர்களையும் அவர்களை
மடியேநதிக் காக்க வரும்
மனிதர்களையும் அவர்தம்
சிதைந்த கனவுகள்
சிதறிய உறவுகளையும்
கண்ணிமைக்காமல்
பார்த்து கலங்கி நிற்பவை....

பாதைகள்
நிறம் சூடி நிலை குலையாது
இரு கதவுகளை மட்டுமே
தம்முடன் வைத்துக் கொள்பவை
ஒன்றில் நீ தொடங்கையில்
மற்றொன்றில் நீ நிச்சயம்
விடை பெற்றே தீர வேண்டி...

பாதைகள்
நீ விடை பெறும் வரை
அவை உன்னிடமிருந்து
விடை பெறுவதில்லை....


விட்டில் பூச்சிகள்


விரகமென்னும் திரியின் சுடர்
விரிந்து நின்ற போதிலே - அந்த
நரகமதன் நாசம் காண
நர உயிர்கள் நாடுதே

விறகு போல எரித்து நம்மை
சிறகொடித்து வீழ்த்துதே -அம்
மலர் விரித்த மஞ்சத்தில் 
மதியிழப்பே மிஞ்சுதே

பாலருந்திப் பழம்சுவைக்கப்
பருவம் மட்டும் வெல்லுதே 
பாவையவள் பார்வை பட்டு 
பெற்ற பாசம்வடியுதே

மங்கையவள் சரணம் என
மற்றதெலாம் மறக்குதே

குற்றமிலா கொற்றவனின் 
கற்றகல்வி காற்றிலே
பெற்றவளின் முன்னிலையில் 
உற்றவள் கொடி பறக்குதே 

கன்னியவள் கைப்பிடியில்
கைசேதம் தொடரும் 
காலம் இனிக கழித்திடவே
கட்டில் கதையும் வளரும்

விட்டில் மோதி வீழ்வது போல்
வீணில் காலம் கழியும் 
விரகம் வசம் வீழ்ந்த அவன் 
நரகம் சூழந்த வாழ்வும்...





விரகமென்னும் திரியின் சுடர்
விரிந்து நின்ற போதிலே - அந்த
நரகமதன் நாசம் காண
நர உயிர்கள் நாடுதே

விறகு போல எரித்து நம்மை
சிறகொடித்து வீழ்த்துதே -அம்
மலர் விரித்த மஞ்சத்தில் 
மதியிழப்பே மிஞ்சுதே

பாலருந்திப் பழம்சுவைக்கப்
பருவம் மட்டும் வெல்லுதே 
பாவையவள் பார்வை பட்டு 
பெற்ற பாசம்வடியுதே

மங்கையவள் சரணம் என
மற்றதெலாம் மறக்குதே

குற்றமிலா கொற்றவனின் 
கற்றகல்வி காற்றிலே
பெற்றவளின் முன்னிலையில் 
உற்றவள் கொடி பறக்குதே 

கன்னியவள் கைப்பிடியில்
கைசேதம் தொடரும் 
காலம் இனிக கழித்திடவே
கட்டில் கதையும் வளரும்

விட்டில் மோதி வீழ்வது போல்
வீணில் காலம் கழியும் 
விரகம் வசம் வீழ்ந்த அவன் 
நரகம் சூழந்த வாழ்வும்...




புதன், டிசம்பர் 21, 2011

பெண் அடிமை




பெண்ணடிமை....
பெண்சுதந்திரம்....
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிய
விந்தை மனிதர்களை சாடி
கவிஞனின் அறைகூவல்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே! மாதர் சங்கங்கள்..
ஆணுக்குப் பெண்
சரிநிகர் சமானமே
இனி அடிமைப்படுத்த
விட மாட்டோம்
நாங்கள் விழித்துக் கொண்டோம்.
ஆங்காங்கே பேரணிகள்...
ஆமாம் இவர்களெல்லாம்  
யாருக்கு அடிமைகள்...

ஐயாயிரம் ரூபாய்க்கும் மேல்
அகலச் சரிகைப் பட்டு
ஆடைகளும்

ஓடி ஓடி வாங்கிக் குவிக்கும்
ஒப்பனைப் பொருட்களென்று
மைகளும் மஸ்காராக்களும்

மலை போல விலைஉயர்ந்தும்
மயங்கியே வாங்கி அணியும்
மாசற்ற பொன்னும் மணியும்



மதிமறந்து உறவாய்ச் சேர்த்த
தொலைகாட்சியும்
தொடர்காட்சிகளும்
உலகோ டுனை அடிமையாக்கி
விலங்கிட்டு வீழ்த்த
வேட்டைக்கு இலக்கான நீயோ...

தாயாகவும் தாரமாகவும்
தமக்கையாகவும் தன் மகளாகவும்
உன் அன்புக்கும் காதலுக்கும்
பாசத்துக்கும் அடிமைப்பட்ட
ஆடவர் எம்மிடம்
விடுதலை கேட்டு
வீதிக்கு வருகிறாய்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே!
ஆடவரும் கேட்கின்றோம்
விலங்கொடித்து வருவாயா....
வீதிக்கு நம் குடும்பம்
வரு முன்னர் தடுப்பாயா...




பெண்ணடிமை....
பெண்சுதந்திரம்....
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிய
விந்தை மனிதர்களை சாடி
கவிஞனின் அறைகூவல்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே! மாதர் சங்கங்கள்..
ஆணுக்குப் பெண்
சரிநிகர் சமானமே
இனி அடிமைப்படுத்த
விட மாட்டோம்
நாங்கள் விழித்துக் கொண்டோம்.
ஆங்காங்கே பேரணிகள்...
ஆமாம் இவர்களெல்லாம்  
யாருக்கு அடிமைகள்...

ஐயாயிரம் ரூபாய்க்கும் மேல்
அகலச் சரிகைப் பட்டு
ஆடைகளும்

ஓடி ஓடி வாங்கிக் குவிக்கும்
ஒப்பனைப் பொருட்களென்று
மைகளும் மஸ்காராக்களும்

மலை போல விலைஉயர்ந்தும்
மயங்கியே வாங்கி அணியும்
மாசற்ற பொன்னும் மணியும்



மதிமறந்து உறவாய்ச் சேர்த்த
தொலைகாட்சியும்
தொடர்காட்சிகளும்
உலகோ டுனை அடிமையாக்கி
விலங்கிட்டு வீழ்த்த
வேட்டைக்கு இலக்கான நீயோ...

தாயாகவும் தாரமாகவும்
தமக்கையாகவும் தன் மகளாகவும்
உன் அன்புக்கும் காதலுக்கும்
பாசத்துக்கும் அடிமைப்பட்ட
ஆடவர் எம்மிடம்
விடுதலை கேட்டு
வீதிக்கு வருகிறாய்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே!
ஆடவரும் கேட்கின்றோம்
விலங்கொடித்து வருவாயா....
வீதிக்கு நம் குடும்பம்
வரு முன்னர் தடுப்பாயா...

வெள்ளி, டிசம்பர் 16, 2011

கொடுக்கல் வாங்கல் இதயம் வழி...



பிரார்த்தனைகள்
மனசு சம்பந்தப்பட்டவை
கேட்பவனுக்கும் 
கொடுப்பவனுக்கும் 
இடையில் மட்டுமே 
நிகழும் வியாபாரம் இது...

கேட்பதைக் கண்டு 
இறைவனும் 
கொடுப்பதைக் கொண்டு
மனிதனும் 
மகிழ்கின்றனர்...
 
கேட்டலும்
கொடுத்தலும் 
படைப்பில் அந்தரங்கம்...

சூத்திரம் இதனை சுற்றியே  
சுழல்கிறது இந்த 
சுற்றும் மானுட அரங்கம் ...

வையகத்தில் தத்தமது
உன்னத நிலையை
வேண்டுதலிலும் 
வழங்குதலிலும் 
நிலைப்படுத்துகின்றனர்.......

கற்றறிந்த மேதைகளும் 
பட்டறிந்த ஞானிகளும்
பரம்பொருளின் உள்ளமையை 
பாருக்குச் சொன்னார்கள்
பயனுற வாழ்ந்தார்கள் 
படைத்தவனைப் புகழ்ந்தார்கள்
பாதத்தில் முள் தைத்தாலும் 
பரம்பொருளிடமே 
பதறி உருகி உறைந்தார்கள்....

பிரார்த்தனைகள் எனும் 
சுமைதாங்கி கற்களில் நம் 
சோகங்களை 
சுலபமாக இறக்கி வைப்பதால் 
சுழலும் இப்பூமியில் நாம் 
சுகம் பெற வாழ்கிறோம்....

காலம் முழுவதும் 
கைப்படம் மலர்த்தி 
கேட்டுப் பிரார்த்திக்க 
கர்த்தாவின் முன்னில் 
கைகட்டி நிற்கையிலே

ஐயகோ எந்தன்  
கண்கள் ஒன்றை நோக்க
கருத்தும் அதன் வழியில்...

காதுகளில் உரசும் 
கானங்களின் இசையும் 
கல்பின் கதவைக்
கொஞ்சம் திறக்க...

கடிதொரு வாசனை நாசியில் 
கொண்டு கடிவாளமில்லா
குதிரை போல உள்ளம் 
காற்றின் திசைகளில் 
காரணனை மறந்து....

நான் நின்றும், குனிந்தும், 
நெற்றியை குத்தி 
நெடுஞ்ஜாண் கிடையாய்
நான் செய்யும் அவற்றின் பெயர்
பிரார்த்தனைகளா...



பிரார்த்தனைகள்
மனசு சம்பந்தப்பட்டவை
கேட்பவனுக்கும் 
கொடுப்பவனுக்கும் 
இடையில் மட்டுமே 
நிகழும் வியாபாரம் இது...

கேட்பதைக் கண்டு 
இறைவனும் 
கொடுப்பதைக் கொண்டு
மனிதனும் 
மகிழ்கின்றனர்...
 
கேட்டலும்
கொடுத்தலும் 
படைப்பில் அந்தரங்கம்...

சூத்திரம் இதனை சுற்றியே  
சுழல்கிறது இந்த 
சுற்றும் மானுட அரங்கம் ...

வையகத்தில் தத்தமது
உன்னத நிலையை
வேண்டுதலிலும் 
வழங்குதலிலும் 
நிலைப்படுத்துகின்றனர்.......

கற்றறிந்த மேதைகளும் 
பட்டறிந்த ஞானிகளும்
பரம்பொருளின் உள்ளமையை 
பாருக்குச் சொன்னார்கள்
பயனுற வாழ்ந்தார்கள் 
படைத்தவனைப் புகழ்ந்தார்கள்
பாதத்தில் முள் தைத்தாலும் 
பரம்பொருளிடமே 
பதறி உருகி உறைந்தார்கள்....

பிரார்த்தனைகள் எனும் 
சுமைதாங்கி கற்களில் நம் 
சோகங்களை 
சுலபமாக இறக்கி வைப்பதால் 
சுழலும் இப்பூமியில் நாம் 
சுகம் பெற வாழ்கிறோம்....

காலம் முழுவதும் 
கைப்படம் மலர்த்தி 
கேட்டுப் பிரார்த்திக்க 
கர்த்தாவின் முன்னில் 
கைகட்டி நிற்கையிலே

ஐயகோ எந்தன்  
கண்கள் ஒன்றை நோக்க
கருத்தும் அதன் வழியில்...

காதுகளில் உரசும் 
கானங்களின் இசையும் 
கல்பின் கதவைக்
கொஞ்சம் திறக்க...

கடிதொரு வாசனை நாசியில் 
கொண்டு கடிவாளமில்லா
குதிரை போல உள்ளம் 
காற்றின் திசைகளில் 
காரணனை மறந்து....

நான் நின்றும், குனிந்தும், 
நெற்றியை குத்தி 
நெடுஞ்ஜாண் கிடையாய்
நான் செய்யும் அவற்றின் பெயர்
பிரார்த்தனைகளா...

Related Posts Plugin for WordPress, Blogger...